Sunday 25 December 2011

முன்னூற்றி நாற்பத்தொன்பது

ஹேய் நீ...
ஆமா உன்னைத்தான்...
எப்படி இருக்கிறாய்? டூ யூ ரிமேம்பர் மீ? ஹிஹி... அதெப்படி மறந்துவிட முடியும்? நாம்தான் ஒருவரை ஒருவர் லவ் பண்ணித் தொலைத்தோமே. ஹேய் வெயிட். லவ்... பண்ணினோமா? பண்ணினேன். ரைட்? நான் மட்டும்தானே?
நோ... நோ, நோ, நோ...
அதெப்படியோ தெரியல? எல்லாப் பொண்ணுங்களாலயும் எப்பிடித்தான் முடியுதோ? ஒரு விஷயத்தை பண்ணிட்டு அது மாதிரி ஒண்ணு நடந்ததாவே காட்டிக்காம இருக்கறதுக்கு... ரீசனே இல்லாம சண்டை போடுறதுக்கு... நீங்களே தப்பு பண்ணினாலும் எங்களை மன்னிப்பு கேக்க வைப்பதற்கு... புரியல...
பொண்ணுங்க மனசு ஆழம்னு சொல்றது பொய்'னு நெனச்சி இருக்கேன். ஆனா, அன்னிக்கு புரிஞ்சிச்சு. உன் மனசுல நான் இல்லைன்னு நீ தூக்கி எறிஞ்சிட்டு போனப்போ விளங்கிச்சு. பைத்தியம் புடிச்சிச்சு.
உனக்கு ஞாபகம் இருக்கா? உன் கால்ல விழாத குறையாய் கெஞ்சினேன். மே பீ, உன் பிசி வேர்க்ஸ்'ல நீ மறந்திருப்பே. இல்ல, உனக்கு விளங்கியும் விளங்காதமாதிரி இருந்திருப்பே. நோ ப்ராப்ளம். ஆனா... வலிக்குதுடி...
நீங்க எல்லாரும் பெரியவங்கதான். உங்க கால்தூசிக்கு கூட நான் சமமாக மாட்டேன்தான். ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சிக்கோங்க, நீங்க நொந்து போய் இருந்த டைம்ல அட்லீஸ்ட் உங்க கண்ணீரை துடைச்சு வச்சிருக்கேன். ஏதோ என்னால முடிஞ்சது. நீங்க கேக்கலாம், "அதுக்காக லவ் பண்ணனுமா?"எண்டு. வாஸ்தவம்தான், கால்ல போடுற செருப்ப தலைல கிரீடமா வைக்க முடியாதுதான். ஆனா இந்த செருப்புதான் கிரீடத்தை விட பல மோசமான விஷயங்களில் இருந்து உங்களை காப்பாற்றி இருக்கு.
சரி விடுங்க. லவ் பத்தி பேச வந்துட்டு ஏதோ தத்துவம் எல்லாம் பேசிட்டு இருக்கேன். எதிர்த்த வீட்டு மாமி, என் அம்மாட்ட சொல்றாங்க, ஒரு நல்ல சைக்கோ டாக்டரிடம் காட்ட சொல்லி. ஹஹா, சைக்கோ டாக்டர்.
சரி விடுங்க. நான் இதெல்லாம் சொல்லி நீங்க மனசு மாறப் போறதுமில்ல. எனக்கு அது தேவையும் இல்ல.
சரி இந்த லெட்டருக்கு ஏன் "முன்னூற்றி நாற்பத்தொன்பது" என்று பேரு வச்சி இருக்கேன்னு நீங்க கேக்கலாம். பெருசா ஸ்பெஷல் ஒண்ணும் இல்ல. இது ஒரு முதன்மை எண் (ப்ரைம் நம்பர்). மேலும், அடுத்தடுத்து வரும் மூன்று முதன்மை எண்களின் கூட்டுத்தொகையாகவும் வரும் (109 + 113 + 127).


அப்புறம், உன்னைப் பார்த்த முன்னூற்றி நாற்பத்தொன்பதாவது நாள்.

அவ்ளோதான்.


பலன்ஸ் அடுத்த லெட்டர்ல எழுதறேன். 
டேக் கெயார்.
பாய்.



Sunday 18 December 2011

மொக்கையாய் ஒரு காதல் கவிதை

நீ உதிர்த்த புன்னகைகள்
பனித்துளிகளாய்
மனதை செய்திடும் ஈரம்
உன் பார்வைகள்
மின்னலென பாய்ந்து
குத்திக் கிழித்திடும்

கிழிக்கப்பட்ட மனதின்
சுவர்களின் வழியே
வண்ணமயமாய் பறந்து
என் முகம் மொய்க்கும்
பட்டாம் பூச்சிகள்

என் முகம் பார்த்து சிரித்து
பின் வான் பார்த்து
நீ கண் சிமிட்டும்
கணத்தில் வந்துவிடுகிறது மழை.

உன் அருகில்
வரும் செக்கனில்
எகிறுது ஹார்ட்பீட்,
கையும் களவுமாய்
பிடிபட்டாற் போல்
வியர்க்குது குப்பென.

கஞ்சா அடிக்காமலேயே
வானில் பறக்கிறேன்
உன் ஞாபகம் வருகையிலே.
தண்ணி தெளிக்காமலே
மப்பு கலைகிறது
உனை நினைக்க மறக்கையிலே

என்னோடு நீ பேசும்
ஒவ்வொரு நிமிடமும்
டீயில் தோய்த்து எடுத்த
பிஸ்கட் போல்
இளகுது நெஞ்சம்

உன்னைப் பற்றி
நான் எழுதும் கவிதை
படித்த அம்மா
மெண்டல் ஆஸ்பத்திரிக்கு
போடுகிறார் கால் மேல் கால்...



Friday 16 December 2011

ஓய்ந்து போன ஊஞ்சல்

ஊஞ்சலை ஆட்டிவிட்டால் கொஞ்ச நேரம் வேகமாக ஆடி, அதன் பின் வேகம் குறைந்து ஒரு கட்டத்தில், புவியீர்ப்பின் ஆர்முடுகலில் பிழைக்கத் தெரியாது ஓய்வுக்கு வரும். இடப்பட்ட நேரத்தில், யார் யாரோ வருவார், ஏறி அமர்வார். தம் விருப்பத்திற்கு ஏற்ப வேகமாய் ஆட்டுவார். விரும்பியவரை அருகில் ஏற்றிக் கொள்வார். முன்னோக்கியும், அகலவாக்கிலும் அமர்ந்து ஆடுவார். எது எப்படியோ யாரும் ஊஞ்சலில் நிரந்தரமில்லை. ஒரு கணத்தில் ஊஞ்சலும் நிரந்தரமில்லை. காலங்கள் வேகமாய் நகர என் கண் முன்னே நான் ஏறி, வேகமாய் ஆடி, அம்மாவைக் கூப்பிட்டு 'ப்ளைட் ஒட்டுகிறேன் பார்' என்று சொன்ன ஊஞ்சல் கழற்றப்பட்டு கொஞ்ச நாள் ஸ்டோர் ரூமில் போடப்பட்டு பின்பு பழைய சாமான்கள் வாங்கும் வியாபாரியால் ஒரு ட்ரெக்ட்டர்'இல் எடுத்துச் செல்லப்பட்டது.

சரியாக ஆறு நாட்கள் முன் ஒரு காலை வேளையில் செல்போன் அலறவும், எடுத்துப் பார்த்தேன். சி.எல்.ஐ. உம்மாவின் நம்பர் காட்டியது. பொதுவாக காலை நேரங்களில் உம்மாவிடம் இருந்து கோல் வந்தால் ஏதும் முக்கியமான செய்தியாகவே இருக்கும். ஆன்சர் செய்தேன்.

"மூத்தம்மாக்கு உடம்பு சரி இல்லை."

 [இங்கு மூத்தம்மா எனப்படுவது எனது கொள்ளுப்பாட்டியை. அதாவது பாட்டியின் அம்மாவை, அல்லது மூத்தம்மாவின் உம்மாவை. நான் எனது மூத்தம்மாவை/பாட்டியை 'மத்தம்மா' என்று அழைப்பதால் கொள்ளுப்பாட்டிக்கு 'மூத்தம்மா' என்ற உறவுப் பெயர் நிலைத்திருந்தது. இது போல இன்னும் குழப்பகரமான உறவுப் பெயர்கள் என் குடும்பத்தில் இருப்பதால் இதைப்பற்றி ஒரு விளக்கப் புத்தகம் எழுதலாம் என்றிருக்கிறேன்]

"ஏன்? என்னாச்சு?"
"திடீர் எண்டு சுகம் இல்லாம போச்சு."
"சரி நான் வரணுமா?"
"வந்தா நல்லம்தான். நான் பாத்துட்டு சொல்றன்"
"சரி"

வீட்டில் என்ன நடந்தாலும் உடனே சொல்லிவிடுவது உம்மாவின் வழக்கம்.

