Sunday 26 December 2010

மன்மதன் அம்பு

எனக்கு புரியல. ஏன் எல்லாரும் மன்மதன் அம்பு'வ இந்த காட்டு காட்டறாங்க. கப்பல்ல ஒரு படம் எடுக்கிராங்கன்னா அதுக்காக கப்பலை மையமா வச்சுதான் கதை இருக்கணுமா என்ன. 'வ குவாட்டர் கட்டிங்'ல ஒருத்தர் கேப்பாரே "ஏன்யா எல்லாத்துக்கும் மெஸ்ஸேஜ் தேடிட்டு அலையுறீங்க" அப்படின்னு, அந்த மாதிரி இருக்கு. கமல் ஒரு திறமையான நடிகர். அதுக்காக அவரு பண்ற எல்லாப் படமுமே "ஆர்ட் பிலிம்" மாதிரித்தான் இருக்கணும்னா, பாவம் வயித்துப் பிழைப்புக்கு எங்க போவாரு. நான் அவரது தீவிர ரசிகன். எனக்கு என்னமோ தெரியல கமல் எது பண்ணாலும் பிடிக்குது. படங்கள சொன்னேன். ஏன் கமல் படம்னா "ஆ ஊ"னு ஒரு கூட்டம் கிளம்பிடுதோ தெரியல. எதுக்கெடுத்தாலும் பிரச்சினை. எதைப் பேசினாலும் பிரச்சினை. யார் கண்டது, மன்மதன் அம்பு'ல ஒரு டயலாக் வரும், "தமிழ விடுங்க, அது இனி மெல்லச் சாகும், நாம சாகாம இருந்த சரிதான்"னு சொல்லுற மாதிரி, இதுக்கும் ஏதும் அட்டாக் வாரல்லாம். அப்புறம் ஈழத் தமிழர் கேரக்டர் அவமதிக்கிற மாதிரி இருக்குனு சொல்றாங்க. இதை ஒரு இந்திய தமிழர் அல்லது வடிவேலு செஞ்சிருந்தா விழுது விழுந்து சிரிச்சிருப்போம்ல. இதான்யா நம்ம ப்ராப்ளமே. நகைச்சுவை உணர்வோடு எடுத்துக்க வேண்டிய விஷயங்கள சீரியஸ் ஆக பார்க்கிறோம்.

படம் முழுக்க முழுக்க ஐரோப்பாவில் மற்றும் ஒரு க்ரூஸ் கப்பலில். இதுலயும் ஒரு பிரச்சனை. எதுக்காக அவரு அங்க போய் படம் எடுக்கணும். எதுக்காக செலவளிக்கணும். என்ன ப்ராப்ளம்பா இது. கதையின் படி, த்ரிஷா ஒரு நடிகை. சங்கீதா அவங்க ஸ்கூல் ப்ரெண்ட். கவலையை மறக்க த்ரிஷா கொஞ்ச நாள் அவங்க கூட இருந்துட்டு வரலாம்னு அங்க போறாங்க. இந்த ட்ரிப் பத்தி சந்தேகப்படுற அவங்க 'வுட் பீ' மாதவன் அவங்களை கண்காணிக்க மேஜர் கமலை செட செய்து அனுப்புகிறார். ஸோ கமலும் யூரோப் போறாரு. இது யார் குற்றம், அங்க வாழுற சங்கீதா குற்றமா. அல்லது, பார்க்கப் போன த்ரிஷா குற்றமா. அல்லது, கமலை அனுப்பின மாதவன் குற்றமா. அல்லது இப்பிடி கதை எழுதின கமல் குற்றமா. அல்லது இதை ஏற்றுக் கொண்ட ப்ரோடியூசர் குற்றமா. அங்க லொக்கேஷன் செலக்ட் பண்ணின கேமரா மேன் மற்றும் டைரக்டர் குற்றமா? எல்லாத்துக்கும் மேல அனாவசிய செலவு பத்தி ஏன் கமல் படத்த மட்டும் பேசறீங்க. எந்திரனும் சேம் ட்ராக். ஒரு சாங்குக்காக வேண்டி உலகமே போகாத ஒரு இடத்துக்கு நாள் கணக்குல ட்ராவல் பண்ணி எதுக்கு போகணும்? :/

ஓகே, இத விடுவோம். லெட்ஸ் கம் டு தி பாயின்ட். படம் பார்த்தேன். கமலின் அல்ட்ரா யூனிக் காமெடி படங்களில் ஒன்று. வடிவேலுவின் அடி வாங்கும் படலம் மட்டும் ரசிக்கும் கண்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை. வார்த்தைகளை மட்டும் வைத்து வரும் காமெடி காட்சிகள் ஏராளம். த்ரிஷாவை விட சங்கீதா கூடுதல் அழகு. மாதவன் ஸ்கோர் பண்ணுகிறார். கமல் தன்னை முன்னிலை படுத்தாமல் மற்றவர்களுக்கு இடம் கொடுத்திருப்பது பெருந்தன்மை. மற்றும், கமல் பாடுவதை தவிர்த்திருக்கலாம். நீல வானம் பாடலில், ரிவர்ஸ் ப்ரேமிங் எனப்படும் யுக்தி அருமை. குடுமபத்துடன் போய் பார்க்கலாம்.

கதை, ரெண்டாவது பந்தியில் சொன்னது. மேலும் நண்பனின் கேன்சரை குணப்படுத்தும் செலவுக்காக செக்கியூரிட்டி ஏஜென்சி வைத்திருக்கும் கமல் இந்த வேலையை மாதவனிடத்தில் ஏற்றுக் கொள்கிறார், பின் தொடர்கிறார். த்ரிஷாவை பற்றி அவங்க நல்லவங்க என்று ஒரு கமல் கட்டத்தில் கமல் செர்டிபிகேட் கொடுக்க, அவரை உடனே திரும்பி வந்துவிடும்படி சொல்கிறார் மாதவன். அதே சமயம் பேசிய பணத்தை கமலுக்கு குடுக்கவும் மறுக்கிறார். காரணம், கமல் த்ரிஷாவை பற்றி மோசமான தகவல் எதையும் துப்பறியவில்லை என்பது. கமலுக்கும் அவசர பணத்தேவை இருப்பதால், த்ரிஷாவைப் பற்றி மோசமாகத் தகவல் குடுத்து மாதவனிடத்தில் காசை வாங்கிக் கொள்கிறார். இந்த நாடகங்கள் எப்படி முடிவுக்கு வந்தன என்பது இரண்டாவது பாதி.

படத்தைப் பார்த்து விட்டு நண்பன் ஒருவன் பேஸ்புக்கில் போட்ட ஸ்டேட்டஸ், "கமல் பிகர மாதவன் தூக்கிட்டுப் போனா அது 'அன்பே சிவம்'. மாதவன் பிகர கமல் தூக்கிட்டுப் போனா அது 'மன்மதன் அம்பு".

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போன எனற்கு, ஒரு அருமையான காமெடி படம் பார்த்த திருப்தி.



Saturday 25 December 2010

வளவளத்தாரின் கடை

ஊரின் ஒதுக்குப்புறத்திற்கும் மையத்திற்கும் ஒரு நேர்கோடு வரைந்து அதன் மையத்தை தெரிவு செய்தால் எங்கே வருமே அவ்வாறான ஒரு இடத்தில் அமைந்திருக்கும் வளவளத்தாரின் கடை. ஒரு மிகச் சாதாரண 'டீ' கடை. பக்கத்தில் ஊரில் இருந்த ஒரே ஒரு ஆலமரம் நிழல் தரும். அதில் தனது கடை பெஞ்சுகளை போட்டு வைத்திருப்பார். காலையில் முதல் வேலையாய் காக்காய்களுக்கு வடைத்துண்டு போடுவதாலோ என்னவோ பெஞ்சுகளில் காகங்களின் எச்சம் காணப்படுவதில்லை. காலை அஞ்சு மணிக்கெல்லாம் கடை திறந்துவிடும். பள்ளிகளில் தொழுது முடிந்து அங்கே ஒரு டீயுடன் அப்பம் சாப்பிடுவது அனைவரினதும் அன்றாடக் கடமை போலாகியது. அப்பாவுடன் போய் அங்கே ஒரு டீ குடித்துவிட்டு கடற்கரை போய் காலை நனைத்து விட்டு வீடு வருவது என் பால்ய வயதுப் பழக்கம்.

பொடிசுகள் எல்லாரும் மகன், மகள். என் அப்பா வயதுடைய எல்லோரும் தம்பி. அதற்கு மேற்பட்டவர்கள் நானாமார் என வளவளத்தாரிற்கு எக்கச்சக்க உறவினர். வளவளத்தாரின் பெயர்க்காரணம் கேட்டால் அவரே சொல்வார், "ஒண்டுமில்ல மன, நமக்கு சின்ன வயசில இருந்தே கொஞ்சம் கூடுதலா கேள்வி கேக்குற பழக்கம். எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து கேள்வி கேட்டு கேட்டு கொஞ்சம் கூடுதலா பேசத் தொடங்கிட்டன் போல." தன்னை மற்றவர்கள் மேற்குறிப்பிட்ட பட்டப் பெயர் கொண்டு கேலி செய்வது தெரிந்திருந்தும் மனசுக்குள் வைத்திருந்ததில்லை. தன்னை யாரும் பேசி விஞ்ச முடியாது என்று சொல்லிக்கொள்வார். "இதுவும் ஒரு பெரும தானே மன."

இத்தனைக்கும் அவரின் "டீ" ஊற்றும் கைப் பக்குவம் ஊரில் வேறு யாரிடமும் இருந்ததில்லை. அரசியல் பற்றி அவர் அளவளாவும் திறமையை பார்த்து "ஏன் இவர் அரசியல்வாதி ஆகவில்லை" என்று அப்பாவிடம் கேட்டிருக்கின்றேன். "அரசியல்ல இருக்கும் எல்லாரும் திறமையான, அரசியல் பற்றி நன்றாக தெரிஞ்சவங்கதானா?" என்று என்னிடம் பதில் கேட்டார் அப்பா. ரெண்டு நாட்களுக்கு ஒரு முறை புது வாழைப்பழக் குலை தொங்கும் கடையின் முன் பக்கத்தில். சிகரட் விற்றதில்லை. கடன் அன்பை முறிக்கும் என்ற போர்ட் இருந்ததில்லை. "பேங்க்ல இருக்குறத விடவும் என்ட கடைலதான் மன கூட அக்கவுன்ட் இருக்கு." இருந்தும் யாரும் அவரை ஏமாற்றியது கிடையாது. வாரம் ஒரு முறை கணக்கு செட்டில் செய்துவிடுவார்கள். சில பேருக்கு இலவச டீயும் கொடுப்பார். "ஒரு நாளைக்கு ஒரு வேள சாப்பாட்டுக்கே கஷ்டப்படுதுகள், காலைல முதல் வேளையாவது சந்தோஷமா சாப்பிடட்டுமே மன."

வளவளத்தார் என்ற பெயர் அவருக்கு கொஞ்சம் கூட சரியில்லை, மற்றவர்கள் அப்படிக் கூப்பிடுவது அவரை அவமதிக்கிற மாதிரி இருக்குப்பா, என்று சொல்லி இருக்கேன். அப்பாவும் அதை ஏற்றுக் கொள்வார். ஆனால், அதுதான் அவரின் அடையாளம். வளவளத்தார் என்றால் ஊர் முழுக்க தெரிந்திருந்தது. தான் வாசிக்கும் ஒற்றைப் பாதையைத் தவிர வேறு எதையும் தெரிந்திராத 'சகீனா' கிழவிக்கு கூட அவரது கடை தெரிந்திருந்தது. தனது பேரனை முதல் தடவையாக ஒரு பொருள் வாங்க வெளியே அனுப்பும் போது "அந்த மெயின் ரோட்டுல இருந்து மூணாவது சந்தில கிழக்குப் பக்கமா போற ரோட்டுல போனா ஒரு ஆல மரம் வரும். அதுக்கு பக்கத்துலதான் நம்மட வளவளத்தார்ட கட இருக்கு. அங்க போயி ஒரு நாலு அப்பம் வாங்கி வாடா" என்று சொல்லி அனுப்புவாள். இந்த "நம்மட" என்ற சொல் மூலம் அனைவரின் வீட்டிலும் ஒரு அங்கத்தவர் ஆனார் வளவளத்தார்.

அனைவரின் வீட்டுத் திருமணங்களிலும் அவரைக் காணலாம். இழுத்துப் போட்டுக் கொண்டு வேலை செய்வார். காசு பணம் எதிர்பார்ப்பதில்லை. "இதெல்லாம் மனத் திருப்திக்கு மன. என்ட பொண்டாட்டி உசுரோட இருந்து எனக்கும் புள்ள குட்டி இருந்திருந்தா நீங்க எல்லாம் வந்து உதவி செய்ய மாட்டிங்களா. அல்ப்பாய்சுல அவா செத்துப் போவா எண்டு எனக்கு முன்னாடியே தெரியலையே. அத விடு மன. உண்ட கல்யாணத்துக்கும் முதல் 'இன்டேசன்' எனக்குத்தான் சரியா?." 'இன்விடேஷன்' என்பதை சரியாக சொல்லுமளவிற்கு அவருக்கு ஆங்கில அறிவு இல்லை என்றாலும் அவருக்கும் ஒரு சில வெள்ளைக்கார நண்பர்கள் இருந்தார்கள். சும்மா ஊர் சுற்றிப் பார்க்க வந்தவர்களுக்கு இவரின் டீ பிடித்துப் போக, இவருடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். கொஞ்ச நாளையில், இங்கிலாந்திலிருந்து அந்த போட்டோவும் ஒரு வாட்சும் அவரது கடைக்கு வந்தது. "வெள்ளைக்காரன், வெள்ளக்காரன்தான் மன. சொல்லி வேல இல்ல" என்றார்.

சிறிது நாளையில் மேற்படிப்புக்காக வெளியூர் வந்துவிட்டேன். செமஸ்டர் இறுதிப் பரீட்சை நடந்து கொண்டிருந்த சமயம், தொலைபேசியில் அம்மா சொன்னாள், அவர் மாலை இறந்துவிட்டதாக. சாதாரணமாக தூங்கும்போதே இறந்திருந்ததாக. அவரை அடக்குவதற்காக ஊரே கூடியிருந்ததாக தம்பி சொன்னான். இது எதிர்பார்த்ததே என எண்ணிக்கொண்டேன்.

ஊர் போயிருந்த நேரம், அவர் கடைக்கு சென்று பார்த்தேன். கடைக்கு கதவு இருக்கவில்லை. உள்ளே, ஒரு சிலர் படுத்திருந்தனர். அதே சமயம் அவ்வழியால் வந்த மாமா சொன்னார், "அவரு உயில்ல இப்பிடித்தான் எழுதி இருந்தாராம். கஷ்டப்படுற ஆக்களுக்கு கொஞ்ச நாளைக்கு கடை கதவை திறந்து வைங்க எண்டு"

வளவளத்தார் ஒரு உயர்ந்தவர்தான் என சொல்லிக் கொண்டேன்.



Monday 15 November 2010

பேஸ்புக்கும் காதல்களும் - 3

ஓகே, எழுதி ரொம்ப நாளாச்சுல... ஸோ, இப்போ கொஞ்சம் வேற ட்ராக்ல போக போகுது...

ஒருவரது எழுத்துத் திறனை பார்த்து லவ் பண்ற கருமம்தான் இந்த சோஷியல் நெட்வொர்கிங் எனும் தளங்களும், தகவல் தொழிநுட்ப புரட்சியின் கிழங்களான ஈமெயில் மற்றும் சாட்டிங் இவ்வுலகுக்குத் தந்த தலைவலிகள். இதுல என்ன ப்ராப்ளம்னா, லவ்னா என்னான்னு புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல்கள். நிறைய பேருக்கு முதல் காதல் தோல்வியில் முடிவடைவதுக்கு இதுதான் மெயின் மேட்டரே. ஒரு பொண்ணு சூப்பரா பேசுறா அல்லது ஒரு பையன் செம ஸ்டைலா பைக் ஓட்டறான் என்கிறதுக்காக காலம் பூரா கூடவே வச்சிக்கனும்னு ஆசைப்படலாமா? நீங்க என்ன அவவ உங்க முன்னால உக்கார வச்சி நியூஸ் வாசிக்க சொல்லப் போறிங்களா அல்லது அவர் கூட பின்னாடி உக்கார்ந்து லைப் பூரா பைக் சவாரி போக போறிங்களா? வாழனும் பாஸ். அதுக்கு நிறைய விஷயம் பாக்கணும்.

