Sunday 6 February 2011

மழை எதிர்ப்புக் கவிதை.

(அண்மையில் கிழக்கிலங்கையில் மழை காரணாமாய் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் நான் வடித்தது)

வறண்டு போன நிலங்களும்
புழுதி படிந்த தெருக்களும்
கனவாகிப் போன காலமாகுமோ.

நின்னில் காரிருள் கலைந்து
மீண்டும் உன்னழகு திரும்புமோ.

கிழக்கே,
சூட்டில் சுகம் கண்ட எமதுடல்கள்,
நடுங்கிச் சுருங்கிப் போயினவே.

செம்மண் பெருமை
சேற்றுச் சகதியாய் காலில் ஒட்டுதே.

வீரம் கொண்டு முறுக்கிய
மீசை நுனியில் பனித்துளி படருதே.

குளிரே வேண்டாமே...
முப்பது டிகிரியில் உன் கருணை அனுப்பேன்...