அன்றைய நாள் கொஞ்சம் வித்தியாசமான உணர்வாக இருக்கவே மீண்டும் அடுத்த நாள் உம்மாவிட்கு கோல் போட்டேன். மூத்தம்மாவிட்கு சளி இருப்பதால் வருத்தம் அதிகமாக இருப்பதாகவும், சிலர் இது அவரது கடைசிக் கணங்களாக இருக்கக் கூடும் என்று சொல்வதாகவும், விஷயம் பரவி உறவுகள் பார்க்க வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார். புறப்பட்டு வருவது நல்லம் என்றார்.

அடித்துப் புடித்து செவ்வாய் இரவு வந்து சேர்ந்தேன். வீடு வெறிச்சோடிப் போய் இருந்தது. காலை பதினோரு மணி வரை தூங்கினேன். எழும்பியதும் குளித்துவிட்டு மூத்தம்மாவை பார்க்கக் கிளம்பினேன். 'முக்சித்தின் பழைய வீடு' என்று எங்கள் நண்பர் வட்டத்தில் எல்லாராலும் அறியப்படும் அந்த வீட்டின் ஹோலில் ஒரு கட்டிலில் படுத்திருந்தார். உம்மா, சாச்சி, மத்தம்மா, முக்சிதின் உம்மா, தங்கச்சி எல்லோரும் சுற்றி இருந்தார்கள். போய் மத்தம்மாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. வாயைத் திறந்த படி சுவாசித்துக் கொண்டிருந்தார். ஒரு காலை மடித்து வைத்திருந்ததால் முழங்கால் உயர்ந்து இருந்தது. கை ஒன்று நெஞ்சிலும் மாற்றியதை தலைக்கு அருகிலும் வைத்திருந்தார். சுவாசிக்க கஷ்டப்படுவது விளங்கியது.

சாச்சி அருகில் போய், "முத்தம்மா மூத்தம்மா" என்றார். கண்கள் மூட்டி இருக்கிறதா இல்லை திறந்து இருக்கிறதா என்று தெரியாத ஒரு கட்டத்தில் இமைகள் நிலைத்திருந்தன. மீண்டும் உம்மாவும் சாச்சியும் சேர்ந்து "மூத்தம்மா" என்று கூப்பிட்ட போது, "ஓய்" என்றார்.

காலச்சக்கரம் பின்னோக்கிப் போனது. தள்ளாடும் வயதிலும் கால்நடையாக தன் வம்சம் வழி வந்த குடும்பம் எல்லாவற்றின் வீட்டுக்கும் ஸடன் விசிட் அடித்த ஸ்ட்ரோங் மனுஷி. வஹி வருகிறதோ என்று சந்தேகம் வருமளவு டெக்னோலஜி மிகுந்த இந்தக் காலத்தில் செல்போன் எஸ்.எம்.எஸ் எதுவுமில்லாமல் ஊரில் நடக்கும் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ளும் ரகசியம் இதுவரை ஒரு புரியாத புதிர். எனது தங்கச்சியின் மகனுடன் சேர்த்து தனது ஐந்தாவது தலைமுறையை பார்த்துவிட்ட ஜென்மம் அது.

"யாரு வந்திருக்கிற எண்டு விளங்குதா?" என்ற கேள்விக்கும் பதிலில்லை. "ஒய்" என்று சொன்னதில் உடம்பில் இருந்த சக்தி முழுதும் வடிந்து விட்டிருந்தது. சுவாசிக்க மட்டுமே ஏதுவாய் இருதயம் துடித்துக் கொண்டிருக்க வேண்டும். சாச்சி குடிக்கக் குடுப்பதற்காய் நெஸ்டமோல்ட் எடுத்து வந்தார். கண் முழித்திருந்த மூத்தம்மா மேலே சுழன்றுகொண்டிருந்த 'பேன்'ஐ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு 'ஐ ட்ரொப்பர்'இல் நெஸ்டமோல்ட்டை எடுத்து மூத்தம்மாவின் வாய்க்கருகில் கொண்டு போய், "மூத்தம்மா" என்று சத்தமாகக் கூப்பிட்ட போது, "ஒய்" என்றார். தருணம் பார்த்து 'ஐ ட்ரொப்பர்' வாய்க்குள் விடப்பட்டு நசிக்கப்பபட்டது. நெஸ்டமோல்ட் நாவில் வழிந்தோடி இருக்க வேண்டும். விளிமாங்காவை சுவைத்து வரும் உணர்வு போல் எதோ செய்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு பானம் ஏற்றப்பட்டது.

அவரது வாயை அவதானித்தேன். நாக்கு வறண்டு போய், கோடை காலத்தில் வெடித்துப் போன களிமண் தரை போல் இருந்தது. சுவை மொட்டுக்கள் முற்றாக அழிந்து விட்டிருக்க வேண்டும். உம்மாவிடம் காட்டினேன். கடைசி நாட்களில் சரியாக சாப்பிடவில்லை என்பதை சொன்னார். காது மடிந்திருப்பதையும் என்னிடம் காட்டினார்கள். 'ஸக்கர்தஹால்" நிலைமையில் இப்படி எல்லாம் ஏற்படும் என்று யாரோ அவர்களுக்கு சொல்லி இருக்கிறார்கள். முழங்காலை அவ்வாறு மடித்து வைப்பதும், கால் விரல்களை தொடும் போது வேதனையாக இருப்பதும் அதில் ஒரு பகுதியாம். எல்லாம் மூத்தம்மாவிட்கு இருந்தது.

எழும்பி அருகில் போய் பார்த்தேன். தலையில் கை வைத்து, "மூத்தம்மா" என்றேன். பதிலில்லை. உம்மா சத்தமாக "முத்தம்மா" என்ற போது "ஒய்" என்றார்.
"வேற ஏதும் வேணுமா?"
அதற்கு பதில் சொல்வதைப் போல் வாயசைத்தார். அது, "ஒண்ணும் வாணா" என்று சொல்வதைப் போல் இருந்தது. குரல் வரவில்லை. நிராதியில்லை.
"யாரு வந்திருக்கா எண்டு பாருங்க."
பார்த்தார். பின் வேறு எங்கோ பார்த்தார். அவருக்கு ஞாபகங்கள் அழிந்து விற்றுக்க வேண்டும். அடையாளம் காணும் பகுதியில் என் போட்டோ பிரதியை கறையான் அரித்து விட்டிருக்க வேண்டும். அல்லது எல்லோருடைய போட்டோ பிரதிகளையும். ஆனாலும் குரல்களை அந்த மூளை வேறு எங்கோ சேமித்து வைத்திருக்க வேண்டும். உம்மா மற்றும் சாச்சி கேட்ட கேள்விகளுக்கு பரிச்சியமான குரல் போல் அவரது முகம் மறு மொழி கொடுக்க முனைவது விளங்கியது.

எங்கோ கை காட்டினார். ஏதோ சொல்ல வந்தார். பாதியிலேயே நின்று போனது அதற்கான முயற்சி. வாய் அகல விரித்து சுவாசித்தார். அது ஒன்றுதான் வாயால் தொடர்ந்து செய்ய முடிந்தது. தலையில் எதோ பட்டுக்கிடப்பதை பார்த்தேன். கையில் எடுத்துப் பார்த்தேன். சாச்சி, "பேன்" என்றார். கொஞ்ச நேரம் இருந்து விட்டு வீடு வந்தேன்.

மறுநாள் காலை, அதாவது நேற்று (15.12.2011 வியாழக்கிழமை), மூத்தம்மாவை பார்க்க தயாராகும் போது முக்சித்திடம் இருந்து கோல் வந்தது. ஆன்சர் பண்ணிய போது, "கெதியா வா. உடம்பு எல்லாம் சுருங்குதாம்"  என்றான். பதறிய படியே ஓடிப் போனேன். வீட்டு வாசலை நெருங்கிய போது அழும் குரல் காதில் கேட்டன.