சரி, இதுல இன்னொரு டைப் குரூப் இருக்கு. 'எவன் லவ் பண்ணுவான், எல்லாம் ஒரு டைம் பாஸுக்குதான் மச்சி' சொல்ற ஒரு கூட்டம். இதுங்கதான் ப்ராப்ளம். ஒண்ணுமே பண்ண முடியாது. ரொம்ப அட்ரக்டிவ் ஆனா விஷயங்கள் இவங்ககிட்ட இருக்கும். உதாரணமா பூச்சிய சாப்பிடுற தாவரங்கள் பற்றி படிச்சு இருப்பீங்க. ரொம்ப கவர்ச்சியா இருக்கும். மாட்டினா மவனே, சங்குதான். :)

காதல், ஒருத்தங்க மேல வர்றதுக்கு ஆயிரம் காரணம் இருக்கும். முதல் காரணம் மூலமா வாறது வெறும் கவர்ச்சி. அப்றோம் அது டெவலப் ஆகி புதுசு புதுசா காரணங்களைஉருவாக்கிக்கும். இப்டித்தான் லவ் கிரியேட் ஆவுது.
இதுல பேஸ்புக்ல ஸ்டார்ட் ஆவுற லவ் கருமம் எதனால வாருதுங்கறது புரியாத புதிர். ஒருத்தங்க போட்டோ பார்த்து லவ் பண்ண நாம இன்னும் பாட்டி காலத்திலேயா இருக்கோம்.

-டு பி கண்டிநியூட்-



Sunday 31 October 2010

பேஸ்புக்கும் காதல்களும் - 2

ஓகே... இலை வந்திடுச்சு. இங்கேதான் நமது கடலை (ப்ளேர்ட்டிங்) போடும் திறமை கை கொடுக்கும். அடிக்கடி அவங்க ப்ரோபைலை விசிட் அடிப்போம். நிஜத்திலே காதலி வீட்டை சுத்தி சுத்தி வாற மாதிரி. ஆனா, பேஸ்புக்ல இப்பிடி எல்லா பொண்ணுங்க அல்லது பசங்க ப்ரோபைல்ஸையும் நோட்டம விடுவோம். ஏதாவது ஒண்ணு மாட்டும் என்கிற நம்பிக்கைல. ப்ளேர்ட்டிங்னாலே, நீதி நேர்மை தர்மம் எல்லாம் இருக்கக் கூடாதுன்னு ஒரு ரூல் இருக்கு. ஸோ, சில பேர் எப்டியோ பொண்ணுங்க/பசங்க மனசுல இடம் பிடிக்கணும் என்கிறத மட்டுமோ முதல் நோக்கமா வைப்பாங்க. அதுக்காக சிஸ்டர்/பிரதர் என்று கூப்பிட கூட தயங்கமாட்டாங்க. அப்பால அந்த ரிலேஷன்ஷிப்பை பெயர் மாத்திக்கலாம் என்கிற ஒரு தொலை நோக்குப் பார்வை அவங்ககிட்ட இருக்கும். இவங்க ஜெகஜாலக் கில்லாடிங்க. ஏன்னா நிஜமா ஒரு பொண்ண மட்டும் ட்ரை பண்றவந்தான் காலம் பூரா உண்மையா இருப்பான் என்கிறது எழுதப்படாத விதி. ஒரு படத்துல விஷால் சொல்வாரு, "வேலைக்குப் போகணும்னா ரெண்டு மூணு இடத்துல அப்ளிகேஷன் போடறதில்ல? அது மாதிரி நானும் ரெண்டு மூணு பேருக்கு போட்டு ஒருத்திய வாழ்க்கைத் துனையாக்கிக்குவேன்." இது எவ்ளோ லூசுத்தனமான ஒரு பாயின்ட். அப்ளிகேஷன் போடறதுன்னா, இங்க பொண்ணுங்ககிட்ட ப்ரொபோஸ் பண்றதுதான் வரும். பொண்ணுங்க ஓகே சொல்லிட்டா அவரு வேலைக்கு போறாருன்னு அர்த்தம். ஸோ அவரு அதுல ஒரு பொண்ணைத்தான் லவ் பண்ணியிருக்கணும். ஒரே டைம்ல ரெண்டு மூணு வேலைக்கு போறதில்லையே. ஆனா, அப்பிடி போகணும்னு ஆசைப் பட்டீங்கன்னா நீங்கதான் ப்ளேர்ட்டர்.

சரி, இப்போ அந்த பொண்ண மடக்கணும்னு ஆசைப்படுவீங்க. ஒரு பர்சனல் மெசேஜ் தட்டி விடுவீங்க, "ஹை, யு லுக்கிங் ஸோ பியூட்டிபுல் இன் யுவர் ப்ரோபைல் பிக்சர் யார். அண்ட் ஐ காட் டு நோ யுவர் கேரக்டர் ப்ரோம் யுவர் இன்போ. ஐ லைக் இட் வெரி மச் மா". கொஞ்ச நாளைக்கு மெசேஜ் நாட்டிபிகேஷன் "1" என்று ரெட் கலர்ல ப்ளின்க் பண்ணாதானு ஏங்கும். அவ என்ன போஸ்ட் அவ வால்ல ஷேயார் பண்ணினாலும் அதை போய் லைக் பண்ணி, "ஒவ்ஸம்"னு அடிச்சி வைப்பீங்க. கருமாந்திரம் புடிச்ச யூடியூப் வீடியோ போட்டாலும் அதே மாதிரியே. அவகிட்ட இருந்து ரிப்ளை வரும். இப்போ உங்க கடலை பிசினஸ் ஸ்டார்ட் ஆகும். ரொம்ப பொறுமைசாலி சார் நீங்க. சாவகாசமா பதில் அனுப்புவீங்க. குடும்பம், பேமிலி, அம்மா அப்பா இப்பிடி ஒரே மேட்டர வேற வேற மாதிரி கேள்வி கேட்டு குட்டைய குழப்புவிங்க. அவங்க போட்டோஸ் கேப்பீங்க.

"எனக்கு மட்டும் பெர்சனலா பார்க்க கூடிய மாதிரி ஒரு பிக் அனுப்பேன், ப்ளீஸ்."
"வாட்? வாட் டு யூ மீன்?"
"நோ நோ, நான் அப்பிடி சொல்லல, உன் அழகை நாள் புல்லா பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு"
"உன் முகம் அழகா இருக்கற போட்டோ ஒண்ணு எனக்கு வேணும்னு தோணுது."
"அப்போ மத்த போடோஸ்ல நான் அழகாய் இல்லியா?"
"ஐயோ நான் அப்பிடி சொல்லலமா. நீ எப்பவுமே அழகு. உன் முகம் ஒவ்வொரு கோணத்தில இருந்து பார்க்கும் போதும் ஒரு வித்தியாசமான அழகு. உனக்கு, நீ வச்சிருக்கற பிக்சர்ஸ்ல எது பெஸ்ட்னு தோணுதோ அத எனக்கு அனுப்பேன் ப்ளீஸ். முடியாதுன்னு மட்டும் சொல்லாத"
"ஓகே, ட்ரை பண்றேன்"
"ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்"
"ஓகே ஓகே வழியாத"
"தேங்க்ஸ்டி, ம்வாஹ்ஸ் (கிஸ் பண்ற சவுண்ட்)"

உங்க மனசு பத்திக்கும். உள்ளுக்குள்ள இருந்து சவுண்ட் போடும். "வாவ், நீ கேட்ட உடனேயே அனுப்பறாளே, அப்போ இது அதுதானா?." நீங்களும் 'எஸ் எஸ்'னு வாரணம் ஆயிரத்துல சமீராரெட்டிய சூர்யா கண்ட உடனே சூர்யா நெஞ்சை தட்டிக் கொடுப்பது போலே பண்ணிக்குவீங்க. மனசு பறந்து போகும்.

இப்போ உங்க சைட்ல ரெண்டு பாயின்ட் ஒப் வியூ...
1. நீங்க நிஜமாவே லவ் பண்றீங்க, உங்க ப்ரெண்ட்ஸ் எல்லாரிடமும் இவா பத்தி சொல்விங்க. செம ஹப்பியா அவ பத்தி பேசிட்டே இருப்பீங்க.
2. நீங்க ப்ளேர்ட் பண்றீங்க, உங்க ப்ரெண்ட்ஸ்ட "மச்சான் புதுசா ஒண்ணு சிக்கிடிச்சு"னு சொல்வீங்க. எல்லார்ட்டயும் அவ ப்ரோபைல் நேம் குடுத்து அட் பண்ணிக்க சொல்வீங்க. அல்லது, உங்க ப்ரெண்ட்ஸ் யாருக்கும் இந்த மேட்டர் சுத்தமா தெரியாத மாதிரி பார்த்துக்குவீங்க.

எதிர் சைட்ல ரெண்டு பாயின்ட் ஒப் வியூ...
1. மேலே சொன்ன ரெண்டும் ப்ளஸ் அவங்க எல்லார்க்கும் கேட்ட உடனேயே போட்டோ அனுப்பற ஒரு கேரக்டர்.
2. அவங்களுக்கு நீங்கதான் பேஸ்புக் மூலமா கிடைச்ச எப்போதும் டச்ல இருக்கும் முதல் ப்ரெண்ட்.


--டு பி கன்டிநியூட்--



Saturday 30 October 2010

பேஸ்புக்கும் காதல்களும்

எங்க இருந்து, எப்பிடி தொடங்குவது என்றெல்லாம் தெரியல... நவீன, டெக்னாலஜி உலகின் பிரதான பிறப்புகளில் ஒன்று சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்கள். இதில் கெட்டிக்காரப் பிள்ளை 'பேஸ்புக்'. நம்பர் 1 தளமான இது இன்றைய இளைஞர்களின் மிக முக்கியத் தேவை. ஒரு மொபைல் போன், மோட்டர்பைக் கணக்காய் இதுவும் நமது ஐடண்டி. புதிதாக அறிமுகமாகும் ப்ரெண்ட்ஸிடம் மொபைல் நம்பர் இருக்கா, ஈமெயில் ஐ.டி. இருக்கானு கேட்ட காலம் போய் கொஞ்ச வருஷமாக பேஸ்புக் ஐ.டி. இருக்கானுதான் எல்லாரும் கேட்டிட்டு இருக்காங்க. பேஸ்புக் தொடங்கப்பட்டது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்த நண்பர்களுடன் தொடர்புகளை கன்டினியூ செய்ய. ஆனால், இது இப்போதைய ப்லேர்ட்டர்களுக்கு ஒரு கிப்ட். அது கிடக்கட்டும், அது என்ன ப்லேர்ட்டர்? இதுதான் இப்போதைய ட்ரெண்ட்டு மாமே. லவ், கிவ் எல்லாம் அந்தக் காலம். ப்லேர்ட்டிங் என்பது 'தனது எதிர்ப்பாலை தன் மீது ஆசை கொள்ள நாம் மேற்கொள்ளும் முயற்சி' என்று விக்கிபீடியா சொல்லுது. எதிர்ப்பால் மட்டுமே என்ற சமாச்சாரம் தற்போது இல்லை என்று ஆர்கியு பண்ணுபவர்கள், அதை 'இன்னொரு நபரை' என்று படிக்கவும்.

சரி மேட்டருக்கு வருவோம். கொஞ்ச நாள் முன்னாடி என் நண்பர்கள் சேந்து பேஸ்புக் பற்றி ஒரு சர்வே பண்ணினாங்க. அதில அவங்க கண்டுபிடிச்ச ஒரு முக்கியமான விஷயம், 'கொழும்பில் இருப்பவர்கள் அப்டேட் செய்யும் ஸ்டேட்டஸ்களில் அதிகமானது லவ் பற்றியது.' இதில் வேடிக்கையான விஷயம் என்னன்னா, நான் அறிந்து, என் நண்பர் வட்டத்தில் பேஸ்புக்கில் அறிமுகமானவர்களை லவ் பண்ணி அதுல சக்சஸ் ஆனவங்க மூணு பேர். இதில இதை நம்பி நேரம் லாஸ் ஆனவர்களில் நானும் ஒருவன். அப்படியானவர்களுக்காய் இந்தப் போஸ்ட் டெடிகேட் செய்யப்படுகிறது...

சபாஹ், ஒரு வழியாய் இன்ட்ரோ முடிச்சாச்சு.

சரி, இப்போ பேஸ்புக் காதல்களின் முதல் ஸ்டேஜ் எப்டி உருவாகுதுன்னு பார்ப்போம். முதலாவது நீங்க என்ன பண்ணுவீங்கன்னா, நல்ல நல்ல அழகான ப்ரோபைல் பிக்சர் உள்ள பொண்ணுங்க அல்லது பசங்களா பார்த்து அட் பண்ணிக்குவீங்க. இதுல அவங்க 'இன்ஃபோ' பகுதியில் அவங்களை பத்தி எழுதியிருக்கும் 'ஊரான் வீட்டு வசனங்கள்/மேற்கோள்கள்' அல்லது 'நான் இப்பிடித்தான், உனக்கு பிடிச்சிருந்தா இரி இல்லாட்டி கண்ண மூடிட்டு போய்க்கின்னே இரு' என்கிற மாதிரியாக அவர்கள் போட்டுவைத்த எழுத்துக்கள் ஈர்க்கும். ஆஹா, சூப்பரா இருக்குதே இவன்/இவள் கேரக்டர்னு நெனச்சி 'அட் அஸ் எ ப்ரெண்ட்' பட்டனை தட்டி விடுவீங்க. கொஞ்ச நேரத்துல, 'அக்செப்டட்'னு ஒரு நாட்டிபிகேஷன் வந்த உடனேயே மனசுகுள்ள ஒரு சின்ன வித்து விழுந்து முளைச்சு சின்னதா ஒரு இலை விடும்.

--டு பி கன்டிநியூட்--



Thursday 28 October 2010

Why I hate wedding?

இணையத்தில் ரசித்தது இது... என் சுய ஆக்கமில்லை...



கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான். இப்பதாண்டா எதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது.

வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது. பொண்டாட்டி முன்னாடி இப்படி சொல்லிட்டு,அவங்க Kitchen உள்ள போனவுடனே , கையெடுத்து கும்புட்டு தயவு செஞ்சு அந்த தப்ப மட்டும் பண்ணி மாட்டிக்காத மச்சின்னு கெஞ்சற நண்பன்....


எவ்ளோ நிம்மதியா இருந்தேன்..கல்யாணத்த பண்ணி வெச்சு என்ன என் புருசனுக்கு அடிமையாக்கிட்டாங்க, என் தோழி ஒருத்தி...


தம்பி அடுத்த வருஷம் ஜூன்'குள்ள கல்யாணத்த முடிசிரனும்டா. நல்ல பொண்ணு கிடைச்சுதுன்னா விட்ற கூடாது, என் அம்மா...

டேய் கல்யாணத்துக்கு நெறைய செலவாகும். வழக்கம் போல பெருந்தன்மையா நீங்களே பார்துகங்கப்பானு சொல்லிட்டு போய்டாத. மரியாதையா காச சேர்த்து வை, என் அப்பா...

சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா. காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ் போடலாம்னு நானும் ரெண்டு வருசமா வெயிட் பன்றேனு சொல்லிட்டு, மூதேவி இதுவும் பண்ணிக்கமட்டேன்குது எனக்கும் பண்ணி வெக்க மாட்டேன்குதுன்னு மனசுக்குள்ள முனுமுனுக்கற என் தங்கச்சி...

கல்யாணம்லாம் சும்மா பிரதர், வெத்து மேட்டரு, ஒன்னும் இல்ல அதுல, பார்ல சிகரட் ஓசி வாங்குன கடனுக்கு அட்வைஸ் பண்ண வஸ்தாது ஒருத்தர்.

கல்யாணம்... கல்யாணம்... கல்யாணம் ...

25 or 27 வது வயசுல ஒரு பிரம்மச்சாரியை லேசா பயமுறுத்தி அதிகமா பதட்டபடுத்தி கொஞ்சமா ஷாக் அடிக்க வைக்கற ஒரு வார்த்த. அப்டி என்னதாங்க இருக்கு இந்த கல்யாணத்துல...

முதல் 3 மாதம் திடீர்னு ஒரு நாள் ஒரு பொண்ணு பொண்டாட்டிங்க்ற பேர்ல உங்க வீட்டுகுள்ள வருவா...

பின்னாடி ஒரு கூட்டமே வந்து விட்டுட்டு போகும்...

பீரோகுள்ள உங்க துணிய நகர்த்தி வெச்சுட்டு அவங்க துணிய அடுகிக்குவாங்க‌. உங்க பாத்ரூம்ல அவங்க சோப்பும் ப்ரச்சும் எடத்த புடிச்சுக்கும். அடுத்த நாள் ஆபீஸ் போகும்போது சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்கன்னு குழைஞ்சு குழைஞ்சு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே சொல்லுவாங்க‌. ஊர்ல டம்மி பிகர் கூட மதிக்காத நம்மள இந்த புள்ளைக்கு இவ்ளோ புடிசிருகேன்னு நம்மளும் வழிஞ்சுகிட்டே சீக்கிரம் வர ஆரம்பிப்போம்... (இது அடிமையாகுதலின் முதல் கட்டம்)

அப்பறம் உங்கள அடிமையாக்கரதுக்கு, உண்டான பணிகள் வேகம் வேகமா கனஜோர்ல நடக்கும்.

(அவங்க கூட படிச்ச வில்லிங்கல்லாம் வேற இதுக்கு ரூம் போட்டு ஐடியா குடுப்பாங்க‌)

மற்றொரு அழகான மாலை பொழுதுல புது பொண்டாட்டிய ஷாப்பிங் கூட்டிட்டு போவீங்க. அவங்க 3 வருசமா வாங்க நெனச்சு வாங்காம இருந்த எல்லாத்தையும் அப்பதான் வாங்குவாங்க‌...

அவங்க வாங்கற நெய்ல் பாளிஷ்க்கும் பாடி ஸ்ப்ரேக்கும் நீங்க தெண்டம் அழுகனும். கான்டாதான் இருக்கும், என்ன பண்றது...

அவங்களோட ஒவ்வொரு சினுங்களுக்கும் கிரெடிட் கார்ட் கிழிய கிழிய தேய் தேய்னு தேய்ப்போம். பில்லு எகிர்றது பார்த்து மனசு பதர்னாலும் உதடு வேற என்ன வேணும் என் செல்லகுட்டிக்குன்னு கேக்கும்...


வீட்டுக்கு விருந்தாளிங்க்ற பேர்ல வந்து டேரா போன்ற அவங்கப்பன் விருமாண்டி கிட்ட கூட பாசமா நடந்துகுவோம்... (எல்லாம் நடிப்புதேன். எந்த ஊர்ல மாப்பிள்ளைக்கு அவன் மாமனார புடிச்சிருக்கு)

கொஞ்சம் கொஞ்சமா நீங்க நீ'யாயிட்டு வருவீங்க...

ஆறு மாசம் ஓடிடும். அதுக்கப்றம் எங்க ஒய் இருக்கு உமக்கு வாழ்க்கை. அடிமை ஒய் நீரு...

பிரென்ட் ரூம்ல போய் விடிய விடிய கதையடிச்சிட்டு பேசுற‌ சுகம் அதுக்கப்றம் கனவாவே போய்டும். எங்க போறோம், எதுக்கு போறோம்னு தெரியாம எங்கெங்கயோ போன தருணங்கள் மனசுக்குள்ள வெறும் நினைவுகளா மட்டுமே இருக்கும்...

எந்த பொண்ண பார்த்தாலும் நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளோ, அப்டி இருப்பாளோங்கற அந்த curiosity சுத்தமா இருக்காது. செகண்ட் ஷோ சினிமா கட் ஆகும். குஷி ஆனா அடிக்கற பீர், தம்[எப்போவாவது] கட் ஆகும். நிம்மதியா செலவு பண்ற சுதந்திரம் கட் ஆகும்...

என்ன கொடும சார் இது...

இதுக்குதான் இந்த கருமம் புடிச்ச கல்யாணத்த வேண்டாம்ன்னு சொல்லுறேன்...

வாழ்க்கைல சந்தோஷமான தருணம் bachelor life மட்டும்தான்னு எனக்கு தோனுது...

நீங்க என்ன நெனைக்கறீங்க?




Wednesday 29 September 2010

மேகத்தில் ஒரு கம்பனி!

இது எனது நண்பன் மின்னிக்ஸ்ஸின் ப்ளாக் போஸ்ட்... அப்படியே காப்பி அண்ட் பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது...


ஹேய் ப்ரெண்ட்ஸ்! இன்னும் இந்த ப்ளாக் அப்டேட்டாகும்னு யாராச்சும் நம்பிட்டு இருக்கிறீங்களா? அப்டீன்னா ரொம்ப நல்லவருதான் நீங்க! ரெண்டு மாசமாகுது லாஸ்ட் போஸ்ட் எழுதி! எழுதவே டைம் இல்ல... அவ்ளோ பிசின்னு பொய் சொல்ல விரும்பல்ல! ப்ளாக் எழுதுற மூட் இல்ல! அதான் மேட்டர்!

லாஸ்ட் ரெண்டு மாசமா விஜய் படம் மாதிரி தொடர் தோல்விகள்தான்! முதல் காதல்... முதல் தோல்வி... பேஸ்புக் லவ் பேஸ்புக்காலேயே முறிஞ்சிடுச்சு! அதையே... அவளையே நெனச்சு நெனச்சு ஃபீல் பண்ணிக்கிட்டு கெடந்ததுல அசைன்மென்ட், ப்ராஜெக்ட் எல்லாம் ஊத்திகிச்சு! உடைஞ்சிபோன இதயம், ஊத்திக்கிட்ட அசைன்மென்ட், ப்ராஜெக்ட் எல்லாம் பிக்ஸ் பண்ணினதுல ரெண்டு மாசம் ஓடிடுச்சு! இப்போ கொஞ்சம் பரவால்ல!

ஆல்றைட்! இப்போ டைட்டில் மேட்டருக்கு வருவோம். நாங்க ஒரு கம்பனி ஸ்டார்ட் பண்ணி இருக்கோம்! "வாட்? கம்பனியா? அத ஏதோ பப்பிள்கம் சாப்பிட்ட மாதிரி சிம்பிளா சொல்லுறே?" எண்டுதான் நீங்க கேப்பீங்க! நம்புங்க பாஸ்! காமடி கீமடி பண்ணல... நிஜமாவேதான்!

இந்த ஸ்டோரி கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கு முன்னால நான் என் ப்ரெண்ட் முறுவோடரூமுக்கு விசிட் அடிச்சதுல இருந்து தொடங்குது... நள்ளிரவு நேரம் அப்பிடியே நெட்ல ப்ரவ்ஸ் பண்ணிட்டு பேசிகிட்டே இருந்ததுல இந்த சொந்தக் கம்பனி ஸ்டார்ட் பண்ணுற (சொந்த செலவுல சூனியம் வெச்சுகுற) ஐடியா க்ளிக்காவிச்சு! என்ன கம்பனி? ஒருக்ளவ்ட் கம்பனி! அதாவது வெப்சைட் மற்றும் வெப் அப்ஸ் க்ரியேட் பண்ணுற கம்பனி! கொஞ்சம் கவித்துவமா சொல்லப்போனா மேகத்தில் ஒரு கம்பனி! (ஒருவழியா டைட்டில கனெக்ட் பண்ணிட்டேன்!)

கம்பனி ஏன்டா அதுக்கு ஒரு பேரு, ஒரு லோகோ வேணும்ல? அதுக்கு ரூம் போட்டு யோசிச்சோம்! ஆமா நிஜமாவே ரூம்ல இருந்துதான் யோசிச்சோம்! நெறைய பேரு ட்ரை பண்ணி கடைசியில அக்ஸரா என்ட பேரு கெட்சியா இருந்துச்சின்னு செலக்ட் பண்ணினோம்! கம்பனி பேருக்கும் கமல் மகளுக்கும் (?!) சத்தியமா எந்தத் தொடர்பும் இல்லீங்க! பேரு ஓகே! அப்புறம் கம்பனி லோகோ டிசைன் பண்ணனுமே... நெட்ல அலைஞ்சுதிரிஞ்சு (?!) நெறைய ஃபொன்ட்ஸ் டவுன்லோட் பண்ணி... நெறைய கலர்ஸ் ட்ரை பண்ணி... ஒருவழியா லோகோவும் ஓகே! அப்படியே கம்பனி வெப்சைட்டையும் க்ரியேட் பண்ணியாச்சு! இதெல்லாம் முடிய ஒரு ஆறு மாசம் ஓடிடுச்சி! அடுத்து டொமைன் நேம் வாங்கி ஹோஸ்ட் பண்ணிட வேண்டியதுதான்னு போனா அந்த நேம் அவைலபிள் இல்லியாம்! சரியாப்போச்சி! அப்பிடியே எல்லாத்தையும் போட்டுட்டு எங்க சொந்த சோகத்துல (?!) மூழ்கிட்டோம்!

அப்புறம் நாங்க இன்னும் கொஞ்ச ப்ரெண்ட்ஸ் வந்து சேந்தாங்க... முறு திரும்பவும் கம்பனி ஐடியாவ தூசு தட்டி எடுத்தான். அக்ஸரா என்கிற நேம் பிடிக்கல்ல... ச்சேன்ஞ் பண்ணனும் என்டான்! திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிச்சோம்! இந்தவாட்டி நியோ (புதிய) என்கிற க்ரீக் வேர்ட் மற்றும் நொரா (ஒளி) என்கிற அரபிக் வேர்ட் ரெண்டையும் மிக்ஸ் பண்ணி நியோநொரா எண்டு பேரு வெச்சோம்! ஒரு கலர்புல்லான லோகோவையும் ரெடி பண்ணினோம்! அப்புறம் வெப்சைட்டும் ரெடி! டொமைன் நேம் கூட அவைலபிள்! எங்ககிட்ட அத வாங்க பணம் இருக்கு, ஆனா க்ரெடிட் கார்ட்தான் இல்ல! இதுவும் சரிப்படாதோன்னு தோணிச்சு! கடைசியில என்  ப்ரெண்ட் ஒருத்தன் ஹெல்ப் பண்ணினான்! அவ்ளோதான்! உடனே சட்டுப்புட்டென்னு நானும் முறுவும் மீட் பண்ணின இடம் கேஃஎப்சி!

ஆமா, கேஃஎப்சி கோழிக்கடைல (?!) வச்சுதான் வெப்சைட் லாஞ் பண்ணினோம்! அது மழை தூறிக்கொண்டிருந்த செப்டெம்பர் மாதம் 27ம் நாள். கிட்டத்தட்ட ஒரு வருசக்கனவு நனவாயிடுச்சி! மேகங்களின் மேல் இன்னும் எவ்ளோ கனவுகள் இருக்கு! இந்தக் கனவுகளைத் துரத்துறது எவ்ளோ சந்தோசமான விஷயம் தெரியுமா?



Thursday 12 August 2010

சர்வைவல் ஒப்ஃ தி பிஃட்டஸ்ட்

நண்பனின் போஃனும் காதலியின் மொபைலும் ஒரே நேரத்தில் சுவிட்ச்ட் ஆப்ஃபில் இருந்தால் கூட தோன்றாதஒரு பயம் இருவரின் மொபைல்ஸும் கோல் வெயிட்டிங் இருக்கும் போது தோன்றிக் கொள்கிறது. இங்கும் மறைமுகமாக அப்ளை ஆகிறது 'சர்வைவல் ஒப்ஃ தி பிஃட்டஸ்ட்' தியரி.

இங்கு இதைப் பற்றிப் பேசி வாங்கிக் கட்டிக்க விரும்பலை.


ஒரு சின்ன, மீன் கதை.


நான், அப்பா, கிராண்ட் பா மற்றும் மாமா எல்லோரும் சற்று புதுமை விரும்பிகள். புதுசா ஒரு விஷயம் ட்ரை பண்ணி பாக்கணும்னு காசை வாரி இறைப்போம். அப்டி ஆரம்பிச்சது வீட்டின் முன்புறம் ஏற்படுத்தப்பட்ட ரியல் அக்குவாரியம். பல ஆயிரங்கள் செலவளித்ததாக தாத்தா சொல்லி இருந்தாலும் அப்பாவுக்கு அது லட்சங்கலாயிற்று என்று டவுட் இருக்கவே செய்தது. நீர்வீழ்ச்சி, ஆக்சிஜன் சப்ளையர்ஸ், மலைகள், ஸ்டோன்ஸ் மற்றும் கடல் தாவரங்கள் என சைட் பிட்டிங்க்ஸ் வாங்கும் பொறுப்பு தாத்தாவிடமும், மீன்கள் சஜ்ஜஸ்ட் செய்யும் பொறுப்பு எனக்கும் தம்பி மாருக்கும் விடப்பட்டிருந்தது. ராப் பகலாக கூகிள் மற்றும் எக்ஸ்பெர்ட்ஸ் வாசல் படிகளில் கிடந்திருந்தோம். வாயில் பெயர் நுழையாத மீன்கள் எல்லாம் வாங்கப் பட்டன. சில மீன்கள் டேன்க் சைஸுக்கு ஏற்ப தமது அளவை மாற்றிக் கொள்ளுமாம் என்றார்கள். வாங்கிப் போட்டோம். சிறிய டேன்க்கில் இருந்து பெரிய டேன்க் போகும் போது பெரிசாவது ஓகே, ஆனா பெரிசிலிருந்து சிறிசுக்கு வரும்போது எப்படி சிறிதாக்கிக் கொள்ளும் என்று எனக்கு டவுட் தோன்றினாலும் அது செத்துப் போய்விடுமோ என்ற பயத்தில் எக்ஸ்பெரிமன்ட் செய்து பார்க்கவில்லை. இந்தப் பயத்தையே இவர்கள் வியாபார யுக்தியாக யூஸ் பண்ணிக்கொண்டிருக்கக் கூடும் என்று தம்பி சொன்னான்.


ஒரு 50 விதமான இனங்கள் வாங்கிய பின்னரே தாகம் தீர்ந்தது. இத்தனைக்கும் மீனைக் கையால் பிடிப்பதென்றாலே சுச்சா போகும் எனக்கு. ஒரு 'டேன்க் கிளீனர்' இன மீனைப் பிடிக்கப் போய் அது தனது மறைத்து வைத்திருந்த முள்ளால் இடித்து விட தொற்றிக் கொண்டது "மீனோ போஃபியா" அல்லது "பிஃஷ்ஷோ போஃபியா". அன்றிரவு கனவில் நான் சாப்பிடும் சாப்பாட்டில் கூட டேன்க் கிளீனர் உயிரோடு துடித்துக் கொண்டிருந்ததை பார்த்த கட்டிலை நனைக்காத குறையாய் சிலிர்த்தெழுந்து சில நாட்கள் மீன் சாப்பிடுவதை வேறு தவிர்த்து வந்தேன். இந்த முள் "சர்வைவல் ஒப்ஃ தி பிஃட்டஸ்ட்" போட்டியில் வெல்லுவதற்காக அது கொண்டிருந்த ஒரு ஆயுதம்.


தலையில் தொப்பி அணிந்த மீன் என் பேவரைட்ஸ் இல் ஒன்று. அதன் தொப்பியை தொட்டுப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் ஒன்றாயிருந்தது. வழுவழுப்பாக ஜெலி போன்று வழுக்கிக் கொண்டு செல்லும். ரொம்ப சாதுவான மீன். என் போன்றது.


தம்பியின் பேவரைட், அரோவானா. லக்கி பிஃஷ் என்றும் அழைப்பதாக சொன்னார்கள். அது வைத்திருந்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம் என்றார்கள். அது வாங்கியதில்தான் முக்கால்வாசிப் பணம் செலவழிந்தது.


எதோ ஒரு ஆசையில் வாங்கிவிட்டாலும் அதை மெயின்டைன் பண்ணுவது பெரிய தலைவலியாயிற்று. அனைத்தையும் வெளியில் எடுத்து ஒரு டெம்பரரி டேன்க் இற்குள் மாற்றி அக்குவாரியம்மை கழுவி மீண்டும் அவற்றை உள்ளுக்குள் விடுவதற்குள் அக்கு வேறு ஆணி வேறு ஆகிவிடும். பின்னர் "அக்குவாரியம் கழுவப் போய் அக்கு கழன்ற கதை" எழுதலாம். அக்குவாரியத்துக்குள் இறங்கி மீன்கள் பிடிப்பது என்பது சீன வித்தை. சின்ன வயசில் ஆற்றங்கரைகளில் நண்பர்களுடன் பிடித்திருக்கிறேன். மூன்று விதமாக. தூண்டில், வலை மற்றும் வடிப்பது. முதல் இரண்டும் மீன்கள் செத்தாலும் பரவாயில்லை என்று இறங்குவது. மூன்றாவது உயிரோடுதான் வேண்டும் என்று முடிவெடுத்து கங்கணம் கட்டிக் கொள்வது. இந்த முறைதான் பெரும்பாலும் எனது டேன்க்கிலும் யூஸ் பண்ணினோம். முதல் ஒரு சில முறைகள் நானே ட்ரை பண்ணினேன். எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறது என்பதே இந்த தகைமைக்குக் காரணம். தம்பி நீர் வாடிந்தோடச் செய்யும் குழாயில் நின்று அதைத் திறந்துவிடுவான், நான் கையில் துணியை பிடித்துக் கொண்டு உள் இறங்குவேன். இப்படி செய்யும் ஒரு நாளில் துணியிலிருந்து வெளியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது ஒரு மீன். இங்கு தொடங்குகிறது மீன்களின் சர்வைவல் எனும் போராட்டம்.


பல பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து வெல்வதே உலகில் நிலைக்கும் என்பதை சற்று விரிவாகச் சொல்வது சர்வைவல் ஒப்ஃ தி பிஃட்டஸ்ட் தியரி. இந்த மீன் கதையிலும் அதே. தன்னை பிடிக்க வருபவர்கள் தொடக்கம் தன் சக மீன்கள் வரை அதன் போராட்டம். இது மீன்கதை நடந்ததெல்லாம் மூன்று வருடங்களுக்கு முதல். அதன் பின் அவற்றை கண்காணிக்கும் பொறுப்பிலிருந்து என்னை விலக்கி மேற்படிப்பு படிக்க வெளியூர் அனுப்பிவிட்டார்கள். நானும் ஏறத்தாள அவற்றை மறந்தே போனேன். இரவு விடுப்பில் ஊருக்குத் திரும்பிய போது அவற்றின் ஞாபகம் வந்தது. சென்று பார்த்தேன், அலங்கார விளக்குகள் சகிதம் டேன்க் ஜொலித்துக் கொண்டிருந்தாலும் உள்ளிருந்தது என்னவோ நான்கு ரக மீன்கள்தான். டேன்க் கிளீனர், காட் பிஃஷ், ஏஞ்சல்ஸ் மற்றும் நீண்ட வால் கொண்ட கோல்ட் பிஃஷ். எனது டேன்க் எனும் சூழலில் வாழத் தகுதியானவை என்ற பட்டத்தை கொண்டு கம்பீரமாக நின்றன.