உள்ளே சென்றேன். பார்த்தேன். அதே கட்டில். சுற்றி எல்லா பெண்களும் அழுத படி நின்று கொண்டிருந்தார்கள். காலில் பெருவிரல் இரண்டும் சேர்த்துக் கட்டுப் போடப் பட்டிருந்தது. என்ன செய்வதென்று புரியவில்லை. தலையில் நாடியை சேர்த்து கட்டப்படும் துணி அவிழ்ந்து கொண்டிருந்தது. திறந்திருந்த வாயை நாடியில் கை வைத்து அமர்த்திய போது மூடவே, தலையில் முடிச்சுப் போட்டார்கள். சம்பவம் பரவவே சுற்று முற்றும் வரத் தொடங்கினார்கள். வழமையாக ஒரு மரண வீட்டில் நடக்கும் அம்சங்களும் நடந்தேறின. அவரை வைத்துக் கழுவுவதற்கான தட்டியை நானும் மாமாவும் எடுத்து வந்தோம். சாச்சா கையில் ஒரு பேப்பருடன் நின்றிருந்தார். "கொண்டு போய் பள்ளியில் அறிவிச்சிட்டு வாங்க" என்றார். வீட்டு எதிர் பள்ளி வந்து, முஅத்தினை எழுப்பி விஷயம் சொல்லி, மைக் முன் நின்று வாசிக்கத் தொடங்கினேன்...

"ஜனாஸா பற்றிய அறிவித்தல்"



Saturday 3 December 2011

பேனா நுனி வழிந்திடும் ரத்தம்...


'அன்-ப்ரடிக்டபிள்' என எல்லாராலும் வர்ணிக்கப்பட்டவர் செபஸ்டியன். பொதுவாவே அன்-ப்ரடிக்டபிள் என்ற பெயர் அதிகம் கோபம் வருபவர்களுக்கும் திடீர் என ஒரு விஷயத்தை செய்பவர்களுக்கும் சொல்லப்படுவதுண்டு, இவருக்கும் அதே. புரட்சிகரமான எழுத்தாளர் எல்லாம் கிடையாது. ஆனாலும் அவருக்கு மக்களிடம் ஒரு பயம் இருந்தது. ஊர்ப் பிரச்னையை 'நாடோடி' என்ற புனை பெயரில் பத்திரிகைகளுக்கு கொண்டு வந்திட்டார். அதை தீர்ப்பதற்கான ஆக்ஷன்களை ஒரு சிலர்தான் எடுத்திட்டார்கள். இருந்தாலும் இவரது முயற்சிகேனும் இவருக்கு சுற்றும் ஒரு நல்ல பெயர் இருக்கவில்லை. வயது ஐம்பதின் இறுதிகளில் இருந்திருக்கவேண்டும் நான் அவரை முதலில் கண்ட போது. ஒரு ரிடயர்ட் கிளார்க். மனைவி ஒரு பத்து வருஷத்துக்கு முதல் இறந்துவிட்டதாக நண்பன் சொன்னான். 'காஸ் ஒப் டெத்' இயற்கை மரணம்தான். பிள்ளைகள் இல்லை. பின்னேரங்களில் நண்பனின் வீட்டுக்கு கேரம் விளையாட விசிட் அடிக்கும் போது அவரைக் காண்பேன். அவனது வீடு அமர்ந்திருந்த தெருவிலேயே இவரது வீடும் இருந்தது. ஒரு சின்ன முற்றம். வாசலின் ஓரம் முழுதும் சுவரை அண்டி செவ்வரத்தை மரங்கள். நான்கு முயல்கள் முற்றத்தில் பாய்ந்து கொண்டிருக்கும்.

வீட்டில் ஆறு மணிக்கெல்லாம் ஆஜெர் ஆகிவிட வேண்டும் என்று அப்பா ஆர்டர் போட்டிருந்தார். நான்கு மணிக்கு ஒரு தரமும் ஐந்தே முக்காலுக்கு இன்னொரு தரமுமாக ஒருவர் முகத்தை ஒருவர் வெறித்துப் பார்த்துக்கொண்டே ஒண்ணரை வருடமாக க்ராஸ் பண்ணிக் கொண்டிருந்தோம். ஒரு நாள், ப்ரெண்ட் வீடு செல்லும் போது செபஸ்டியன் வீட்டு வாசல்களில் இருந்த முயல்களை காணவில்லை. அவர் வழக்கம் போல வீட்டு வாசலில் இருந்து தெருவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். முயல்களின் மீதான ஒரு விருப்பம் அவற்றுக்கு என்ன ஆனதோ என்று அறிய என்னை சீண்டிக் கொண்டிருந்தன.
"ரொம்ப கண்டிப்பான மனுஷன். சும்மா சும்மா கோபம் வரும்"
"எப்ப பாத்தாலும் எரிஞ்சு விழுவாரு"
"சிரிக்கவே மாட்டாரு"
ஊராரின் பேச்சுகள் காதில் எதிரொலித்தன.

வேறு வழி இல்லை. போய்க் கேட்டு விடலாம்.
"அங்கிள்"
பார்த்தார். ஒரு ரியாக்ஷனும் இல்லை.
"அங்கிள், உங்களைத்தான்."
"என்ன"
"இல்ல, உங்க யார்ட்ல கொஞ்ச ரப்பிட்ஸ் ஓடிட்டு இருந்திச்சே. அதெல்லாம் எங்க?"
எழும்பிக் கொண்டார். உள்ளே வா என்று செய்கை காட்டிய படியே வீட்டுக்குள் சென்றார்.

வர்ணிக்கும் அளவிற்குப் பெரிய கலை நயத்தில் எல்லாம் அவ்வீடு கட்டப்பட்டு இருக்கவில்லை. சாதாரண ஒட்டு வீடுதான். உள்ளே போனேன். சோபாவில் இருக்குமாறு சொல்லிவிட்டு ஒரு ரூமுக்குள் போய் விட்டார். கொஞ்ச நேரத்தில் வெளிய வந்தவரின் கையில் ஒரு கோப்பையும் பேனையும் இருந்தது. நடுத்தாளை கிழித்து கொப்பியின் மேல் வைத்து பேனாவையும் அதையும் என்னிடம் தந்தார். அவரை கேள்விகளுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
"யாரோ திருடனுங்க அதை எடித்திட்டு போய்டாங்க. இதை பத்தி நான் பேப்பருக்கு எழுதப் போறேன்"
மனதில் எதோ பாரம் தோன்றியது.
"போலீஸ்ல சொல்லலாமே!"
"எடுத்துப்பாங்களா கம்ப்ளைண்டா? சின்ன புள்ளததனமா இருக்குன்னு நெனப்பாங்களே."
"என்ன பண்றது அங்கிள்"
கொஞ்சம் யோசித்தார். "வா போலாம்."

வெளியே வந்தோம். அவரிடம் ஒரு பழைய சைக்கிள் இருந்தது. கேரியல் இல்லாத ஒரு சைக்கிள். முன்னால் ஏற்றிக் கொண்டார். புழுதி படரும் தெருக்களில் மெதுவாக புறப்பட்டது சைக்கிள்.
முதல் முதலாக போலிஸ் ஸ்டேஷனில் நுழைந்தேன். பிரமிப்பாக இருந்தது. அதுவும் நாலு முயலுக்காக. பெரிதாக பழக்கமில்லாத ஒருவருடன். அவர் சொன்னபடியே சிரித்தார்கள். புதுசாக வாங்கிக் கொள்ள சொன்னார்கள். அவருடன் பழக வேண்டாம் என்று என்னிடம் சொன்னார்கள். எல்லாத்தையும் மௌனமாய் கேட்டுக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. போக சொன்னார்கள். வெளியே வந்தோம். சைக்கிளை தள்ளிக் கொண்டார்.

"நடந்து போலாமா?" கேட்டார்.
"ஓகே அங்கிள்"
மீண்டும் கொஞ்ச நேரம் அமைதியாய் நடந்தோம். தலை குனிந்த படியே இருந்தது. "என்ன பாத்தா முரட்டுக்காரன் மாதிரியா இருக்கு?" "இல்ல அங்கிள். பட் ஆரம்பத்துல கொஞ்சம் பயம்தான்"
"என் பொண்டாட்டிய நான்தான் கொன்னேன்னு சொல்றாங்க தெரியுமா?"
எனக்கு கொஞ்சம் தூக்கிப் போட்டது.
"என்ன சொல்றீங்க அங்கிள்"
"நீ சின்ன பையன். உனக்கு சொல்லியும் புரியாது. ஆனா, அவ என்னாலதான் செத்தான்னு சொல்றாங்க."
காரணத்தை அவர் சொல்லவில்லை. சொல்லியும் புரிந்திருக்காது.
"முயலுக்கு என்னாச்சு?"
"தெரில. இரவுதான் எடுத்திருக்கணும். என் புள்ளைங்க மாதிரி வளத்தேன். கொண்டு போனவன் நல்லா வாச்சுப்பானான்னு பயமா இருக்கு."