காலையில் பாட்டி மீன்களின் மரணம் பற்றி ஒரு டேட்டாபேஸ் கொண்டு வந்து காட்டினாள். இந்த மாதிரி மேட்டர்களில் கில்லாடி அவள். ஊரில் நடந்த ஒரு முக்கோணக் காதல் கதை சொன்னாள். இங்கும் சர்வைவல் ஒப்ஃ தி பிஃட்டஸ்ட்  தியரி அப்ளை ஆகி இருந்ததை கெஸ் பண்ண முடிந்தது. எனக்கு "தி குட் கய்" மூவி ஞாபகம் வந்தது. தன் காதலி தன் தன் ஜூனியரை காதலிக்கும் ஒரு ட்ராக் இதில் சைடாக சென்று கொண்டிருக்கும். 'குட்டி'யின் மேட்கைத்தேய வெர்ஷன் மாதிரி.



தாத்தாவின் லாஜிக்கல் ஆர்கியூமென்ட்ஸ் சற்று வித்தியாசமானவை. அவர் சொன்னது "டு ஒவர்கம் தி சர்வைவல் ஒப்ஃ தி பிஃட்டஸ்ட்  தியரி, தி ஒன்லி திங் யூ நீட் இஸ் செல்ப்ஃ கொன்பிஃடன்ஸ்"
நியாயம் என்றே தோனிற்று.



Tuesday 10 August 2010

மேற்கோள்கள் - 1

ஜென்னி: "நீ எப்பொழுதாவது கனவு கண்டிருக்கிறாயா, பாஃரஸ்ட், நீ யாராக இருக்கப் போகிறாய் என்பதை?"

பாஃரஸ்ட்: "நான் யாராக இருப்பேன் என்பதையா?"

ஜென்னி: "ஆமா"

பாஃரஸ்ட்: (குழம்பிய முகத்துடன்) "நான் நானாக இருக்கப் போவதில்லையா?"



இது நிஜமான கேள்விகள். நாம் எல்லோரும் இப்படித்தான். எமக்கென்ற ஒரு காரக்டரை உருவாக்குவதை விடுத்து இன்னொரு நபர் போன்று ஒரு மாயை ஏற்படுத்திக் கொண்டு வாழ விரும்புகிறோம். பொய்ப் பகட்டு.இது கண நேர சந்தோஷம் தந்தாலும், நிஜமான திருப்தி இருக்கப் போவதில்லை.ஒருவரை பின்பற்றுவது என்பதை தப்பாக புரிந்து கொண்டதன் விளைவே அது. நீ இன்னொருவருடை காப்பியாக இருப்பதைக் காட்டிலும், உன்னைப் பார்த்து நீ இவருடைய வழி வந்தாலும் தனக்கென்று  ஒரு சுயம்கொண்டிருந்தாய் என்று மற்றவர்கள் சொல்லும்படியாக இருப்பதே உண்மையான மகிழ்ச்சி. இதை உறைக்கும் படியாய் சொல்லிய இந்த வசனங்கள் இடம் பெற்றது "பாஃரஸ்ட் கம்ப்" மூவியில் :)



Monday 2 August 2010

தூக்கம், ஜாக்கிங், தாத்தா மற்றும் அவள்

அதிகாலையில் குளிப்பது உடம்புக்கு நல்லது, அதுவும் கட்டிலில் குளிப்பது??? இந்தக் கொடுமை எல்லாம் எங்கள் வீட்டில்தான் நடக்கும். பொதுவாவே விடுமுறை என்றால் பத்து மணிக்கு அப்புறம் விடிவது சூரியனின் வாடிக்கை. அல்லது நமக்கு அப்பிடி நடக்கற மாதிரி பீஃலிங்க்ஸ் வரவேண்டும் என்பது கும்பகர்ணன் காலம் தொட்டு அவரது சீடப் பெருந்தகைகளால் (பாஃர் எக்ஸாம்பிள்: நான்) பின்பற்றப்படும் நடைமுறை. ஆனா எங்க பேஃமிலி ராம வம்சத்தை சேர்ந்தவர்கள் போலும். இந்த ஹாபிட் சுத்தமா பிடிக்காது. ஆகவே விடுமுறை நாட்களில் சாராயக்கடைக்குப் போவது போல பதுங்கிப் பதுங்கி இதை செய்ய வேண்டிய ஒரு கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டேன். நான் எல்லாப் இந்த மாதிரி விஷயங்களில் இன்னுமே "பீட்டா" ஸ்டேஜய் தாண்டவில்லை என்பது வெளியிலே சொல்ல முடியாத ரொம்பக் கேவலமான ஒரு மேட்டர். பெரும்பாலும் மாட்டிகொண்டதே உண்டு. இதை கண்டுபிடிப்பதில் தாத்தா கை தேர்ந்தவர். பூட்டியிருக்கும் ஜன்னலை அசவுடன் (ஜன்னல் அசையுமாறு தாங்கி இருக்கும் தாங்கி) கழட்டிக் கொண்டு உள்ளே வந்தவர். இத்தனை கொடுமைகளையும் தாங்கிக் கொண்டு தூங்குவதை விட காம சூத்திரத்தில் உள்ள அனைத்து போசிஷன்களையும் ஒரே நாளில் ட்ரை பண்ணிப் பார்த்துவிடலாம். இதில் மெகா கில்லாடி என் முதல் தம்பி. அவன் தூங்கணும்னு முடிவு பண்ணிட்டான்னா அவன் பேச்ச அவனே கேக்கறதுக்குக் கூட முழிச்சிட்டு இருக்கமாட்டான். ஒருமுறை அடுத்த நாள் நடைபெற இருக்கும் ஒரு கேம் ஷோ பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். தூக்கம் வருதுன்னான். "கொஞ்சம் வெயிட் பண்ணுடா. இன்னும் டென் மினிட்ஸ்ல தூங்கலாம்" னு சொல்லிக் கொண்டிருந்தபோதே கழுத்தில் ஏதோ குத்துவதை உணர்ந்தேன். ஒரு நுளம்பு. அடித்துவிட்டுத் திரும்பியது அவன் குறட்டை விடாத குறை. இத்தனைக்கும் அப்போது இரவு எட்டு மணிதான்.

"நீ எத்தனை மணிக்குப் படுக்கறியோ அது மேட்டர் இல்லை, அஞ்சு மணிக்கெல்லாம் எழும்பறதுதான் மேட்டர்" என்பது தாத்தாவின் குவாட்டர் அடிக்காமல் சொன்ன தத்துவம். இத்தனை அலப்பறைக்கும் காரணம், அந்த பாழாப்போன "ஜாக்கிங்". தொந்தி குறைப்பதுக்கு டாக்டரிடம் அட்வைஸ் கேட்கப் போய் தலையில்வாரி இறைத்துக் கொண்ட மண் அது. ஆக்சுவலி இது என்னமோ தாத்தாக்குத்தான். நானே இதை தூக்கி என் பனியனுக்குள் போட்டுக்கொண்டதுக்கு காரணம் அவள். எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் ஒடிந்து போய்க்கொண்டிருந்த எங்கள் கிளாஸ் இற்கு ரொம்ப நாளைக்கப்புறம் வந்த ரஜினி படம் மாதிரி வந்து இறங்கினாள் அந்த தேவதை. அவளை இம்ப்ரஸ் பண்ண எல்லாரும் ட்ரை பண்ண, சும்மா ஒரு மூலையில் உக்கார்ந்து கொண்டிருந்த என்னையும் நடுத்த தெருவுக்கு இழுத்து வந்து வம்பிழுத்தது என் ஈகோ. ஒரு நண்பி மூலமாய் அந்த கேர்ள் தனக்கு வரவேண்டிய பாய்பிரண்ட் பத்தி என்ன ஐடியா வைத்திருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டேன். அதில் முதலாவது கண்டிஷன், நோ தொந்தி.

இனி டாக்டர் அட்வைஸ் சீனுக்கு வருவோம்.டாக்டர் சொன்னபடியே தினம் தினம் ஜாக்கிங் போக முடிவெடுத்த என் தாத்தா வெளியே வரும் போறது, ஓர் உணர்ச்சி வேகத்தில் நானும் வரவான்னு கேட்டுத் தொலைத்தேன். தாத்தா பார்த்த பார்வை "ஏன்" என்ற கேள்விக் குறியாய் மாறி எனைத் தட்டியது. "இல்ல சும்மா, பாடிய மெயின்டெய்ன் பன்னலாமேன்னுதான்" என்றேன்.
"அப்போ கண்டிப்பா எல்லா நாளும் வந்துடனும்".
"ஓகே, எத்தனை மணிக்கு?"
"அஞ்சு"
"ஓகே தாத்தா, டன்"
"டன்"

அப்படித்தான் ஆரம்பித்தது இந்தக் கொலை வெறி பிடித்த சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் படலம்.கொடுமையோ கொடுமை என்று ஒவ்வொரு நாளும் தொந்தி குறைக்க காலை அஞ்சு மணிக்கெல்லாம் பீச் சென்று நான் ஓடிக் கொண்டிருக்க, தன் காதலனுடன் ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணிக்கொண்டு மேற்படிப்புக்காக வெளிநாடும் சென்று விட்டாள் அவள்.

அவள் டைரியில் என் பேரோ அல்லது அடையாளமாக என் சோடாபுட்டிக் கண்ணாடியோ குறிப்பிடப் பட்டிருக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில், அவளுக்கு நான் யார் என்பதே தெரிந்திருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், நான் அவளுக்காக ஜாக்கிங் போன அந்தக் காலப் பகுதியில் என் டைரியில் ஒவ்வொரு நாளும் அவளுக்காக டெடிகேட் செய்தே ஆரம்பித்தேன். அது அழகிய காலப் பகுதி.
அது காதலில்லை. அவள் சென்றதுக்காக நான் வருத்தப் படவுமில்லை. இருந்தாலும் அவள் இப்போதிருக்கும் அட்ரஸ் தெரிந்தால்,"கொஞ்ச காலத்திற்கு என் உடம்பை மெயின்டைன் பண்ண ஹெல்ப் பண்ணியதுக்கு ரொம்பத் தேங்க்ஸ்" என்று ஒரு மொட்டைக்கடதாசி போடலாம் என்றிருக்கிறேன் :)



Wednesday 14 April 2010

எதோ ஒன்று என்னைத் தாக்க - பையா

பையா  பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்சம் லயித்திருந்தாலும் இடையிடையே சண்டைக் காட்சிகள் வந்து போதையை தண்ணி தெளித்துப் போக்கி விட்டன. இறுதித் தருவாயில் இந்த சாங். மியூசிக் சி.டி. இல் வெளி வராத இந்தப் பாடல் உள்ளம கொள்ளை கொண்டது. நான் விரும்பி ரசித்த அதை நீங்களும் கொஞ்சம் ரசியுங்களேன். :)


எதோ ஒன்று என்னைத் தாக்க, 
யாரோ போல உன்னைப் பார்க்க, 
சுற்றி எங்கும் நாடகம் நடக்க, 
பெண்ணே நானும் எப்படி நடிக்க... 

காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன், 
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன், 
பெண்ணே உந்தன் ஞாபகத்தை, நெஞ்சில் சேர்த்து வைத்தேனே, 
உன்னைப் பிரிந்து போகையிலே, நெஞ்சை இங்கு தொலைத்தேனே... 

என்னை உன்னிடம் விட்டுச்செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில், 
எங்கே போவது யாரைக் கேட்பது எல்லாப் பாதையும் உன்னிடத்தில், 
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் என் இரவையும் பகலையும் மாற்றிப்போனாய், 
ஏன் இந்தப் பிரிவை தந்தாய் என் இதயத்தில் தனிமையை ஊற்றிப் போனாய், 
உள்ளே உன் குரல் கேட்குதடி என்னை என்னுயிர் தாக்குதடி, 
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓ ஓ ஓ ஓ... 

பெண்ணே உந்தன் ஞாபகத்தை, நெஞ்சில் சேர்த்து வைத்தேனே, 
உன்னைப் பிரிந்து போகையிலே, நெஞ்சை இங்கு தொலைத்தேனே... 

எதோ ஒன்று என்னைத் தாக்க, 
யாரோ போல உன்னைப் பார்க்க, 
சுற்றி எங்கும் நாடகம் நடக்க, 
பெண்ணே நானும் எப்படி நடிக்க... 

காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன், 
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன், 
பெண்ணே உந்தன் ஞாபகத்தை, நெஞ்சில் சேர்த்து வைத்தேனே, 
உன்னைப் பிரிந்து போகையிலே, நெஞ்சை இங்கு தொலைத்தேனே.



Tuesday 6 April 2010

அரசியல்வாதியும் தாயம்மாவும்

பின்னாடி  சேர்க்கப்பட்ட முன்குறிப்பு: இது இலங்கையின் "2010 பொதுத் தேர்தலிற்கு" சமர்ப்பணம்.

ஏர்போர்ட்டிலிருந்து ஊருக்கான வழியில்
வேப்பமர நிழலில் அல்லலுறும் பகலில்
டிஷ்யூ பேப்பர் விற்கிறாள் தாயம்மா...
ராத்திரி வீட்டில் எரிய விளக்கில்லை
வந்தால் போக டாய்லட்டும் இல்லை.

அவள் கண்ணீர்தான் போக்கமுடியாது போயிற்று
மற்றோர் புறம் துடைக்க அவள் விக்கும்
டிஷ்யூ பேப்பரால் எனினும்
தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் கணங்களில்
அவளுக்கும் உதவிடும் அது...

இதையெல்லாம் தீர்ப்பேன் என்று
அன்று வந்த அரசியல்வாதி
இன்றும் வந்தார் வாங்க...
வாக்கு இல்லை, டிஷ்யூ பேப்பர்.

ஏர்போர்ட்டிலிருந்து வீடு செல்லும் வழியில்
வாங்கிக் கொள்கிறார் கொஞ்சம்.
இவருக்கு அவளை நினைவில்லை எனினும்
வறுமையின் இருட்டு கண்ணை மறைத்து
இவளுக்கும் ஞாபகசக்தி இழந்ததால் என்னவோ
அவர் தந்த காசை எண்ணத் தொடங்கினாள்,
மறுபடியும் கேட்டதை கொடுத்துவிட்டு...



Friday 26 March 2010

அழகிய நோய்

ஒரு பாலிடம் தொடங்கி,
மறு பால் தொற்றும்
இது ஒரு நோய்?

முதல் ஈர்ப்பு எப்படி
என்றறியா, தெரியா கணத்தில்
நம்மையறியாது தொற்றும்

நீ  செய்த ஒரு நன்மை,
அல்லது உன் பிடிவாதம்
என ஆயிரம் காரணம்

காரணத்தில் நல்லவை
அல்லது கெட்டவை
என்று பிரிவில்லை இதற்கு.
தேவை  வெறும் காரணமே.

நீ செய்யும் ஒவ்வொன்றையும்
நின்று ரசிப்பது
இதனொரு பக்க விளைவு

நீ கனவில் வருவதும்
அன்றாடக் கடமைகளில்
குறைபாடு நிகழ்வதும்
அறிகுறி என்கின்றனர்.

அன்பு பரப்பும் இது
தீது விலக்கும்
கலை வளர்க்கும்
அழகுற வைக்கும்...

தீர்வொன்று தேவையே இல்லாமலிருக்கும்
இந்தக் "காதல்" ஒரு
அழகிய நோய்தான்.



Thursday 25 March 2010

தலைக்கு மேல் வந்த வினை

அது ஒரு இதமான இரவு வேளையின் பின் பகுதி. விடியறதுக்கு ஒரு 3 மணி நேரமே இருந்தது. அப்போ மணி 2.30 இருந்திருக்கணும். சுத்தி வர சிட்டுவேஷன் எப்பிடி இருக்குன்னு அறவே தெரியாத லெவல்ல, இன்னும் தொடர்ந்து ஒரு 5 நிமிஷம் குறட்டை விட்டிருந்தேன்னா பக்கத்து வீட்டுக்காரன் என் பெட்ரூம் சுவர்ல தட்டி "யோவ் அந்த மாவு அரைக்கற மிஷினை அர்த்த ராத்ரில ஆன் பண்ணி அப்டி என்னய்யா சரித்திரம் படைக்கறே, அதை அணைச்சுத் தொலையும்" என்று கத்தும் நிலைமைல தூங்கிக்கிட்டு இருந்தேன். 

அப்பிடி ஒரு கவிதையே உருவான இரவு வேளையில் ஏதோ ஒன்று குறைவது போல் லைட்டா ஒரு பீலிங் வரவே கண் முழித்துக் கொண்டது. "இன்னா பீலிங்கு, ஆல் பிகாஸ் ஒப் மீ" னு என்னைப் பார்த்துப் பல் இளித்தது தலைக்கு மேல் இருந்து 'சீலிங் பேன்'. என்ன அதிரி புதிரி பண்ணிச்சோ தெரியல்ல டொட்டோடோய்ங்னு நின்னு விட்டிருந்தது அது. "ஆகா சேம் பிளாட்" என்ற படியே உடம்பு முழுவதும் மொய்த்திருந்தன நுளம்பு/கொசு எனப்படும் மாஸ்கிட்டோஸ். காய்ல், ஆய்ல், நுளம்புவலை மற்றும் இன்ன பிற பாதுகாப்பான்கள் வந்துவிட்டிருந்த போதிலும் இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் பிடிக்காத காரணங்களால் நான் அவற்றைப் பயன்படுத்துவதிலிருந்து தவிர்த்து வந்தேன். இந்தப் பழக்கமே என் தூக்கத்திற்கு வச்சது ஒரு பெரிய ஆப்பு. 

"சாரி சார், இனிமே எங்க கைல ஒன்னும் இல்ல, எதையுமே ஒரு மூணு மணிநேரம் கழிச்சுத்தான் சொல்லமுடியும்" என்று தலைக்குள் இருந்து சத்தம் போட்டார் மிஸ்டர் பிரெய்ன். இனியும் யோசிச்சு பிரயோஜனம் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், சரி படுத்துத்தான் பார்ப்போமே என்று பெட்ஷீட்டை தலைக்கு மேல் போர்த்திய போதுதான் ஞாபகம் வந்தது நம்ம ராகவன் முகம்.
 "நண்பா! நான் இருக்கேன்டா, நீ ஒண்ணப் பத்தியும் கவலைப் படாதே, எல்லாத்துக்கும் ஒரு சால்யூஷன் இருக்குப்பா" என்ற படியே காற்றில் கரைந்து போனது அவன் முகம். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மாணவன் ஒரு பிரபல யுனிவர்சிட்டி ஒன்றில். இப்போதுதான் இரண்டாமாண்டு. பக்கத்து வீட்டுக்காரன். பால்ய நண்பன். புத்தகப் புழு. த்ரீ இடியட்சில் வரும் சைலன்சர் கணக்காய் ஒரு கேரக்டர். ஆனா கொஞ்சம் நல்லவன் மற்றும் அப்பாவி. ஹெல்ப் மைன்டட் பெர்ஸன்.   

அடுத்த நிமிடம் அவன் வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருந்தேன். அவன் தனியாத்தான் இருக்கான் என்று ஆல்ரெடி தெரியும். பெற்றோர் வெளியூர் சென்றிருந்தனர். "ராகவா... ராகவா..." டொக்.. டொக்..டொக்.. கண்களைக் கசக்கியபடியே கதவைத் திறந்தான் அவன். "என்ன மச்சான் இந்த நேரத்துல?". விவரித்தேன். நாடியில் கை வைத்து என் முகத்திலிருந்து பார்வையை எடுக்காமல் அவன் என் பிரச்சினையைக் கேட்ட விதம் அவன் எதிர்காலத்தில் ஒரு ப்ராபஸர் ஆக வருவான் போல என்று எண்ணச் செய்தது. "அடச் சே, சப்ப மேட்டர் மாம்ஸ். நீ இரி. ஜஸ்ட் டூ மினிட்ஸ், டூல்ஸ் எடுத்துட்டு வாரேன். தெர்ட்டி மினிட்ஸ்ல செஞ்சிடலாம்".  "ஓகேடா, அப்போ நான் வீட்ல இருக்கேன், நீ வா". "ஷ்யூர் டா" நேரம் மணி 3.


நான் போய் சரியாக ஐந்து நிமிடத்தில் வீட்டுக்கு வந்தான் அவன். ஒரு கையில் தலையணை சைஸ் புத்தகம் ஒன்று, மற்றையதில் ஒரு டூல் பாக்ஸ். ரூமுக்குள் போனோம். சுவிட்ச் போட்டுப் பார்த்தான். கதிரை போட்டு ஏறி 'டெஸ்டர்' வைச்சுப் பார்த்தான். "ஓகே மச்சான் லெட்ஸ் கெட் திஸ் டன். ட்ரான்ஸ்போர்மர்தான் அப்சட். நான் இப்போதைக்கு அட்ஜஸ்ட் பண்ணி செய்யறேன். நாளைக்கு நீ புதுசு வாங்கி வா நான் பிக்ஸ் பண்ணித் தாரேன்". "ஓகேடா, இப்போ நான் நிம்மதியா தூங்கணும். அதுக்கு ஏற்பாடு பண்ணு முதல்ல". "டோன்ட் வொர்ரி, நான் இப்படியான மேட்டர்ஸ் பத்தித்தான் படிக்கேன். செஞ்சுடலாம்". "ஓகே"

பேனை கழட்டினான். துடைச்சான். ஒவ்வொரு பார்ட்ஸாய் வெளியில் எடுத்தான். அதன் பெயர்களை சொல்லிக் காட்டினான். புக்கை பார்த்து ஒவ்வொன்றும் எதுக்காக வைக்கப் பட்டிருக்கின்றன, என்ன வேலையைச் செய்கின்றன என்று லெக்சர் எடுத்தான். மறுபடியும் புக்கை ரிஃபர் பண்ணி ட்ரான்ஸ்போர்மர் என்று அவன் சொன்னதை என்னமோ பண்ணினான். மறுபடியும் பழையபடி பிக்ஸ் பண்ணினான். ஒரு வெற்றிகரமான புன்னகை அவன் முகத்தில் இருந்தது. நேரத்தைப் பார்த்தேன். ஐந்து மணிக்கு ஐந்து நிமிடம் இருந்தது. "இதுதானா உன் தர்ட்டி மினிட்ஸ்?" மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
"ஓகே மாம்ஸ், இப்போ ட்ரையல் பார்க்கலாம்" வெற்றிக் களிப்பில் சொன்னான் அவன். என்னமோ இவன்தான் பேனையே கண்டுபிடிச்சி இப்போ ட்ரையல் பார்க்கப் போற மாதிரி.
வேற வழின்னு நினைத்துக் கொண்டு சுவிட்சை போட்டேன். 


வழமையாக அன்டி-கிளாக்வைஸ் (anti-clockwise, இடமிருந்து வலம்) ஆக சுற்றும் பேன், கிளாக்-வைஸாக (clockwise, வலமிருந்து இடம்) சுற்ற ஆரம்பித்தது.

"இன்னாடா நடக்குது இங்க?" என்று நினைத்துக் கொண்டே அவனைப் பார்த்தேன்.


அவன் அதே கேள்வியுடன் பேனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.


பேன் எங்கள் ரெண்டு பேரையும் பார்த்து "விடுகதையா இந்த வாழ்க்கை..." என்று பாடுவது போலவே தோன்றிட்டு...



Wednesday 24 March 2010

இது மற்றுமொரு முத்தமில்லை

என் உதடுகள் இன்னும் காய்ந்து விடவில்லை. அவை காய்வதில் எனக்குத் துளியளவும் விருப்பமில்லை. உன் இதழ் ரேகைகள் உருவாக்கிய குளிர்ச்சி என்னை சிலிர்க்க வைத்தது.

அது வெறும் எச்சில் மட்டுமல்ல, உன் நாணம், யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற கொஞ்சப் பயம், உன் அன்பு மற்றும் உன் அழகு எனப் பல விஷயங்கள் உணர்ந்தேன்.



நீ போன இடங்களுக்கு எல்லாம் நானும் அலைந்து வந்திடவில்லை, இருந்தாலும் உன்னைப் பல இடங்களில் கண்டதாகவே உணர்கிறேன் இந்த முத்தத்தின் பின். வயாகராவை விட மோசமானது ஒரு பெண்ணின் காதல் முத்தம். அதை உன்னிடம் பெற்ற பின் மற்றவர்களின் முத்தம் ஒரு பொருட்டற்றுப் போகிறது.


 உன் உதடு மட்டும் பதித்தாய், எனக்குப் பூர்வ ஜென்மம் வரை 'டைம் மெஷின்' இல் சென்று வந்த உணர்வு. அதுவும் அந்தச் சில செக்கன்களுக்குள்ளாகவே. புயல் மழையில் பல நூறு வருஷம் நின்றதைப் போன்று நனைந்து விட்டிருந்தேன் உள்ளுக்குள்ளாக. நாடி நரம்பிலிருந்த ரத்தம் எல்லாம் உறிஞ்சி எடுத்து விட்ட ஒரு ரத்தக் காட்டேரி நீ. பதிலுக்கு காதல் எனும் அற்புத மருந்து புகுத்திவிட்டாய்.


அதெப்படி, டாக்டர் படிப்பு படிக்காமலே இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தாய்? அதுவும் வெறும் இதழ்களை பதித்து. இப்போதெல்லாம் இரண்டு நாடித்துடிப்பை உணர்கிறேன் நான். யாராவது செக் பண்ணிவிட்டு "எத்தனை மாசம்" மற்றும் "எப்போ பொம்பளையா மாறினே" என்று சந்தேகத்தோடு கேட்காமல் இருந்தால் சரி. சும்மா சொல்லக் கூடாது, மன்மதக் கலை பெண்களின் உதடுகளில்தான் ஆரம்பிக்கிறது. எனக்கு உன் இதழில்.


நானும் பல பேரிடத்தில் முத்தம் பெற்றிருக்கிறேன். ஆனால் எல்லாமே உன் போல் இனிக்கவில்லை. அது உன் உதடு என்பதாலா அல்லது தந்தது என் உதட்டில் என்பதாலா? அப்படி என்னதான் இருக்கிறதோ அதனுள்...

இப்போதெல்லாம் அம்மாக்கு  சந்தேகம். நான் தண்ணி அடிக்கிறேனோ என்று. உன் முத்தம் தந்த போதை இன்னும் தெளியவில்லை. இதை குணப்படுத்த ஒரு வழி சொல்லேன். என்ன செய்வது அதிலிருந்து தெளியவும் மனமில்லை.


எது எப்படி இருந்தாலும்... நான் எழுதித் தருகிறேன்...


"இது மற்றுமொரு முத்தமில்லை"



Sunday 21 March 2010

நீயும் நானும்

கண் விழித்த போது தெம்பில்லை
கனக்கும் மனதில் உயிரில்லை.
நானும் மற்றுமொரு ஜடம்
முழுக்க மரத்துப் போய்...


குட்மார்னிங் சொல்லிக் குட்டும்
உன் குறும்பான கைகளின்
வளையல் சத்தம் இல்லை.
அறையெங்கும் ஒரு நிசப்தம்...

பெட் காப்பி தரும் கப்
எறும்புகளின் இருப்பிடமாய் இருக்கிறது.
கட்டில் ஓரத்தில் இருந்து
என்னை வெறித்துப் பார்க்கிறது.

வழக்கமாய் கட்டிலில் படரும்
ஜன்னல் வழி சூரிய வெளிச்சம்
உள்ளே வர முடியவில்லை,
ஜன்னல்  திறக்க நாதியில்லை.

களை இழந்த வீட்டில்
கூனிக் குறுகி ஒரு மூலையில்
செய்வதறியாது விக்கித்து நிக்கிறேன்
ஆறுதல் சொல்ல நீ இல்லை.

நேற்றுக் காலை இதெல்லாம் செய்ய
நீ இருந்தாய் என் துணையாக.
பின்னேரமே விபத்தில் இறந்த நீ
என்னையும் கொன்று விட்டாய்.

வீட்டார் எதிர்க்க நண்பர் துணை நிக்க
வாழ்க்கை ஆரம்பித்து முப்பது வருஷம்.
குழந்தையில்லை என்ற குறை போக்க
ஒருவர் மற்றவர் குழந்தையானோம்.

கவலை என்பதை மறக்கவைத்தாய்
அகராதியில் அழித்தெறிந்தாய்
உன்னுடன் வாழப்பழகிய எனக்கு
நீயில்லாமல் இருக்கத் தெரியலியே.

எல்லாமாகி என்னுடன் இருந்தாய்
இப்படி சொல்லாமல் கொள்ளாமல்
போவாய் என்றேன் சொல்ல மறந்தாய்?
நான் செத்திடுவேன் என்று பயமா?


இப்போதும் என்ன?
செத்துத்தான் விட்டேன்.
நிற்கிறேன் அழத் தெரியாமல்
உன் போட்டோவை வெறித்தபடி...



லக்கிலூக்கும் ஏழு பேரும்

உலகத்துல ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்களாம், பக்கத்து வீட்டுப் பங்கஜம் மாமி வாய் கூசாம நல்லாவே போய் சொல்லுவா.ஸோ அத நான் நம்பல்ல. அப்புறம் அம்மா சொல்லும் போது லைட்டா டவுட் வந்திச்சு. அப்புறம் இதே விஷயத்தை நண்பன், சினிமா மற்றும் அரசியல்வாதி கூட்டங்களில் என இதர பதர ஏழு சந்தர்ப்பங்களில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எல்லாம் கேள்விப்படும்போது உண்மைதானோ என்று மனச்சாட்சி கதவைத் திறந்தது.

ஒரு பக்கம் நீதி நேர்மை அப்பிடின்னுட்டு மனச்சாட்சி டாச்சர் பண்ண, இன்னொரு பக்கம் "லூசாடா உனக்கு, எதையும் ரிஸர்ச் பண்ணாம டோன்ட் கம் டூ எ டிசிஷன்" அப்பிடின்னு பகுத்தறிவு இன் கார்ப்பரேஷன் வித் மூளை சகிதம் கன்னத்தில் அறைய இடையில் உடம்பு சூடாகிக் போய் "போங்கடா நீங்களும் உங்க சண்டையும்" என்று ஜுரம்/காய்ச்சல் என்ற பெயரில் படுத்துக் கொண்டது உடம்பு. பில்லி சூனியம் என்று பங்கஜம் மாமி பதற, ஓவர் எமோஷனலாகி அம்மா அழ கடைசியில் அப்பாவின் உதவியால் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி ஒரு வாரம் 'ஹாஸ்பிட்டல் பியூட்டி குயீன்' நர்ஸ் நர்மதாவின் அழகான கவனிப்பின் பின் வீடு திரும்பினேன்.

மீன்வைல், "மச்சான் உன்னைப் போலவே இருக்கற அந்த மத்த ஏழு பேரும் எப்பிடி, எங்க இருக்கானுங்கன்னு ஒருவாட்டி பாத்துடனும்டா" என்று அடிக்கடி பிரெய்ன் திரி பற்றவைத்துக் கொண்டே இருந்தான். அதற்கு ரைட் ஆப்போஸிட்டா "அவங்க எங்க இருந்தா நமக்கென்ன. எப்படி இருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு பிரே பண்ணு போதும்" என்று காதை குடைந்தது மனச்சாட்சி. "அதுவும் சரிதான்" என்று ஒருவருக்குத் தெரியாமல் மற்றவருக்கு ஆமாம் சாமி போட்டுக் கொண்டேன்.

பங்கஜம்  மாமியின் அலப்பறைகளும் அம்மாவின் கவலைகளும் நின்று போன சமயத்தில் அறிமுகமானார் லக்கிலூக். காமிக்ஸ், கார்ட்டூன் என்று ஏதோ ஒரு வழியில் வீட்டுக்குள் புகுந்து விடும் அவரது சாமர்த்தியம் கண்டு வியந்தேன். எதிலும் இருக்காத பற்று, வாயில் ஒரு புல், நண்பர்கள் இல்லாத வாழ்க்கை என லைட்டா என்னையே பிரதிபலித்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசிக்கொள்வோம். அப்போது அவர் சொன்ன விஷயம்தான் சில கேள்விகளுக்கு விடை தந்தது.

அந்த ஏழு பேர் மேட்டரில், உருவ ஒற்றுமையில் ஒரு மூணு பேரும், தன்மை ஒற்றுமையில் மீதமும் இருக்கலாம் என்றார். பாஃர் எக்ஸாம்பிள் நீயும் நானும் என்றார். சரிதான் அவர் ஒல்லிப்பிச்சான், நான் அண்டா குண்டா. இருப்பினும் வாழ்க்கை முறையில் ஒற்றுமை இருந்தது. இருவரும் தனிமை விரும்பிகளாக இருந்தோம். நண்பர்கள் ஏமாற்றி இருந்தார்கள். யோசிச்சுப் பார்த்த போது பங்கஜம் மாமிக்கும் அம்மாக்கும் கூட நிறைய ஒற்றுமைகள் இருந்தன. அப்பாக்கும் பேஸ்புக்கில் இருந்த பிரேசில் காரருக்கும் ஒரே விதமான பேச்சுத்தன்மை இருந்தது. இதை லக்கிலூக்கிடம் சொல்லி சிரித்துக் கொண்டேன். அவர் டால்டன் சகோதரர்களை பிடிப்பதற்காக 48ம் பக்கத்தில் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார். நான் சொன்னது காதில் விழுந்ததோ தெரியவில்லை.

மனச்சாட்சி தலையில் கைவைத்து நொந்து கொண்டது, இதோ இப்போ நீங்க "இதெல்லாம் ஒரு பதிவா" என்று  பீஃல் பண்ற மாதிரி. இப்ப பீஃல் பண்ணி என்ன பிரயோசனம், எல்லாம் முன்னாடியே யோசிச்சிருக்கணும் என்று நக்கலடித்தது மூளை. லக்கிலூக் கடைசிப் பக்கத்தில் "தனிமையே என் துணைவன், தனிமையே என் வாழ்க்கை" என்று பாடி விசில் அடித்தபடி குதிரையில் சென்று கொண்டிருந்தார்...