ஒரு கடையில் இருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டார். "ரெண்டு டீ"என்றார். "குடிப்பேல்ல?" கேட்டார். "ஓகே அங்கிள்". கடைக்காரர் கொண்டு வந்து தந்தார். என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். ஏன் இவரோடு வந்திருக்கிறாய் என்பது போல இருந்தது. ஒரு மாதிரியாக இருந்தது. காசை குடுத்துவிட்டு வந்தார். நடந்தோம். "நீ டேவிட் ப்ரெண்டுல. அவன் வீட்டுக்கு எப்பவும் போவே. பார்த்திருக்கேன். திக் ப்ரெண்ட்ஸ்'ஓ?" "ஆமா. அஞ்சு வருஷமா பழக்கம். என் பெஸ்ட் ப்ரெண்ட்" என்றேன். "என் வைப் எனக்கு நாப்பது வருஷமா கூட இருந்தா. சின்ன வயசுல என் பக்கத்து வீடுதான். ஸ்கூல் விட்டா ரெண்டு பெரும் ஒண்ணாத்தான் விளையாடுவோம். அதெல்லாம் இன்பமான நாட்கள்" என்றார். எனக்குப் புரியவில்லை. அவரைப் பார்த்து சிரித்துவைத்தேன். விளங்கி இருக்க வேண்டும். ஒன்றும் பேசவில்லை. அவரது வீட்டை நெருங்கிய போது அப்பா என் சைக்கிள் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். செபஸ்தியன் அங்கிளை கோபமாக பார்த்தார். என்னை பார்த்து "வா போலாம்" என்றார். செபஸ்தியன் ஒன்றும் சொல்லிடவில்லை. "போயிட்டு வாறேன்" என்றேன். சரி என்பது போல தலை ஆட்டி விட்டு வீட்டுக்குள் சென்றார்.

"லாஸ்ட் வீக் எனக்கு ட்ரான்ஸ்பர் கிடச்சிச்சு. இன்னிக்கு நைட் நாம வெளியூர் போறோம். இனிமே அங்கதான். உனக்கு புது ஸ்கூல் பாத்தாச்சு. மன்டே ஜாயின் பண்றே" அதிர்ச்சியாக இருந்தது. அங்கிளிடம் சொல்லிடலாம்னு பார்த்தேன். அப்பா முன் தைரியம் வரவில்லை. வீடு சென்று டேவிட்டுக்கு கால் பண்ணி சொன்னேன்.

நாட்கள் சென்றன. புது ஊர். புது அட்மாஸ்பியர். ரெட்ன்டு மாதங்கள் கழிந்தன. டேவிட் கால் எடுத்திருந்தான். பேசினேன். செபஸ்டியன் பற்றியும் கேட்டேன். அவர், நான் ஊர் வந்த அன்றே இறந்து விட்டதாக சொன்னான். ஒன்றுமே புரியவில்லை. நிஜமாகவே அழுகை வந்தது. இயற்கை மரணம்தான் என்றான். அவரது முயல்கள் அவரது வீட்டின் பின் பக்கத்திலேயே இறந்து கிடந்ததாகவும் சொன்னான். அவற்றை அங்கிள்தான் குத்தி இருந்தார் என்றான்.

"ஓகேடா நான் அப்புறம் பேசறேன்" போனை வைத்தான்.

மனது குழப்பத்தில் கனத்தது.



Thursday 1 December 2011

அன்டைட்டில்ட் 2

புரட்சி, அது இதுன்னு எழுத எல்லாம், ஐ ஜஸ்ட் டோன்ட் நோ. கவிதைத்தனமாய் ஒரு ஹெடிங் வச்சிட்டு எதைப் பத்தி எழுதலாம்னு யோசிக்கிற கூட்டத்தில லைப் டைம் மெம்பர்ஷிப் வாங்கி வச்சிண்டு இருக்கேன்...

லாஸ்ட் போஸ்ட்டை பத்தி பெர்சனல்'ஆ ஒரு கமன்ட் வந்திச்சு, 'வேஸ்ட் ஆப் டைம்'னு. எதைப் பத்தி எழுதறதுன்னு ஒரு வரையறை இருக்கா? தெரில. ஆனா, எல்லாத்தையும் எழுதிட முடியாதுதான். பார் எக்ஸாம்பிள், என் ப்ரெண்ட் ஒருத்தன் சொன்னான், 'எல்லார்க்கும் ப்ரைவேட் பார்ட்ஸ் இருக்கு. உனக்கு என்ன இருக்கும்னு எனக்கு தெரியும். எனக்கு என்ன இருக்குன்னு உனக்குத் தெரியும். அதுக்காக உன் முன்னாடி நான் எதுவுமே போடாம வந்து நிக்க முடியுமா?'. அதே மாதிரிதான் ஒரு தகவலை பரிமாற்றம் செய்தலும். எல்லாத்தையும் வெளிப்படையா சொல்லிட முடியாது. இதுல கல்ச்சர், ஜியாக்கிரபிக்கல் லொக்கேஷன் என்று நிறைய விஷயம் செல்வாக்கு செலுத்துது. ஒரு நிர்வாண தேசம் ஒண்ணு இருக்குன்னு வச்சிக்குவோம். அங்க நீங்க ட்ரெஸ் போட்டு நின்னா அவங்க கேவலமா பாப்பாங்க. அப்போ ஒரு தகவலை எப்டி சொல்றது. நீங்க உங்க பக்கம் இருக்கற நியாயத்தை எடுத்து சொல்லணும்ல. அதுக்கு உங்க மனசு ஸ்ட்ராங்'ஆ இருக்கணும். நிர்வாண தேசத்துல இருக்கற ஒரு பிகர் உங்கள உத்துப் பாத்திச்சுன்னா போதும். உங்க கேம் ஓவர். நான் முதல்லேயே சொன்ன மாதிரி எல்லா விஷயத்தையும் தெளிவா சொல்ல முடியாது. நீங்கதான் நான் என்ன சொல்ல வாறேன்னு புரிஞ்சுக்கணும்.

ரெண்டு மூணு நண்பர்களோட பழைய கதைகள் வாசிச்சேன். தமிழ்ல இருக்கற ரொம்ப கஷ்டமான வேர்ட்ஸ் யூஸ் பண்ணி எழுதுவாங்க. மார்க்கெட்டுக்கு மீன் வாங்க போன இன்ஸிடென்ட்டையே நாலு தாள்ல எழுதுவாங்க. 'அதி கதைகள்' அதுக்கு ஒரு பேரு இருக்கு. வாசிக்க சந்தர்ப்பம் கிடச்சிச்சுன்னா ஒரு ட்ரை பண்ணிப் பாருங்க. இப்படியான கதைகள் எழுதுறதுல என்ன நன்மைன்னா, ரைட்டர் / ஆத்தர்'கு டபிள் சேல். அப்பிடி ஒரு கதைய எழுதிட்டு, அதுக்கு ஒரு விளக்கப் புத்தகமும் எழுதி வெளியிடலாம். இல்லன்னா, அவரு கொஞ்சம் பெருந்தன்மை கொண்ட மனுஷர்னா, மத்த ரைட்டர்ஸ்'ஐ அதுக்கு விளக்கம் புத்தகம் எழுத சொல்லி சொல்லலாம். சோ, அவரால இன்னும் ஒரு நாலு அஞ்சு பேரு வாழ்வாங்க. பெருமையா, எழுத்தாளர் மாநாட்டுல இதெல்லாம் சொல்லிக் காட்டலாம்.

மார்க் ட்வைன்இன் 176ஆவது பிறந்த நாளிற்கு கூகுள் டூடில் ஒன்று வந்திச்சு. மார்க் ட்வைன் பற்றி பெருசா எனக்கு எதுவும் தெரியாது. ஒரு எழுத்தாளர் மற்றும் காமெடியா கருத்து சொன்னவர்னு மட்டும் தெரியும். ஹிஸ்டரி பத்தி பெரிசா ஐடியா இல்ல. சுய முன்னேற்றப் புத்தகங்களில் அவர் பத்திய சம்பவம்கள் அவ்வப்போது வரும். ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். ஓ'சம் னு சொல்ற அளவுக்கு செமயா பொளந்து கட்டியிருப்பார் மனுஷன். அவரது 'மேற்கோள்கள்' இப்பவும் சூப்பர்ப்'ஆ இருக்கும். 'மார்க் ட்வைன் கு'ஓட்ஸ்' னு தேடி பாருங்க. பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டு செம லைக்ஸ் அள்ளலாம்.