Saturday 20 March 2010

கவிதையும் காதலும்

கவிதை எழுதுவது அப்படி ஒன்றும்
கம்ப சூத்திரமாய்ப் படவில்லை
உன்னைப்  பார்த்த பின்
என்றெல்லாம் பொய் சொல்லத்தெரியவில்லை.

சுமாரா எழுதிக் கொண்டிருந்ததும்
சப்பென்று போய் விட்டது
என்று பக்கத்து வீட்டுப் பாட்டி
வெற்றிலை போட்டபடி சொன்னார்.


அவருக்கும் கோபம் இப்போது.
அவரை  அழகுராணி என்றெல்லாம்
எழுதிய என் கை இப்போது
உன்னை வர்ணிக்கத் தொடங்கியதில்.

பெண்களுக்கு தமக்குப் பிடித்தவன்
விஷயத்தில் பொறாமை வருவது
வாஸ்தவம்தான் எனினும்
இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.

இப்போது நான் கேட்பதெல்லாம்
எனக்கு ஒரு நல்ல முடிவு.
பிடிக்காவிட்டால்  இப்போதே சொல்லிவிடு,
பாட்டி எனக்காக காத்திருக்கிறாள்.



Friday 19 March 2010

இன்னா மேன் முறைக்கிறே

இன்னா மேன் முறைக்கிறே
என்று சொடக்குப் போட்டாய்.
செய்வதறியாது திகைக்கவில்லை நான்,
முறைப்பதன்றி வேறு வழியில்லை.

நீ போன வழி எங்கும்
என் மோட்டார்பைக் பின்தொடர
என்னை ரெண்டு சகா
காவல் காத்து வர

அது ஒரு பொற்காலம்
அழகிய நிலாக் காலம்.
தண்ணி போட்டு மப்பில்
நட்சத்திரம் எல்லாம் எண்ணியிருக்கிறேன்.

உன் வரலாறு தெரியாது
உன் எதிர்காலம் வளமாக்க
கனவு  கண்டேன்
கோட்டை கட்டினேன்.

நேற்றிரவு வரை
இடிந்து  விழவில்லை அது.
உன்னைப்  பார்க்கும் வரை
அப்படி ஒரு நிலையில்.

அப்படி ஒரு படம்
பார்க்க நினைத்தது தப்புதான்.
மன்னித்து விடு
அல்லது  அடித்தும் விடு.

என் தலை எழுத்து.
அதில் நீயா
நடித்துத் தொலைப்பது.
கோட்டை இடிந்தது.

சரி என்ன செய்வது
அது உன் குற்றமில்லை.
அதை பார்த்ததுதான்
என்  குற்றம்.

ஆனால் உன்னைப் பார்ப்பதை
நிறுத்த முடியவில்லை என்னால்.
அதனால்தான் மறுபடியும்
வந்தேன் உன்னிடம்.

இன்னா மேன் முறைக்கிறே
என்று சொடக்குப் போடுகிறாய் நீ.
மேடம் நான் உங்க ரசிகன்,
எல்லாப் படமும் சூப்பர்,
ஆட்டோகிராப் ப்ளீஸ்.

கையெழுத்திட்ட  நீ,
கூடவே உன் போட்டோ
சேர்த்துத் தருகிறாய்.
வாங்கியபடியே வெளியாகிறேன்.



'பேஸ்புக்' இல் தனித்துவமான முறையில் ஆடியோ ஷெயார் பண்ணுதல்

பேஸ்புக்கில் ஷெயார் பண்றது ரொம்பவே ஈசி. ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யும் பகுதியில் லின்க் என்பதை தெரிவு செய்து லின்க்கைப் பேஸ்ட் செய்து அட்டாச் பண்ணிவிட்டால் போதும். இது வழமையாக நாம் எல்லோரும் பண்ணும் முறை. நமது நண்பர்கள் நாம் ஷெயார் பண்ணிய லின்க்கை க்ளிக் பண்ணியவுடன் அது உரிய தளத்துக்கு நம்மை பாஃர்வார்ட் பண்ணிவிடும். வீடியோ லின்க் என்றால் பேஸ்புக்கிலேயே வைத்துப்  ப்ளே செய்யும் வசதியும் இருக்கிறது.

இது இப்படி இருக்க ஆடியோ பைஃல்ஸ்களுக்கு பேஸ்புக் ஷெயார் முக்கியத்துவம் தருவதில்லை.பொதுவாக ஆடியோ பைல் இருக்கும் இணையத்தளங்களின் முகவரியைத்தான் ஷெயார் பண்ண வேண்டி இருக்கிறது. நாம் யூடியூப் அல்லது பிற விடியோ பைஃல்கள் பேஸ்புக்கில் ப்ளே ஆவது போல் ஷெயார் பண்ணுவது எப்படி என்று பார்ப்போம்.

இதற்கு முதலாவதாய் நாம் எமது ஆடியோ பைஃல்லை இன்டர்நெட்டில் ஹோஸ்ட் செய்ய வேண்டும். நான் யூஸ் பண்ணியது 'பைல்டென்' எனும் ஹோஸ்ட். இதில் இலவச கணக்கு ஒன்றை ஆரம்பித்துக் கொள்ளவும். நீங்கள் அப்லோட் செய்ய நினைக்கும் ஆடியோ பைஃல்லை இலகுவான ஒரு சொல்லில் பெயரிட்டுக் கொள்ளவும். எக்ஸாம்ப்பிள்... "New.mp3". பின் 'பைல்டென்' இல் அப்லோட் டேப் இற்கு சென்று அப்லோட் செய்யவும். அப்லோட் முடிந்த பின் அது தரும் யூ.ஆர்.எல் ஐ காப்பி செய்து கொள்ளவும். (இது .mp3 என முடிவடையும். இவ்வாறு முடிவடையும் யூ.ஆர்.எல். தரும் வேறு  பைஃல் ஹோஸ்ட்களிலும் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்). இனி இந்த யூ.ஆர்.எல் ஐ பேஸ்புக்கில் ஷெயார் செய்ய வேண்டியதுதான் பாக்கி.

ஷெயார் செய்யும் போது வரும் 'ஆர்டிஸ்ட் பெயர்'  மற்றும் 'ஆல்பம் பெயர்' போன்றவற்றை எடிட் செய்து கொள்ளுங்கள்.

ஒரு சிறிய, அழகான பிளேயரில் உங்கள் ஆடியோ ப்ளே ஆவதை  நீங்கள் கேட்டு ரசிக்கலாம் :)



Thursday 18 March 2010

இதுதான் 'காதல்' என்பது...

அண்மையில் ஓர் ஆய்வு
ஏழு வருஷமே நிலைக்குமாம்
ஒன்றின் மீதான பற்று

இது இப்படி இருக்க
நீயும் நானும் எப்படி
இத்தனை வருஷம் உறவானோம்?


ஆதாரங்களாய் கண் முன்னே
நம் பேரக் குழந்தைகள்
நம்மை உரித்து வைத்தவர்களாய்

ஆய்வு எப்படிப் பொய்யாகிற்று?
என்னவென்று அறியா ஒரு பாலம்
உனக்கும் எனக்கும் இடையில்

இதுதான் 'காதல்' என்பது...



எப்போதும் போல!

மழை நின்றிட்ட பொழுதில்
வானவில் வண்ணமிட்ட கணத்தில்
பேரரசசி வருவது போல்
படிகளில் இறங்கி வந்தாய்

இதயம் மில்லிசெக்கனில்
துடிக்க மறந்தது.
என் முகத்தினில் படர்ந்திருந்த
நீர்த்துளிகள் காய மறுத்தன.

நீ எதிர் வந்தாய்,
புயல் அடித்தது.
நீ சிரித்தாய்,
மின்னல் வெட்டியது.

நீ கடந்து சென்றாய்,
இடி இடித்தது.
நீ தூரத்தில் மறைந்தாய்,
புயல் மழை ஓய்ந்தது.

போன பின்
எப்போதும் போல
கவிதை எழுதத்
தொடங்கின கைகள்.

கிறுக்கிப்
பிழைத்துக் கசக்கி எறிந்த
கடைசிக் காகிதத்துடன் நிரம்பிக்கொண்டது
குப்பைக் கூடை.



Friday 12 March 2010

கே.எஃப்.சி தேடிய கதை / இங்கி பிங்கி பாங்கி கதை

நேற்று...
காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கொண்டேன். இரவே மின்னிக்ஸும் வந்து தங்கியிருந்தான். அவனது நீண்ட நாளைய ஆசை "கீக் ரூல்ஸ்" கடையில் ஒரு 'டீ-சேர்ட்' வாங்கிவிடுவது. வாசகம் பொறித்த 'டீ-சேர்ட்' அணிவது நாகரிகம் ஆகிவிட்ட காலத்தில் அவனுக்கு அப்படி ஒரு ஆசை வந்தது ஒன்றும் தப்பில்லை எனினும் அப்பால நடக்கப் போற சம்பவங்கள் தெரியாத படியால் அன்றைய தினத்தை சிரித்த வண்ணமே ஆரம்பித்தேன். காலைக்கடன்கள் முடிந்து வெளியே வந்த போது மின்னிக்ஸும் எழுந்து விட்டிருந்தான். அவன் குளித்து எல்லாம் முடித்து வந்த போது நேரம் ஏழு இருக்கும்.

கடை திறந்திருக்கமாட்டாதபடியால் என்ன செய்வது என்று தெரியாமல் ட்விட்டரில் உலாவத் தொடங்கினோம். அப்புறம் இன்டர்நெட்டை வலம் வந்தோம் ஒருவாறு நேரம் 12 மணி ஆகிவிட்டிருந்தது. ஸாபித்தும் எம்முடன் வந்து இணைந்து கொண்டான். கடை இருப்பது இரண்டு ஊருக்கு அப்பால் உள்ள ஒரு இடத்தில் என்றாலும் அந்த ஊர் என்ன கலர் என்பது எங்களுக்கு 'கடல்லேயே' தெரியாது. அந்த ஊருக்கு என்ன நம்பர் பஸ்ஸில் போவது என்பதை நண்பனிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட நாம், அந்த ஊரில் கே.எஃப்.சி எங்கிருக்கிறது என்பதை கேக்க மறந்தது எவ்வளவு பெரிய மிஸ்டேக் என்பது பட்ட பின்பே தெரிந்தது. காரணம் கே.எஃப்.சி இற்குப் பக்கத்திலேயே அந்தக் கடை இருக்கிறது என்று மின்னிக்ஸ் சொல்லி இருந்தான்.

இதில் நாங்கள் நினைவில் வைக்க மறந்த சில விஷயங்கள்:
1. ஒரு இடத்திற்குப் போவது எப்படி என்று எப்படி சிங்களத்தில் கேட்பது.
2. கடையின் கான்டாக்ட் நம்பர்.
3. நேரம்
4. காலநிலை

மழை கொட்டோ கொட்டென்று கொட்டுவது போல, சரி நேர் எதிர் கோட்டில் காய்ந்து தள்ளியது வெய்யில். ஒருவாறு பஸ்ஸில் தொற்றிக் கொண்டோம். நகர்ந்த பாடில்லை. ஸ்கூல் வேறு விடும் நேரமாதலால் செம ட்ராஃபிக் ஜாம். ஒரு மணித்தியால ஆமை வேகப் பயணத்தின் பின் டெஸ்டிநேஷனை சென்றடைந்தோம். நான் மற்றுமொரு முறை வியர்வைக் குளியல் எடுத்து விட்டிருந்தேன்.

ஒரு மேம்பாலம். சுற்றி "நை நை" என்று கத்திக் கொண்டிருக்கும் சிக்னல் லைட்ஸ். ஒரு விதமான ஸ்ட்ரேன்ஜ் அட்மாஸ்பிஃயரை தோற்றுவித்திருந்தன. அது நான்கு தெருக்கள் வந்து முட்டும் ஒரு சந்தி. நான் 'இங்கி பிங்கி பாங்கி' போட்டு ஒரு தெருவை தெரிவு செய்தேன். "மச்சான், இந்த ரோட்ல முதல் ட்ரை பண்ணலாம் வாங்க" என்றபடி நடக்க ஆரம்பித்தேன். "முதல்ல யாரிடமாவது கேட்டுப் பார்க்கலாம்டா" என்றான் ஸாபித். "அது சரி, மொழி தெரிஞ்சா ஏன் கேக்காம, தெரியாததனால தானே இப்பிடி ட்ரை பண்றோம். பேசாம வாங்க" என்றபடி நடந்தேன். மின்னிக்ஸும் எனது கருத்தை ஏற்றுக் கொண்டான். ஸ்கூல் விட்டு அழகான கேள்ஸ் மற்றும் பாய்ஸ் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூல்ல கொடுக்கற  அட்மிஷன் பாஃர்ம்ல முதலாவது கண்டிஷனே "உங்க பொண்ணு அழகானவளா இருக்கணும்னு தான் இருந்திருக்கும் போல" என்றான் மின்னிக்ஸ். சொல்லிக் கொண்டிருக்கும் போதே தேவதை மாதிரி ஒருத்தி எங்களைப் பார்த்து சிரித்தபடியே கடந்து சென்றாள். ஒரு இரண்டு கிலோ மீட்டர் நடந்துவிட்டிருந்தோம்.

"போடாங் நீயும் உன் இங்கி பிக்கியும்" என்று நொந்து கொண்ட ஸாபித் மறுபடியும் "யாரையாவது கேட்டுப் பார்க்கலாம்டா" என்றான். வேறு வழி இல்லாமல் சரி என்ற நான், யார் போவது என்று கேட்ட போது, எங்களுக்குள் மறுபடியும் இங்கி பிங்கி பாங்கி போட வேண்டிய நிலை வந்தது. போட்ட போது ஆப்பு வந்தது எனக்கு. என்ன செய்வது என்று நொந்த படி நடந்த போது எதிர்ப்பட்டார் ஒரு காலேஜ் வாட்ச்மேன். ஒருவாறு மனசுக்குள் பலமுறை ப்ராக்டிஸ் செய்து கொண்டு அவரிடம் போனேன். உற்றுப் பார்த்தார்,
"கே.எப்.சி?" என்றேன்.
"ஆ?"
 "கே.எப்.சி, கே.எப்.சி..."
 "ஆ?"
எனக்கு  பற்றிக் கொண்டு வந்தது. நன்றாக ஏசி விடத் தோன்றியது. அதற்கும் அவர் மொழி தெரிய வேண்டுமே. தெரிந்திருந்தால் அதை ஏசுவதற்கா யூஸ் பண்ணியிருப்பேன். வழியைத் தெரிந்து கொண்டிருப்போமே. ஒன்றுமே சொல்லாமல் திரும்பி வந்தேன்.

மின்னிக்ஸும் ஸாபித்தும் முறைத்தார்கள். நாங்கள் பார்பிகியூ ரேஞ்சுக்கு நன்றாகவே கறுத்து விட்டிருந்தோம். அப்போதுதான் எனக்கு பெரோஸ் இன் ஞாபகம் வந்தது. மொபைலில் அழைத்தேன், மேட்டரை சொன்னேன். "எனக்கும் அந்த ஏரியா தெரியாது மச்சான்...", நாசமாப் போச்சு "... கொஞ்சம் வெயிட், பக்கத்துல கேட்டு சொல்றேன்". மீன்வைல் நாங்கள் எங்கள் மதிய உணவாக "7 UP" சாப்பிட்டு... ஸாரி, குடித்துக் கொண்டோம். மறுபடியும் அழைத்தேன். "நீ போற திசை சரிதான் மாம்ஸ். அப்டியே போய்க்கிட்டு இருந்தீன்னா ஒரு "புட் சிட்டி" சுப்பர் மார்க்கத் வரும். அதுக்குப் பக்கத்திலேயேதான் 'கே.எப்.சி' இருக்கு". "ஓகே டா, நான் பார்த்துக்கறேன்". மணி 2.30 ஐக் காட்டியது.

நடக்கத் தொடங்கினோம். அது சன நெரிசல் மிகுந்த நகரம். நாங்கள் நடந்த ரோட்டில்சன நெரிசலும், கட்டடங்களும் குறைந்து கொண்டே வருவதாக உள்ளுணர்வு எங்கள் மூணு பேருக்கும் கடுதாசி போட்டிருந்தார். அது டெலிவரி ஆக எடுத்த நேரத்தில் நாங்கள் 2 கிலோ மீட்டர் நடந்து விட்டிருந்தோம். உள்ளுணர்வின் எச்சரிக்கை கிடைக்கப் பெற்றதும் நின்று சுற்று முற்றும் பார்த்த போது பச்சைப் பசேல் என வயல்கள் எதிர்ப்பட்டன. "யார்ட்டயாவது கேட்டுப் பார்ப்போம்டா" மறுபடியும் ஸாபித்.

மின்னிக்ஸ் வானத்தைப் பார்த்த படி நின்றான். பின் எங்களைப் பார்த்தான். "வெயிட், என்கிட்ட அந்த ஷாப் நம்பர் இருக்கு, டயல் பண்ணிக் கேப்போம்" னு அவன் சொன்ன மாதிரி விளங்கவே "என்ன சொன்னாய்? நம்பர் இருக்கா?" என்று கேட்டோம். "ஆமா"ன்னான். "அடப்பாவி, இத முன்னாடியே செஞ்சிருக்கப்படாதா? நாறப் பயலே" பொரிந்து தள்ளினான் ஸாபித். நான் தலைவிதியை நினைத்துக் கொண்டு அருகிலிருந்த கடை ஷோ கேஸில் முகத்தைப் பார்த்த போது நன்றே கறுத்துவிட்டதை உணர்ந்தேன்.

மின்னிக்ஸின் தொலைபேசி அழைப்பு ஆன்ஸர் செய்யப்பட்டது. மேட்டரை சொன்னான். "சாரி சார், நாங்க இப்போ ஸ்டோர் இல்லை. ஆன்லைன் சேல்ஸ் மட்டும்தான் பண்றோம்" என்று வந்திச்சு பதில். செம கடுப்பாயிடிச்சு எங்களுக்கு.

"ஒண்ணும் வேணாம். பேசாம "பெட்டாஹ் (கொழும்பின் ஒரு ஏரியா)" போய் ஏதாவது சாப்பிடுவோம்." என்றான் மின்னிக்ஸ். சரி என்று பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். அது நாங்கள் வந்த பாதை வழியே ஓடத் தொடங்கியது. மேம்பாலம் வந்தது. கடந்து நேராகச் சென்றது. நான் இங்கி பிங்கி பாங்கி போட்டு தெரிவு செய்த பாதைக்கு நேர் எதிர்ப் பாதை அது. சந்தியிலிருந்து ஒரு ஐம்பது அடி தூரம் சென்றிருப்போம் "கே.எப்.சி" என்றொரு போர்டு எங்களைப் பார்த்து கண்சிமிட்டியது.

ஸாபித்தும், மின்னிக்ஸும் என்னைப் பார்த்து முறைத்தார்கள்.

இனி "இங்கி பிங்கி பாங்கி" போடுவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டேன்.



Wednesday 10 March 2010

எனது புதிய "பிஸினஸ் கார்ட்" வலைப்பக்கம்

ஒரு மாதிரியாக உருவாக்கியாகிற்று. இது தற்போதைய ட்ரெண்ட். தமக்கென "பிஸினஸ் கார்ட்/விசிட்டிங் கார்ட்" வைத்திருப்பது போல "பிஸினஸ் கார்ட் வலைமனைகள்" வைத்திருக்கிறார்கள் மக்கள். இதன் மூலம் ஒருவரை தொடர்பு கொள்வது எளிதாகிறது. உதாரணமாக இது உலகமயமாக்கல் காலம். இந்த உலகமே ஒரு கிராமமாக கருதப்படுகிறது. பில் கேட்ஸை எதோ நம்ம பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி அவன் இவன் என்றோ, எங்கோ யாரோ ஆற்றில் வழுக்கி விழுந்ததை நாம் நேரில் இருந்த பார்த்த மாதிரியோ பேசுகின்றோம். ஆக நம் பக்கத்து வீட்டுக்காரன் இணையத்தில் எங்கெல்லாம் இருக்கின்றார் என்பதை அவரே நமக்கு அறிவிப்பது இந்த "பிஸினஸ் கார்ட் வலைமனை" மூலம் சாத்தியம்.

இதன் மூலம் நன்மை???
பெரிசா ஒன்னும் இல்ல. உங்க விசிட்டிங் கார்ட் கொடுக்கிறதால என்ன நன்மையோ அதே. மற்றப்படி ஒருவரது நடவடிக்கைகளை நன்கு பாஃலோ பண்ணி, புறம் பேச ரொம்ப நல்லாவே ஹெல்ப் பண்ணும் :D

எனது வலைமனை.

தங்களது வலைமனைகளையும் இங்கே கமெண்டுங்கள்.



Tuesday 9 March 2010

கவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 4)

கட்டுக்கதைகள் சொல்வது எப்படி.
உண்மைச் சம்பவங்களை ஒரு கதையாக உருமாற்றம் செய்து தருவதில் பல நன்மைகள் இருக்கின்றன. பஃர் எக்ஸாம்பிள், கதை சொல்லி சில நாட்களின் பின் இது உண்மைச்சம்பவமாம் என்ற தகவல் பரவும் போது, "மாமே நியூஸ் கேட்டியா, அன்னிக்கு கேள்விப்பட்டமே ஒரு மேட்டரு அது மெய்யாலுமே நடந்திருக்குப்பா. நாம அது வெறும் கதைன்னுதானே நெனச்சோம். அப்டி இல்லப்பா. நம்ம ஊட்டாண்ட இருக்கிற யாரோதானாமே அந்த சேகரு. பாத்தியா, எவனையுமே நம்ப முடியறதில்லே" என்று பேசிக் கொள்ளலாம். இது ஒரு விதமான பாப்புலாரிட்டியை கொடுக்கும். மற்றையது நஸ்ருதீன் முல்லாக்கதைகள் போல நல்லவிதமான பாப்புலாரிட்டி.

 தற்போதைய காலங்களில் இந்த இரண்டாம் விதமான (நல்லபடியான) புகழ் வருவது மறித்துவிட்டிருந்தது என்றே சொல்லலாம். ஒரு உண்மைச் சம்பவத்துடன் இப்படியும் நடந்திருந்தால் இன்னும் த்ரில்லிங்கா இருந்திருக்குமே என்று நாம் நினைப்பவற்றை கொஞ்சம் சேர்த்து இரண்டாம் நபருக்கு சொல்லுவதில் தொடங்குகிறது கதையாக்கம். இந்த கதை அப்படியே ஒரு ரவுண்டு கட்டி ஊர் சுற்றி வரும் போது இன்னொரு புதுக் கதையாகி எமக்கே ரிடர்ன் வரும்.

கதைகள் வேகமாகப் பரப்புவதில் பெண்கள் கை தேர்ந்தவர்கள் என்றாலும், கதைக்கு நம்பக்கூடிய விதத்தில் புதிய கிளைக் கதைகளை இணைப்பதில் ஆண்களை மிஞ்ச முடியாது. ஒரு சம்பவம் எப்போது கதையாக உருமாறுகிறது என்றால் ஒருவரிடம் அதை சொல்லும் போது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருப்பதற்காக நம்ம கிரியேடிவ் ஐடியாவ பயன்படுத்தி எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் சேர்க்கும்போது. இதில் நாம் போய் சொன்னோம் என்று தெரிய வந்தாலும் "நான் அப்பிடித்தாம்பா கேள்விப் பட்டேன்" அல்லது "ஒரு பஃன்கு சொன்னேன்பா" என்று ஜகா வாங்கிக்கலாம்.

சரி, இதில் யாருக்கு என்ன லாபம்??? இது ஐன்ஸ்டீனுக்கும் விடை தெரியா ஒரு கேள்வி. சந்தோஷம்??? கதையினை முதலாவதாய் சொன்னது நாம்தான் என்பதில் உள்ள பெருமை???

இறுகிப்போன மனங்களின் வெளிப்படைத் தன்மையே இது. பக்கத்துக்கு வீட்டுக்காரன் கஷ்டப்படும் போதுமகிழ்வுறும் மனம் அதில் நம் கற்பனை சேர்த்து கதையாக இன்னொருவருக்கு சொல்லும் போது மோட்சமடைகிறது. எல்லாருமே அப்பிடி இல்லைதான். அப்படி இருப்பவர்களை பார்த்து இல்லாதவர்கள் போதனை செய்வதும் இல்லையே? இது ஏன்? துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை பின்பற்றுகிறோமோ?



Sunday 14 February 2010

கூகிள் பஸ் தேடுபொறி

ஒரு டெக்னாலாஜி பதிவு எழுதி ரொம்ப நாளாச்சு. பதிவே எழுதி ரொம்ப நாளாச்சு. இத  டெக்னாலாஜினும் சொல்ல முடியாது.

அண்மைக் காலங்களில் வலையுலகம் அதிகமாக பதிவிட்டது இந்த கூகிள் பஸ் பற்றித்தான். இத பாவிக்கறதுல ரொம்ப பேருக்கு செம குழப்பம். என்ன எழவுடா இது எங்கற ரேஞ்கும் போய்ச்சு. ட்விட்டரா இல்ல பேஸ்புக் ஷேயாரானு செம கன்பியூஷன். இருந்தாலும் அவங்க தந்திருந்த ட்விட்டர் போலவேயான சேவையான ஜைகூவை விட இது எவ்ளோ மேல்னு சொல்லலாம். இத பத்தி ரொம்பவே வலைப்பூக்களில் நீங்கள் படித்துவிட்டதால், இதற்கு அடுத்த கட்டமான சில விஷயங்களை பார்க்கலாம்.

கூகிள் பஸ்ஸில் பெரும் குழப்பம் இருந்தது அதன் வெளிப்படைத்தன்மை பத்தி. நாம ஷெயார் பண்ணுவதை பார்ப்பது நம்ம பின்தொடர்வாளர்கள் மட்டும்தானா?
ட்விட்டர் மாதிரி பப்ளிக்னு பப்ளிசிட்டி எல்லாம் பண்ணிட்டு, செய்யலைன்னா எப்பூடி....

இந்த கூகிள் பசங்ககிட்ட பிடிக்காததே இதுதான். எல்லாத்தையும் செஞ்சிட்டு கம்னு இருந்துடுவாங்க, சைனீஸ் மொபைல் மாதிரி (யூசர் மேனுவல் இருக்காது). அப்றோம் கொஞ்சம் கொஞ்சமா தயாரிப்பாங்க.
இவங்க எப்பவுமே இப்டித்தான். :)

மேட்டர் இன்னான்னா, பப்ளிக் ரிசல்ட்ஸும் இருக்கு மாமே. ஆல் யூ காட்ட டூ இஸ், ஜீமெயில்ல மெயில் சேர்ச் பண்ணுற பாக்ஸ்ல தேட வேண்டியதுதான். இது நீங்க கூகுள் பஸ் டேப்கு வந்த உடனேயே ஆட்டோமேட்டிக்கா "சேர்ச் பஸ்"னு மாறிடும். அப்றோம் வேண்டியத தேடிக்கலாம். செம ஸ்பீடு மச்சி.
கிவ் இட் எ ட்ரை...

இது இந்த வாரத்தோட நிலைமைதான். மீண்டும் சிந்திப்போம்....



Tuesday 26 January 2010

என்ன கொடும சார் இது. வட போச்சே!

முன் குறிப்பு: இதில் குறிப்பிடப்படும் நம்மாளு சத்தியமாக அடியேன் இல்லை என்பதை இத்தால் உறுதி செய்கிறேன் :D




கன்வர்சேஷன் 1: 
ஷெஹானிக்கு வேண்டப்பட்டவர்கள் யாவரும் அந்த நேரத்தில் பேஸ்புக்கில் ஆன்லைனில் இருக்காத படியால் நம்மாளிடம் வந்து ஹாய் சொல்ல...

4:10am ஷெஹானி: ஹாய், நான் உன் கூட ப்ரண்ட்ஷிப் வச்சிக்கலாம்னு நினைக்கறேன்

4:10am நம்மாளு: ஆஹ், சூப்பர். ஆனா நான் பொண்ணுங்க பின்னாடி அலையறவன் கிடையாது. சோ, உன்ன பார்த்து நீ செம ஹாட்னு எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கமாட்டேன். :D

4:10am ஷெஹானி: இப்போ நீ ஹாட்னு சொல்லி என்ன சொல்ல வாறே?

4:11am நம்மாளு : இப்போ எல்லா பசங்களுமே எல்லாப் போன்னுங்களையுமே அப்டித்தானே கூப்பிடுறானுங்க

4:11am ஷெஹானி: உனக்கு ஒரு பிரண்ட் கூட எப்பிடி பிஹேவ் பண்ணனும்னு தெரியாதா?

4:12am நம்மாளு : ஆஹ், நீ தப்பா புரிஞ்சிகிட்டே! நான் என்ன சொன்னேன்னு மறுபடியும் செக் பண்ணு. எனக்குப் பொண்ணுங்கள "ஹாட்னு" கூப்பிட பிடிக்காது. அவ்ளோதான்.

4:13am ஷெஹானி: ஓகே. சாரி.
                        
4:13am நம்மாளு : நான் சிம்பிளா சொல்லனும்னா, "யூ லுக் நைஸ்!".

4:13am ஷெஹானி: ஓகே. இப்போ நான் போகணும். அப்புறம் சந்திக்கலாம்.

4:13am நம்மாளு : ஹேய். கொஞ்சம் வெயிட். நான் உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்.

4:14am ஷெஹானி: ஓகே. கேளு.

4:14am நம்மாளு : நீ என் பிரண்ட் ஆக இருப்பியா, எப்பவும்? கேள் பிரண்டா இல்ல, ஆனா பெஸ்ட் பிரண்டா...

4:15am ஷெஹானி: ஆமா

4:16am நம்மாளு : என்ன நம்புறியா?

4:18am ஷெஹானி: ஆமாடா. ஆஹ், சமீர் ஆன்லைன் இருக்கான். அவன் கூட பேசணும். நான் போறேன், பாய்.

4:21am நம்மாளு : சமீர்? ஹேய், உன் நம்பர் கிடைக்குமா?

4:21am ஷெஹானி: அவன் என் பிரண்ட். நம்பரா? ஹிஹி :)

4:22am நம்மாளு : ஏன்? நான் சீரியஸாக கேக்கறேன். நீ என் பிரண்ட் தானே. எனக்கு பேஸ்புக்ல மட்டும் பிரண்ட் ஆக இருக்கறது பிடிக்காது.

4:22am ஷெஹானி: நான் சமீரிடம் கேக்கணும்.

4:23am நம்மாளு: அவன்ட எதுக்கு கேக்கணும்? அது உன் நம்பர்தானே?

4:24am ஷெஹானி: சமீர் சொன்னா தருவேன்.

4:24am நம்மாளு: ஓகே. வெயிட்.


கன்வர்சேஷன் 2: 
சமீரும் நம்மாளின் நண்பர் பட்டியலில் இருந்ததால், அவரிடம் சென்று கேட்டார் நம்மாளு.

4.33am நம்மாளு : நான் ஷெஹானிட்ட நம்பர் கேட்டேன். அவ உன்கிட்ட கேக்க சொன்னா, தர முடியுங்களா?

4:34am சமீர் : யார் நீ?

4:34am நம்மாளு : அவ புது பிரண்ட்

4:35am சமீர் : அவ என் லவ்வர். நீ சாட் பண்ணனும்னா பண்ணு. ஐ டோன்ட் கேர். பட் கால் எல்லாம் எடுக்க முடியாது. ஓகே?

4:34am நம்மாளு : ஆகா ஓகே ஓகே :D


கன்வர்சேஷன் 3: 
கன்வர்சேஷன் 2 அப்பிடியே காப்பி செய்யப்பட்டு அனுப்பப்பட்டது.
ஷெஹானி இதைப் படித்ததில் இருந்து இது தொடங்குகிறது.

4:42am ஷெஹானி: என்ன? சமீர் என்னை லவ் பண்ணுறானா?

4:42am நம்மாளு : அப்பிடித்தான் சொன்னான்.

4:42am ஷெஹானி: நெஜமாவா?

4:43am நம்மாளு : ஆமா.
                  
4:43am ஷெஹானி: வாவ். நானும் அவன லவ் பண்றேன். பட் எப்பிடி சொல்றதுன்னு தெரியாம தவிச்சிக்கிட்டிருன்தேன். தேங்க்ஸ்டா. ஐ லைக் யூ.

4:45am நம்மாளு : என்ன கொடும சார் இது. வட போச்சே!




பின் குறிப்பு: எல்லாத்துக்கும் அப்புறம் அதுங்க ரெண்டும் சேர்ந்து குரூப் மெசேஜ் ஒண்ணு தேங்க்ஸ் பண்ணி அனுப்பி இருந்திச்சுங்களாம்.
எல்லாம் ஒரு குரூப்பாத்தான்யா அலையறாங்க என்று புலம்பித் தீர்த்தார் :D



Thursday 21 January 2010

அவாஸ்ட் அண்டி வைரஸ்ஸின் புதிய பதிப்பு

அவாஸ்ட் அன்டி வைரஸ்ஸின் புதிய பதிப்பான 5.0.377 கடந்த 19 ஜனவரி 2010 இல் வெளியாகியுள்ளது. மிகவும் நீண்ட காலத்திற்குப் பின் வெளிவந்த அவாஸ்டின் ஒரு பதிப்பு இதுவாகும். புதிய லோகோ மற்றும் இன்டர்பேஸ் உடன் வந்திருக்கும் இதை வீட்டுப் பாவனைக்கு இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



கவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 3)

ஒரு மனிதனுக்கு உதவி செய்வதில் தங்கள் மனநிலை என்ன? கஷ்டப்படும் ஒருவருக்கு ஓடிச்சென்று உதவுவபரா? நான் இதில் ஆகவும் கீழ் ரகம். இவருக்கு உதவுதா வேண்டாமா என்று யோசித்தபடியே காலத்தை கடத்திவிடும் கேவலமான ரகம். இதில் என்னை விடவும் தாழ்ந்த பிரிவொன்று உள்ளது. அது இந்த சம்பவங்களை விற்றுக் காசாக்கும் மீடியா ரகம். ஒரு மனிதன் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது அவனுடன் இருந்த கடைசி நண்பன் எடுத்த வீடியோ எதோ காம்பட்டிஷனில் முதல் பரிசு வாங்கிய ஞாபகம்.