அப்றோம் காபி. உலகத்துல எனக்கு ரொம்பவும் புடிச்ச ஒரு குடிபானம். பானம்'னு சொன்னாலே அது குடிக்கிற ஒரு விஷயம் தானே? அப்றோம் எதுக்கு குடிபானம்'னு ஒரு பேரு எங்கிறதப் பத்தி வெட்டி விவாதம் இப்போ தேவையில்லை. நான் எப்பவும் சொல்ற மாதிரி, மழைக்கும் காப்பிக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் ஒண்ணு இருக்கு. கூடவே ஜன்னலையும் சேர்த்துக் கொள்வோம்.மழை நேரங்களில் குடிக்கப்படும் காப்பியில் இருக்கும் சுவை வர்ணிக்கவே முடியாதது. அதிலும் அதனுடன் பால் சேர்த்துக் குடிக்கும் போறது இன்னும் இதம். இங்க்லீஷ் படங்கள்ல பாத்தீங்கன்னா அமெரிக்கன்ஸ் பொதுவாவே காப்பியை ப்ளைன் ஆக, அதாவது ஜஸ்ட் ப்ளாக் காப்பியாக, குடிக்கவே விரும்புவார்கள். காப்பியுடன் பாலை கலந்தால், காப்பியின் மருத்துவக் குணத்தை பால் முறித்து விடுவதாக டாக்டர்ஸ் சொல்றாங்க. இது டீக்கும் பொருந்தும்.
உலகத்திலேயே விலை கூடின காப்பி பத்தி படிச்சேன். வழக்கம் போல ஒரு நண்பன் அதைப் பத்தி சொன்னான். விக்கிபீடியால மிச்சத்தை தெரிஞ்சு கொண்டோம். அந்தக் காப்பியை, 'கோபி லுவாக்' என்கிறார்கள். ஆக்சுவல்லி ப்ராப்ளம் என்னன்னா, இது 'காப்பி பெர்ரி' கொட்டைகளை தின்று விட்டு 'ஆசிய மர நாய்' எனப்படும் ஒரு பூனை(?!!!), கண்பீஸ் ஆனவர்கள் இத்தோடு நிறுத்திக்கவும், போடும் மலக் கழிவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஊட்டச் சத்துகள் அதிகமாக இருப்பது இதன் விலைக்கு ஒரு காரணம். இனி காப்பி குடிப்பவர்கள் அது, 'கோபி லுவாக்' இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும். இந்தக் காப்பி அதிகமாக 'கிழக்கு ஆசிய' நாடுகளிலேயே தயாரிக்கப்படுவது எனக்கு ஒரு புது சேதியாக இருந்தது. சாதாரணமாக ஒரு கிலோ 600 யூ.எஸ். டாலர் வரை இருக்கிறது. அதிக பட்சமாக ஒரு கட்டத்தில் 6000 டாலர் விளையும் சென்று இருக்கிறது. ஒரு கப் 'கோபி லுவாக்' ஒரு 30-50 டாலர் வரை இருக்கக் கூடும். 'ஓசில கிடச்சா எத வேணும்நாலும் திம்பியா' என்பதை 'காசு இருந்தா எத வேணும்னாலும் திம்பியா' என்றும் இப்போது வைத்துக் கொள்ளலாம்.

ஒரு வருஷம் என்றாலும் மினக்கட்டு காசு சேர்த்தேனும் ஒரு தடவையாவது ஒரு கப், 'கோபி லுவாக்' குடித்து விடுவது என்று முடிவு கட்டியிருக்கிறேன்.



Tuesday 29 November 2011

அன்ட்டைட்டில்ட்

ரொம்ப காலத்துக்கு எழுதாமல் விட்டுவிட்டு அப்புறம், சாரி, பிசி, அது இது என்று பீலா விடுவது என் வழக்கமாகிவிட்டது. மெய்யாலுமே பிசி'தாம்ப்பா, நம்புப்பா என்று நானும் ரவுடிதாம்பா என்று நாய் சேகர் போல் புலம்புவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. அவரவர்க்கு ஆயிரம் வேலை, அதில் உன் பொழைப்பு ஒரு கேடு என்று சிரிக்கும் ஊர்.

9GAG என்று ஒரு தளம். பாழாய்ப்போன ஒரு தளம். கொஞ்ச நாள் அதில்தான் கிடந்து உருண்டேன். பேஸ்புக்கில் ப்ளேர்ட்டிங் பண்ணி மனம் நொந்து போவதை விட, எப்போதும் சிரித்து வாழலாம் என்ற நல்லெண்ணத்தில் உருவாக்கித் தொலைத்திருக்கிறார்கள் அதை. நக்கல், நையாண்டி தவிர அனைத்தும் மறுக்கப்படும் அங்கே. கொஞ்சம் போய்ப் பார்க்கலாம். அப்புறம் உங்கள் வாழ்க்கையை நான் பாழாக்கிவிட்டேன் என்று புலம்புவதை தவிர்த்துக் கொள்ளவும்.

அப்புறம் 7ம் அறிவு பார்த்தேன். ஒவ்வொரு தனி உயிரினமும் தனக்கென தனியான ஜிநேட்டிக் மெமொரியை உருவாக்கிக் கொள்ளும் அது அடுத்த சந்ததிக்கு கடத்தப்படாது என்ற தகவலை தியேட்டரில் வைத்து 'விக்கிப்பீடியா'வில் வாசித்து தொலைத்தேன். மற்றும், பார்த்த உடனேயே ஆணி புடுங்குகின்ற அளவுக்கு அனைவரும் செயல்படுகின்ற நோக்கு வார்மத்தை போதிதர்மர் கூட செய்து இருக்கமாட்டார். அந்த கண்டைனர் சண்டை தேவையே இல்லை. மற்றப்படி போதிதர்மர் பற்றி அறியக் கிடைத்ததுக்கு ஒரு தேங்க்ஸ். டாங் லீ'க்காக படத்தை இன்னுமொரு முறை பார்த்தேன். 'கனாக் கண்டேன்' இல் 'ப்ரிதிவிராஜ்' இற்கு அப்புறம் நான் ரசித்த ஒரு வித்தியாசமான வில்லன். 'என்னது, காந்தி செத்துட்டாரா?' என்கிற மாதிரி இப்போ இந்த விமர்சனம் தேவையா என்றும் மனசு ஒரு புறம் நச்சரிச்சது.

வழக்கம் போல வீட்டுக்கு ஒரு வேக்கேஷன் விசிட். கையில் காப்பி கப், வெளியில் மழை, திறந்த ஜன்னல், இதமான ஒரு காற்று, பழைய ஞாபகங்கள்... கொஞ்சம் கவிதை. கொஞ்சம் ஆடியோ டயரி. அப்றோம் அதை எல்லாம் மூட்டை கட்டி விட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றல் என்று கழிந்தது.

அந்தக்காலத்தில் புரட்சி நண்பர்கள் சேர்ந்தால் என்ன பண்ணுவார்கள்? சினிமாவில் வாருவது போல பாரதி கவிதையை உரக்கப் படித்து மழை விளிம்பில் நின்று சத்தம் போட்டு கையை உயர்த்திக் காட்டுதல்? இல்லாட்டி, கம்மியூனிசம் பத்தி புரியுற, புரியாத மாதிரி நாடகம் போடுறது, ஊர் மக்களை கூட்டி நரம்பு வெளியில் வருமாறு கத்தி பேசுறது?
நாங்கள் ஒரு கம்பனி ஆரம்பித்துத் தொலைத்தோம்.
போன வருஷம். உருப்பட்டதா? இல்லவே இல்லை. கிடப்பில் போடப்பட்டது. பிரெண்ட்ஷிப் பிரச்சனை அது இது'னு எல்லாரும் ஆளாளுக்கு ஒரு திசையில் சென்றார்கள். சரியாக ஒரு வருஷத்தின் பின் பழைய டீம் ஒன்று கூடியது. கிடப்பில் கிடந்த பைலை தூசு தட்டி எடுத்தார்கள். இப்போது, மன்னார் அண்ட் கம்பனி ரேஞ்சில் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆல் ஒப் எ சடன், இருக்கும் அறையில் உள்ள சீலிங் பேன் சத்தம் போடத் தொடங்கியது. கிரீச்சிடும் அந்த சத்தத்தை ரெண்டு மூணு நாள் பொறுத்துக் கொண்டேன். எலெக்ட்ரீசியனை அழைத்து வர நேரமில்லாமல் ஆக்கி விட்டிருந்தது அந்தக் கிழமை முழுவதும் இருந்த எக்ஸாம். அப்புறம் சோம்பல் அதிகரித்து 'அப்பால பாக்கலாம்' என்று விட்டு விட்டேன். கொஞ்ச நாளில் அந்த சத்தம் இல்லாமல் தூங்க முடியவில்லை. சக நண்பர்கள் வேறு ரூமில் படுக்க ஆரம்பித்தார்கள். எனக்கு அந்த பேனை விட்டுப் பிரிய மனமே இல்லாமல் போனது. இதற்கு, அதிலிருந்து பெரிதாக காற்று ஒன்றும் வந்துவிடுவதுமில்லை. காலையில் எழும்பும் போது, 'அவதார்'இல் குறிஞ்சிப் பூ ஹீரோவின் உடம்பு முழுவதும் வந்து அமர்வது போல நுளம்புகள் என்னிலிருந்து பறந்து போவதாக நண்பர்கள் சொன்னார்கள். காலையில் எழும்பும் போறது பக்கத்தில் ஒரு சில நுளம்புகள் ரத்தம் கக்கி செத்துப் பொய் இருக்கும். மொஸ்கிட்டோ காயில்'ஓ, நுளம்பு வலையோ அல்லது ஒயிலோ நிம்மதியான தூக்கத்தை தர மறுத்தன. இரவில் அந்த சீலிங் பேனின் இதமான ராகமும், முகத்தில் படரும் நுளம்புகளும் இன்றி இனிமேலெல்லாம் நான் தூங்குவேனா என்றாகிப் போனது என் நிலைமை.

இந்தப் போஸ்ட் ஐ எழுதிவிட்டு ப்ரெண்ட் இடம் காட்டினேன்.

"இட் இஸ் எ ஷிட்" என்றான்.



Sunday 11 September 2011

எல்லா விடியலிலும்

அங்கும் இங்கும் என பட்டுத் தெறித்து
உன் நாடு வகிடு வழியே வருகிறது
உன் பின்னால் உதிக்கும் சூரியன்.

அதன் முகம் உன் முதுகு காட்டி
நிலம் பார்த்துப் புன்னகைத்துக்
கோலம் போடும் உன் கைகளில்
ஜொலிக்கும் தங்க வளையல்கள்.

கோயில் மணியோசை போல் கேட்கும்
தமக்கிடையே வளையல் போடும் சண்டை.
உன் கை உதிரும் கோலப்பொடி
நிலத்தில் விழுந்து உனை வாழ்த்தும்.

எல்லா விடியலிலும் முதல் பக்கத்தில்
அச்சிடப்படும் உன் முகம்...



Friday 17 June 2011

304 - நான்கு பேர்

இது கார்ட்ஸ் விளையாட்டுக்களில் ஒன்றான '304' என்று எங்கள் வட்டாரத்தில் பிரபல்யமான விளையாட்டை ப்ரோமொட் செய்யும் நோக்கில் எழுதப்படுகிறது. நான்கு அல்லது ஆறு பேராக விளையாடப்படும் இந்த விளையாட்டின் நான்கு பேர் விளையாட்டு பற்றி இப்பதிவு...

பாயின்ட் விபரம்:
J = 3
9 = 2
A = 1.1
10 = 1
K = 0.3
Q = 0.2
8 = 0 (பெரியது)
7 = 0 (சிறியது)

பெயர்க்காரணம்: இவ்வாறு 8x4 இனம்=32 கார்ட்டுக்கும் பாயிண்ட்ஸ் கூட்டும் போது 30.4 வரும்.

விளையாட்டு முறை:
1. மேலே பாயிண்ட்ஸ் தரப்பட்ட கார்டுகளை தவிர ஏனையவை விளையாட்டுக்குத் தேவையில்லை. அவற்றை 'கல்லு' என்றழைப்பார்கள். வெல்லும் அணி தோற்கும் அணிக்கு அவற்றை கொடுக்கும். யார் அணி முதலில் கொடுத்து முடிக்கிறதோ அது வென்ற அணி. மேலே பாயிண்ட்ஸ் குறிப்பிடப்பட்ட 8x4=32 கார்ட்ஸ் போக மீதம் இருப்பவை, 52-32=20(ஜோக்கர் இல்லாமல்). இதில் தலா ஒரு அணிக்கு 10 கல்லு. இதை தோற்கும் எதிரணிக்கு கொடுத்து முடிக்கவேண்டும். எதிர் எதிர் பக்கத்தில் இருப்பவர்கள் ஒரே அணி.

2. பிரித்தல்: சாதாரணமாக ஷபிள் பண்ணிவிட்ட பின் இடது பக்கத்தில் இருப்பருக்கு வெட்டக் கொடுக்க வேண்டும். வெட்டுவது என்பது அவர் தரும் கார்ட் டெக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட அமௌன்ட்டை எடுத்து வைப்பது. பின் வலப்பக்கமாக நான்கு நான்காக கொடுக்க வேண்டும்.வலது நான்கு, எதிரிலிருக்கும் எமது அணியைச் சேர்ந்தவருக்கு நான்கு, இடது நான்கு, தனக்கு நான்கு. இதில் நிற்கவும். இப்போது 16 கார்டுகள் கொடுக்கப் பட்டிருக்கும். மீதி 16 தனியாக இருக்கும்.

3. கேட்டல்: இனி பிரித்தவருக்கு வலப்பக்கம் இருக்கும் எதிரணி வீரர் கேட்க ஆரம்பிப்பார். இது எதிரணியை சேலஞ் செய்யும் முறை. ஒரு குறிப்பிட்ட பாயின்ட் எண்ணிக்கையை மற்ற அணி எடுத்துக் காட்ட முடியுமா என்று சேலஞ் விடுக்கும் முறை. ஒருவர் பிரித்தால் வலப்பக்கம் இருப்பவர் கட்டாயம் கேட்டாக வேண்டும். இதில் மினிமம் அமௌன்ட் கேள்வி 'அறுபது ' எனப்படும். அவர் அறுபது எனில் எதிரணியை மினிமம் 14.5 பாயின்ட்கள் எடுத்துக் காட்ட சொல்கிறார். (எழுபதுக்கு 13.5 உம், எண்பதுக்கு 12.5 உம். தொண்ணூறுக்கு 11.5 உம், நூறுக்கு 10.5 உம், நூறு ஐந்துக்கு 10உம், நூறு பத்துக்கு 9.5உம், நூறு பதினைந்துக்கு 9உம், நூறு இருபதுக்கு 8.5உம் கேட்கமுடியும்) இது நான்கு கார்டுகளில் அவருக்கு அமையும் பாயின்ட் பலத்தை வைத்து கேட்டுக்கொள்ளமுடியும். (பாயின்ட் பலம் ஒரே இனத்தில் அமைய வேண்டும்)

4. உடைத்தல்: இது ஏனையவர்கள் கேட்பவருக்கு மேலால் தாங்கள் கேட்பது. முதலில் கேட்பவர் அறுபது கேட்டால் மற்றவர்கள் எழுபதோ, எண்பதோ அதற்குக் கூடவோ தமக்கு அமையும் பாயின்ட் பலத்தை வைத்து கேட்க முடியும்.

5. துருப்பு: யார் கேட்கிறாரோ அவர் துருப்பு மடிக்க வேண்டும். அதாவது, அவர் கேட்டால் ஒரு குறிப்பிட்ட இனத்தை வைத்துக் கேட்டிருப்பார். அவ்வினம் அவ்விளையாட்டின் துருப்பு சீட்டு. அவ்வாறு கேட்டதில் ஒரு சீட்டை கீழே மடித்து வைக்க வேண்டும். இது துருப்பு சீட்டு மடித்தவரை தவிர வேறு யாருக்கும், அவரது அணியைச் சேர்ந்தவருக்கு கூட, என்ன இனத்தில் என்ன சீட்டை மடித்து வைத்திருக்கிறார் என்பது தெரியக் கூடாது. தனக்கு முன்னால் அனைவரது கண்ணிலும் படும்படியாக துருப்பு சீட்டை தலை கீழாக வைத்துக் கொள்ள வேண்டும். துருப்பு சீட்டின் பலம் உங்களுக்கே தெரியும். பொதுவாக இனத்திற்கு இனம் இறக்க வேண்டும். இனம் இல்லாத பட்சத்தில் துருப்பு சீட்டை இனத்தை இறக்கலாம். அப்போது எத்தனை பெரிய பாயின்ட் போட்டிருந்தாலும் துருப்பு சீட்டு போட்டவரின் அணிக்கே அந்த ஆட்டம் செல்லும். அதிலும் ரெண்டு மூன்று துருப்பு சீட்டு இருக்கும் போது பெரிய துருப்பு சீட்டு (பாயின்ட் அதிகமுள்ள துருப்பு சீட்டு) போட்டவரின் அணிக்கு ஆட்டம் செல்லும்.

6: பின்னர் மீதமிருக்கும் 16 சீட்டுக்களையும் நான்கு நான்காக குடுத்து விட வேண்டும்.

ஆட்டம்:
பொதுவாக யார் துருப்பு சீட்டு வைக்கிறாரோ அவரே ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அவன் துருப்பு சீட்டு இனத்தை தவிர்த்து ஏனைய 3 இனத்தில் ஏதாவது ஒரு சீட்டை இறக்கலாம். இதில் முக்கியமான விடயம், ஆட்டத்தை ஆரம்பிப்பவர் போட்ட இனத்தில் பெரிய பாயின்ட் போட்டவருக்கே அந்த ஆட்டம் செல்லும். இதில் ஆட்டத்தை ஆரம்பிப்பவர் போடும் இனம் இல்லாத பட்சத்தில், ஏனையவர்கள் துருப்பு சீட்டை சரியாக கணிக்க வேண்டும். எந்த இனமாக இருக்கும் என்பதை கணித்து அந்த இனச் சீட்டு ஒன்றை தலைகீழாக இறக்க வேண்டும். ஆட்டத்தை ஆரம்பிப்பவரின் இனம் இருந்தால் அந்த இனத்தை போட்டு விடலாம். இவ்வாறு நான்கு பேரும் போட்ட பின்னர் பெரிய பாயின்ட் போட்டவருக்கு (அவரது அணிக்கு) அந்த நான்கு சீட்டுகளும் போகும். இந்த நான்கு சீட்டையும் வெளியே எடுத்து வைத்து விட வேண்டும். இப்போது ஒருவர் துருப்பு சீட்டை கணித்து மடித்துக் கொடுத்திருக்கிறார் என வைப்போம். இவரது சீட்டை ஏனையோருக்கு காட்டாமல், துருப்பு சீட்டை மடித்தவர் மட்டும் எடுத்து பார்க்கலாம். மற்றவர் துருப்பு சீட்டை சரியாக மடித்திருந்தால் மடித்த சீட்டையும் தனது துருப்பு சீட்டையும் ஏனையவர்களுக்கு ஒப்பிட்டு காட்ட வேண்டும். அதோடு பெரிய துருப்பு சீட்டு மடித்தவருக்கு அந்த ஆட்டம் போய் சேரும். இப்போது துருப்பு சீட்டு பப்ளிக் ஆக்கப் பட்டுவிட்டது. இனி துருப்பு சீட்டு கணிக்க தேவை இல்லை. ஆனாலும் பலம் பொருந்திய இனம் துருப்பு சீட்டு இனம்தான். ஒரு ஆட்டத்தில் துருப்பு சீட்டு இல்லாத வேறு ஒரு இனத்தின் J, 9, A இருக்கிறது என்று வைப்போம். நான்காவது நபர் தன்னிடம் அந்த இனம் இல்லாத பட்சத்தில் துருப்பு சீட்டு இனத்தின் 8 ஐ போட்டு அந்த ஆட்டத்தை தனதாக்கிக் கொள்ள முடியும். துருப்பு சீட்டு இனமோ, அல்லது ஒரு ஆட்டத்தில் விளையாடப்படும் இனமோ இல்லாத பட்சத்தில் வேறு ஏதாவது ஒரு இனச் சீட்டை இறக்கலாம். அதில் விளையாடப்படும் இனம் தன் அணிக்குத்தான் வரப் போகிறது என்ற பட்சத்தில் வேறு இனத்தின் பெரிய பாயிண்டையோ தனக்கு வராத பட்சத்தில் வேறு இனத்தின் சிறிய பாயிண்டையோ போட முடியும். இது விளையாடி வழக்கப்படும் நேரங்களில் இயல்பாக நமக்குள் தோன்றும்.இவ்வாறு 8 ஆட்டங்கள் முடிந்த பின்னர் ஒரு ஆட்டம் பூரண நிறைவுறும். இதன் பின்னர் பாயின்ட் எண்ணப்படும். கேட்டவர்களின் அணிக்கு எதிரான அணியினர் தாங்கள் காட்ட வேண்டிய பாயின்ட் எண்ணிக்கையை அடைந்திருப்பின் அவர்களுக்கு வெற்றி. இல்லாத பட்சத்தில் கேட்ட அணிக்கு வெற்றி.

பாயின்ட் விபரம்:
ஒரு அணி கேட்டு, அவர்களே வென்று இருப்பின் அவர்களுக்கு ஒரு பாயின்ட்.
ஒரு அணி கேட்டு, அவர்கள் தொற்றிருப்பின், எதிரணிக்கு ரெண்டு பாயின்ட்.
இவ்வாறு பத்து பாயின்ட் ஐ முதலில் எடுக்கு அணி வெற்றி பெற்ற அணி. :)

இதில் நிறைய விஷயங்கள் விடுபட்டு இருக்கின்றன. இருந்தாலும் ஆரம்ப நிலைக்கு இது போதும் என தோணுது. ஸோ, கொஞ்சம் விளையாடிப் பாருங்க. என்ஜாய் பண்ண முடியுதா இல்லையானு சொல்லுங்க ;)



Saturday 14 May 2011

காதல் தருணங்கள்!

மின்னற் பொழுதே தூரம்...
நின் கண் இமைத்தலே நேரம்...
கணத்தில் தோன்றிடுமே காதல்...
ஏன் வந்ததென்று தேடித் தேடி
ஒரு 'வைல் லூப்'பில் ஓடிடும் மனது...

சரிவான வீதியின் உயரத்தில் நீ...
உன் பின்னே கதிர் பரப்பும் சூரியன்...
நின் நிழல் என் முகம் விழ
சுண்டப்படும் என் மனது...

ஜாக்கிங் செய்யும் வேளைகள்...
காலை அரும்பிய நுனி இலை பனித்துளிகள்...
மூக்கினால் சுண்டி சிரிக்கிறாய்...
'இன்க்ரிடிபல் ஹல்க்' தூக்கி எறிந்தது போல
பறந்து போகிறது மனது...

உன் கைகளில் மட்டும்
பட்டாம்பூச்சி உறங்கும் மர்மம்...
உன் கைகளின் வாசமா
இல்லை உன் விரல்களின் மென்மையா...
குழம்பித் தொலைக்கும் மனது...

நீ சிரித்து சிரித்து பேசுகிறாய்...
பக்கத்திலிருப்பவர்கள் தங்களை
'செலெப்ரிட்டி'யாய் உணர்கிறார்கள்...
உன் பற்கள் தரும் 'பிளாஷ்' வெளிச்சம்...
'பிரஸ் மீட்' நடப்பதாய் நினைக்கும் மனது...

எனை நோக்கி நடந்து வரும் நேரம்...
முழு உலகமும் இருண்டு,
'மேட்ரிக்ஸ்' போல் மெதுவாக நகரும் கணங்கள்...
எங்கே உலகம் நின்று தொலைத்திடுமோ
என்று பயந்து சாகும் மனது...

'சிசிடிவி' போலே உனைக் கண்காணிக்கும்...
டிட்டக்டிவ்'ஆய் உன் பின் தொடரும்...
உன் செயல்களின் அழகு ரசிக்கும்...
இனிய காதல் தருணங்கள் உணரும்...
எந்தன் மனது...



Wednesday 9 March 2011

அரசியலாகி...

அது ஒரு சாக்கடை என்பர்,
போக வேண்டாம் என்பர்,
இல்லாமல் இருக்க முடியாது
என்றே நினைத்தும் கொள்வர்

பேச்செடுத்தாலே பச்சோந்தியாக்கும்,
உமை இரு வேறு கதை
பேசவைத்தே அழிக்கும்,
சத்தானியத்தின் மறுபிறவி.

அது ஒரு அழகாய்
இருந்தது ஒருக் கால்.
குணம் மாறிப் போனது
ரத்தவெறி மனிதர்களால்.

மாமன் மச்சான்
பங்காளி உறவு,
பெட்டி படுக்கை எடுத்தே
ஊர் விட்டு ஓடிப் போகும்.

அரசியலில் வன்முறை கூடாது
என்றதொரு கூட்டம்.
அரசில்யலை விட வேறென்ன வன்முறை
என்றது மற்றக் கூட்டம்.

அவசர அவசரமாய்
காசு பணம் சேர்க்கும்
ஊடகமாய் மாறிப் போனது,
தான் உருவான நோக்கம்
இழந்து நிர்வாணமாய் நின்றது

அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
அன்றே சொன்னான் மூத்தோன்
நம் தலைவன் நம் பிம்பம்
என்று கொண்டே
நம்மை நாம் திருத்தவில்லை

கிணத்துத் தவளைகளாய்
தலைவர்கள் இருந்தால்
நாடு முன்னேறும்
என்றே நினைப்பது மூடம்.

ஒருவரை ஒருவர்
விமர்சனங்கள் தவிர்த்து
ஒன்று கூடியே சமூகம்
முன்னேற்றப் பார்ப்பியா?

அதை விடுத்து உமை
கேள்வி கேட்க வைக்கிறீர்களே
"என்ன கிழித்தீர்கள்
அரசியலாகி?" என...



Sunday 6 March 2011

நான் பொய்யாகிப் போன மர்மம்

அழகிய நாளொன்றில்
உதித்தது அவ்வுறவு
உன் சோகங்கள்
துரத்த வந்த சந்தோஷம்
என்றுரைத்தது உன் உதடு

அனுபவம் தந்த துக்கம்
அழிக்க வந்ததொரு தென்றல்
நீயேதான் என்றபடி
உலகம் கேட்க நான்
சத்தமிட்ட எதிரொலி
மீண்டும் என் காது நோக்கி
வந்து சேர்ந்தது நேற்று

ஒரு மின்னற்பொழுதே காலம்
நம் நட்போ,
அதன் மேலான காதலோ
நிலைத்தது எனினும்
அதில் உண்டான மொட்டுக்கள்
பூக்ககும் நேரம் இது
எனத் தெரியாமல்
அழிக்க நேர்ந்தது ஏனோ?

என்னால் வந்த உறவு
எனக்கே துயரம் தர
முனைந்தது எப்படியோ?
நீ கூறாமல் நின்றாய்
ஒரு ஓரத்தில்
வானை நோக்கியே

வாழ்க்கை ஒரு புதிர்
விடை தெரியாக் கேள்விகள்
அது கேட்கும்
பதில் சொல்ல முயன்றோம் என்றால்
அகப்படுவோம் மீள முடியா வலை
எனத் தெரியாமல் சிக்குண்டேன்
நெல்மணி மணி தேடி வந்த
மாடப்புறா போலே

"என் வாழ்வில் வந்த
பொய் நீ" என்றாய்.
திக்கித்துப் போனேன்
சற்றைக்கெல்லாம்.
உன் சந்தோஷம் நானென
நான் எண்ணி
ஒரு மாயலோகத்தில் திளைத்திருந்தேனா
கடைசிவரை தெரியவில்லை

எங்கோ இருந்து சொல்கிறது
"காத்திருத்தல் தகும்" என
அப்பாவி மனச்சாட்சி.
ஏற்றுக் கொண்டே
ஒரு குன்றின் உச்சியில்,
விளிம்பில் உக்கார்ந்து
கால்களைத் தொங்கவிட்டு
நிலவை முகம் பார்த்து
காத்திருக்கத் தொடங்குகிறேன்

மீளமுடியா வலையில்
கேட்கப்பட்ட கேள்விக்கு
இதுவரை தெரியவில்லை
"நான் பொய்யாகிப் போன மர்மம்"



Friday 4 March 2011

அது ஒரு பீலிங்!!!

ஒரு காபி ஷாப். கொஞ்சம் பரந்து விரிந்த ஒரு காபி ஷாப். தெருவை நோக்கிய பக்கமாய் கண்ணாடியாலானா திரை. முழுக்க ஏ.சி செய்யப்பட்ட அந்தக் காபி ஷாப்பில் கண்ணாடித் திரை அருகில் தெருவை ரசிக்கும் முகமாய் மேஜைகளும் உண்டு. அவ்வாறான ஒரு மேஜை காபி ஷாப்பின் ஒரு கோர்னரில் இருக்கும். ஒரு பக்கம் கண்ணாடித் திரை. அது நைண்டி டிகிரி எடுத்து திரும்ப, வரும் பக்கம் பக்கத்துக் கடைக்கும் காபி ஷாப்புக்கும் இடையேயான பொதுச் சுவர். அந்த மூலை மேஜையில் சுவர்ப் பக்கம் முதுகைக் காட்டி வலப்பக்கம் இருக்கும் கண்ணாடித் திரையூடாக தெருவை ரசித்த படியே காபியை ஸிப் செய்ய தொடங்குகிறேன். அது ஒரு அழகான தெரு. இரு பெருந் தெருக்களை கணக்ட் பண்ணும் ஒரு குறுக்கு வீதி. ஆனாலும் வாகனங்களால் பாவிக்கப்படாத ஒரு தெரு. தெருவின் நடுவில் அழகான பூ மரங்கள். அல்லியம், அந்தூரியம், செர்ரி ப்ளாசம், கார்ன் ப்ளவர், டெய்சி, கேர்பேரா டெய்சி என ஏராளாமான பூ மரங்கள். சற்று சற்று தூரத்தில் நிழலுக்காய் ஒரு சில மரங்கள். தெருவிலே உதிர்ந்து கிடக்கும் பூக்கள், கொஞ்சம் இலைகள்.

அது ஒரு ரம்மியமான மாலை நேரம். பொதுவாகவே மனதில் தோன்றும் ஐந்து மணி. வான் முழுதும் சாம்பல் மேகங்கள் வெயிலை மறைத்துக் கொள்கின்றன. மழை வராது என்று தோன்றினாலும் ஒரு இதமான குளிர்க்காற்று வீசிக் கொண்டிருக்கிறது. ஐ.பாட் இல் 'யாரைக் கேட்டு எந்தன் நெஞ்சில் இடப் பக்கம் நீதான் நுழைந்தாயோ'வை சற்று அதிகமான வால்யூமில் வைக்கிறேன். மேஜையை விட்டு எழும்பி ஷாப்ப்பின் கதவைத் தள்ளி வெளியே வருகிறேன். காற்று உடலைத் தொடுகிறது. கைகளை அகல விரிக்கிறேன். கண்களை இறுக மூடி வானத்தை நோக்கி முகத்தை திருப்புகிறேன். அது ஒரு பீலிங். ஒரு அழகிய பீலிங். காதினுள் கேட்கும் அழகிய பாடல். சுற்றி எங்கும் ஒரு அழகிய அட்மாஸ்பியர்.

முகத்தில் சொரிகின்றன பூக்கள். என்னை கடக்கின்ற ஒவ்வொருவரும் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிடுகிறார்கள். அதில் எடை குறைந்து வானத்தில் பறக்கிறேன். மேகம் காலின் கீழ் வருகிறது. எனைத் தூக்கிச் செல்கிறது.
அது ஒரு பீலிங்!!!



Sunday 6 February 2011

மழை எதிர்ப்புக் கவிதை.

(அண்மையில் கிழக்கிலங்கையில் மழை காரணாமாய் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் நான் வடித்தது)

வறண்டு போன நிலங்களும்
புழுதி படிந்த தெருக்களும்
கனவாகிப் போன காலமாகுமோ.

நின்னில் காரிருள் கலைந்து
மீண்டும் உன்னழகு திரும்புமோ.

கிழக்கே,
சூட்டில் சுகம் கண்ட எமதுடல்கள்,
நடுங்கிச் சுருங்கிப் போயினவே.

செம்மண் பெருமை
சேற்றுச் சகதியாய் காலில் ஒட்டுதே.

வீரம் கொண்டு முறுக்கிய
மீசை நுனியில் பனித்துளி படருதே.

குளிரே வேண்டாமே...
முப்பது டிகிரியில் உன் கருணை அனுப்பேன்...