2 சந்தேகம்:
நேற்று பஸ்சில் மற்றுமொரு நெடுந்தூரப் பயணம். பாதித் தூரம் கடந்த போது பஸ்ஸில் மூச்சு முட்டிக்கொண்டது. ஆரம்பத்திலேயே நல்ல சீட் கிடைத்த படியால் எந்த தொந்திரவும் இருக்கவில்லை. ஒரு 3 அல்லது 4 சீட்களுக்கு முன்னாடி ஒரு வயதான பெண்மணி (அபௌட் 45 இருக்கும்) நின்று கொண்டிருந்தார். என் அம்மாவை ஒத்த தோற்றம். சற்றுப் பெருத்த உடம்பு. நிற்கக் கஷ்டப் படுவதான தோற்றம். ஆனா பஸ்ஸில் அசையக் கூட முடியாத நிலை. அவங்க கூட வந்த சின்னப் பொண்ணுக்கு எப்படியோ சீட் கிடைத்துக் கொண்டது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த என் மைன்ட் தாறுமாறா யோசிக்கத் தொடங்கியது.
யோசனை 1: நான் எழும்பி இடம் கொடுத்தால் என்ன?
யோசனை 2: இதையே அந்தச் சின்னப் பெண் செய்தால் என்ன?
யோசனை 2 என் மனதில் வரக் காரணம், நான் இதை நினைக்கும் போது நான் பயணம் போய்க் கொண்டிருக்கும் தூரத்தை எண்ணிப் பார்த்தது.
யோசனை 3: நான் எழும்பி இடம் கொடுக்க முற்படுகையில் என் ஆசனத்துக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் நபர் இருந்து விட்டால்? முன் பின் அசைவது போலவும் எழும்ப முயற்சிப்பது போலவும் சில சீன்கள் போட்டுப் பார்த்தேன். நபர் என் இடத்தை கைப் பற்ற தயார் ஆவது தெரிந்தது.
யோசனை 4: இதேமாதிரி அப் பெண்மணியின் இடத்தில் என் அம்மா இருந்திருந்தால்??? அம்மா பஸ்சில் பயணிப்பதில்லை என்று அதற்கு மறுமொழியும் கிட்டியது.
யோசனை 5: அப் பெண்ணிற்குப் பக்கத்தில் இருந்தவர் எழும்பி இடம் தராதது ஏன்?
யோசனை 6: இவரைப் பார்க்காதது போல் முகத்தை திருப்பி வைத்துக் கொண்டால் என்ன?

இவ்வாறு பல விஷயங்களை யோசித்ததில் எனது டெஸ்டிநேஷனை சென்றடைந்து விட்டிருந்தேன். அப்போதும் அந்தப் பெண் நின்று கொண்டிருந்தார்.

என்னால் அவருக்கு இடம் கொடுத்திருக்கக் கூடியது அப்படி ஒன்றும் கஷ்டமான காரியமில்லை. உக்கார முயற்சி பண்ணிய பக்கத்து நபரை ஒரு வாய்ப் பேச்சில் தடுத்து அவருக்கு புரிய வைத்திருக்க முடியும். இந்தப் பெண்மணியை கூப்பிட்டு இவ்விடத்தில் அமரச் செய்திருக்க முடியும்.இவையெல்லாம் நான் செய்யாததற்கு காரணம் என்ன? ஒரே பதில், சந்தேகம். அது என் மீதோ, அந்தப் பெண்மணி மீதோ, பக்கத்தில் நின்ற நபர் மீதானதாகக் கூட இருக்கலாம். உதவி செய்வதன்று புறப்பட்ட பின் உதவி பெறுபவரின் காரக்டர் பத்தி சந்தேகப் பட்டுக் கொண்டிருப்பது, உங்களை அந்த உதவி செய்தலிலிருந்து தடுத்து விடும். இந்த ஹெல்ப் இவருக்கு பிரயோசனமா என்று யோசியுங்கள், ஆம் என்றால் உதவி செய்திடுங்கள். அப்பால நடக்கிறது எல்லாத்தையும் மெயின்டெய்ன் பண்ண மேல ஒருத்தரு இருக்காரு.

நான் பஸ்ஸை விட்டு இறங்கினேன், மனது கனத்திருந்தது...

அலசல் தொடரும்...



Wednesday 20 January 2010

பில் கேட்ஸ் ட்விட்டரில்...

இறுதியாக பில் கேட்ஸ் என்ற மீனும் ட்விட்டர் என்ற வலையில் மாட்டிக் கொண்டது... கடந்த 11 மணி நேரத்துக்கு முதல் இவர் தனது முதலாவது ட்வீட்ஐ செய்துள்ளார். இந்த கணத்தில் 135,000 பின்தொடர்கையாளர்களை கொண்டுள்ள இவரது ப்ரோபைல் சராசரியாக ஒரு செக்கனுக்கு 15 பின்தொடர்பவர்கள் வீதம் அதிகரித்து செல்கின்றது. இது ஒரு வாரிபைட் அக்கௌன்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன கொடும சார் இது :/



கவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 2)

முதல் பாகம் எதிர்பார்த்த அளவுக்கு வசூலில் கல்லா கட்டாமையால் 2 ஆம் பாகத்தை வெளியிடுவதில் சில எக்கனாமிக்கல் ப்ராப்ளம் வந்திடுச்சு. இருந்தாலும் தொடங்கியத முடிக்க வேண்டிய கட்டாயம் ஒன்னு இருக்கே...


சரி, மேட்டருக்கு வருவோம். சென்ற பதிவு பல கேள்விகளுடன் முடித்திருந்தோம். இனி ஒவ்வொண்ணா அலசலாம். 



பர்ஸ்ட் இன்டெர்நெட்டின் பாதுகாப்பின்மை. இணையத்தில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை, ப்ரைவசி. சரி இதுக்கேன் இவ்ளோ முக்கியத்துவம். ஒருத்தர பத்தி விஷயங்கள தெரிஞ்சிக்கறதுல என்ன தப்பு? இதில் உள்ள பாயிண்ட் என்னவென்றால், ஒருவரைப் பற்றி அவரது அனுமதி இல்லாமல் தெரிந்து கொள்ள இணையத்தில் இலகு வழிகள் இருப்பது... அப்போ நிஜ வாழ்க்கையில்? அது அதை விட இலகு. பட் நாம் ஏன் இணையத்தை மட்டும் சாடுகிறோம்? ஏன் இன்டர்நெட்டை எண்ணி அளவுக்கதிகமாக பயப்படுகின்றோம்? இதற்கு விடை தேடுவது ரொம்பவே கொம்ப்ளிகேட்டட் ஆனா இஷ்யூ. 


இப்போ பார்த்தீங்கன்னா, உங்க தெருவுக்கு புதுசா ஒருத்தர் குடி வார்ரார்னு வச்சிக்குவோம். அல்லது உங்கள பொண்ணு அல்லது மாப்பிள்ளை பார்க்க ஒரு பாமிலி முடிவு பண்ணுதுன்னு வச்சிக்குவோம். உங்க அனுமதி இல்லாம உங்களபத்தி, உங்களுக்கே தெரியாத, உங்க பேங்க் அக்கௌன்ட் டீட்டைல் வரைக்கும் பல விஷயங்கள அவங்க சேகரிக்கிரதுக்கு ஒரு வாரம் போதும். அப்போ இதை நாம் ஏன் பெரிசு படுத்துவதில்லை? இதுவும் ஒரு விதமான ஹாக்கிங் தானே? எப்பவாவது இவர் என்னை லவ் பண்ண முன்னாடி என்னை பற்றிய டீட்டேயில்ஸ் சேகரிச்சார்னு கேஸ் போட்டிருக்கோமா?


இவ்வாறு 2 ஒரே மாதிரியான விஷயங்களுக்கு வெவ்வேறு 2 விதமான கண்ணோட்டங்கள் இருப்பதற்கு காரணம், புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குழப்பம். இன்னிக்கு வரைக்கும் கூட எங்கள் ஊரில் இணையம் ஒரு மோசமான நண்பனாவே கருதப்படுகின்றது. பெண்கள் இணையத்தில் பங்கெடுப்பதை அவர்கள் குடும்பம் விரும்புவதில்லை. எனக்கு இணையம் அறிமுகமாகியது 1999/2000 ஆண்டு காலப் பகுதி. எனது 11 வயதில். அப்போதும் எனது பெற்றோருக்கு இன்டர்நெட் பற்றி ஒரு தப்பான கண்ணோட்டமே இருந்தது. எனினும் நான் ஆசைப்பட்டேன் என்பதற்காக அவ்வசதி ஏற்படுத்தி தரப்பட்டது. இதுவே நான் ஒரு பொண்ணாக இருந்திருந்தால்? பொம்பளப் பிள்ளைக்கு எதுக்கு கம்பியூட்டர் என்று சொல்லி இருந்திருக்கக் கூடும். இவ்வாறு அவர்கள் பயப்பட ஏன் காரணம்? கலாசார சீர்கேடுகள்! அப்போ கலாசாரத்தை பாதுகாக்க ஒரு பெண்ணின் படிக்கும் ஆசையினை விலையாகக் கொடுக்கும் வியாபாரம் நியாயமானதா? இதுவும் குழப்பமான பல விடைகளை தரக் கூடிய ஒரு கேள்வி.


இனி நாம் பரிச்சயப்பட்ட பல தலைப்புகளின் கீழ் எம்மைச் சுற்றியுள்ள "கவனிக்கப்படாத நிஜங்களை" ஆராயலாம்.


1. தயக்கம்:
கம்பஸ்ல இருந்து வீட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்தேன் சில நாள் முன்னாடி. ஒரு அழகான பொண்ணு அமர்ந்திருந்த சீட்ல பக்கத்துல இருந்த ஒருத்தர் எழும்பி அடுத்த நிறுத்தத்தில் இறங்கப் போனார். கிடச்சிச்சுடா சாமி (உக்கார ஒரு இடம் - எங்கறத மட்டும் மீன் பண்ணவும், டபிள் மீனிங் வேணாம்) கணக்கா பொய் அமர்ந்து கொண்டேன். அவ்ளோ நேரம் ஐபாட்ல பாட்டு கேட்டிட்டிருந்த அவ முகம் சுர்ருன்னு சுருங்கிப் போச்சு. நான் கொஞ்சம் சுமார் (ஓகே ஓகே ரொம்பவே சுமார்) என்கிறது ஒரு புறம். பட் ஏன் இப்பிடி அவ முகம் சுளிக்கனும்னு யோசிச்சேன். அவ ஒரு ஸ்மைல் பண்ணி இருந்தான்னா எனக்கு அவ கூட ஒரு ஹாய் சொல்றதுல எந்த தயக்கமுமே இருந்திருக்காது. ஆனா அவ இப்பிடி பண்ணதால எனக்கு அது முடியாம போச்சு. புதிய உறவுகளை ஏற்படுத்திக்க மக்கள் ஏன் தயங்கனும். ஏமாத்திடுவாங்கன்னு பயம்??! அவங்க ஏமாத்தற அளவுக்கு நாம ஏன் இடமளிக்கனும். என்னையும் இப்பிடி ரொம்ப பேர் ஏமாத்தி இருக்காங்கதான். இப்பிடி ரெண்டு மூணு தடவை அடி பட்ட போதுதான் எவ்வாறு ஒரு பாதுகாப்பான உறவை ஏற்படுத்தலாம் என்கற யுக்தியை தெரிந்து கொண்டேன். அதில் முதலாவது நீங்கள் நம்ப வேண்டியது மற்றும் உங்களுக்கு நீங்களே சொல்லிக்க வேண்டியது "இவங்க என்னை விட்டுட்டு போறதால நான் கவலைப் பட மாட்டேன்." இது உறவுகள் மீதான நம்பிக்கையை பொய்யாக்குதுன்னு சில பேர் சொன்னாங்க. யு ஜஸ்ட் ட்ரை அண்ட் சி. கடைசியா ஏமாத்தின ஒரு பிரன்ட் சொன்னான் "நண்பர்களை நம்பாதே" :/ நான் சொன்னேன் "நட்பே நம்பிக்கைலதானேடா இருக்கு" உறவு முறைகளின் மீதான பிழையான புரிதலே அவன் இவ்வாறு சொல்லக் காரணம்.  இனி அவனால எப்படி மற்றவங்க கூட ஒரு உண்மையான நண்பனா இருக்க முடியும்? நான் யாரை கண்டாலும் முதல்ல இவங்க கூட எப்டி பிரண்ட் ஆகலாம்னுதான் யோசிப்பேன், பட் ரொம்ப பேரு எப்படி எமாத்தலாம்னு யோசிக்கறாங்க. இவங்க தேவை நிச்சயம் பணமாக இருக்கும். அல்லது இவர்கள் இவ்வாறான விஷயங்களில் சந்தோஷம் காணும் சைக்கோ அல்லது அட்டிக்ட்ஸ் ஆக இருப்பார்கள். பர்ஸ்ட் கட்டக்கரில இருக்கறவங்கள திருத்தறது ஈசி. ஆனா மூனாவது பிரிவைச் சேர்ந்தவங்கள மாத்தறதுதான் ரொம்ப கஷ்டம். இவங்க கேட்டகரி 1 + கேட்டகரி 2 வைச் சேர்ந்தவங்க. இவங்க பாதிப்பு எந்த அளவுக்குன்னா முதலாவதா ஒருத்தர மீட் பண்ணும் போது 'இவன் நம்மள ஏமாத்திடுவானோன்னு' சந்தேகம் வரும் அளவுக்கு நம் மனதை பாழ் படுத்திவிட்டு இருக்கரார்கள். இவ்வாறானவார்களாலேயே மக்கள் புதிய உறவுகளை ஏற்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். எடுத்துக் காட்டு, நான் பஸ்சில் சந்திச்ச அந்த அழகான பெண். இணையத்தில் இதன் விளைவு இதைக்காட்டிலும் 2 மடங்கு...


இன்னும் அலசுவோம்....



Tuesday 19 January 2010

கவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 1)

முன் குறிப்பு: இந்தத் தொடர் பதிவுகள் பலரது எதிர்ப்பையும் சிலரது பாராட்டையும் சம்பாதிக்கக் கூடியன. மற்றும் இவை விவாதத்திற்காக அல்ல :)

விருமாண்டி பெயர் குழப்பத்தின் போது கமல்ஹாசன் குடுத்த பேட்டி பற்றி ரொம்ப பேருக்கு தெரிந்திருக்கும். அதையும் விட ரொம்ப குழப்பமா போச்சு இந்த பதிவுக்கு பேர் தேடிய படலம்.

ஆக்சுவலா நானும் என் நண்பன் மின்னிக்ஸ் உம் கொஞ்ச நாள் முன்னாடி பேசிக்கொண்டிருக்கும் போதே வந்திச்சு இந்த ஐடியா. நார்மலா தொடங்கிய அரட்டை வர்ச்சுவல் வேர்ல்ட் இன் நம் மீதான பாதிப்புகள் பற்றி பேசப்போய் மாட்டிக் கொண்டது இந்த மீன். முதலில் பேஸ்புக் பற்றித்தான் ஆரம்பிச்சோம். அப்புறம் பஸ்ல போற வாரவங்கள எல்லாம் நோட்டம் போட ஆரம்பிச்சோம். சும்மா சொல்லப்படாது. செம எக்ஸ்பீரியன்ஸ் அது. நாம வேணான்னு தூக்கி எறிஞ்ச பல விஷயங்கள்ல ரொம்பவே இன்டெரெஸ்டிங்கான விஷயங்கள் இருக்கு. வாழ்க்கைல நாம மீட் பண்ற ஒவ்வொரு நபரும் ஒரு வித்தியாசமான காரக்டர். அவருக்கென்று தனித்தன்மைகள் இருக்கும். இது சாதாரணமா வெளில தெரியாது. இப்படி ஒரு விஷயத்தை அலசுவதுதான் எங்க கான்சப்ட். இப்படி பல விஷயங்கள் சம்பந்தப்படுறதால என்ன பேரு வைக்கறதுன்னு ப்ராப்ளம் வந்திச்சு. மின்னிக்ஸ் "பேஸ்புக் பக்கங்கள்" இலேயே எழுதரேன்னாரு. நான் கொஞ்சம் டைம் எடுத்துகிட்டேன். இந்த தலைப்பு பரவால்லன்னு பட்டதும் உடனே பதிவெழுத ஆரம்பிச்சிட்டேன். முதல் கோணல் முற்றும் கோணல் ஆயிடக்கூடாதுல்ல. அதான் இப்பிடி.

சரி முதல் இன்சிடன்ட்கு வருவோம். இங்கதான் பேஸ்புக்கின் வருகை...
சென்ற வருடத்தின் சம்மர் சீசனில் ஒரு நாள். நாங்கள் பேஸ்புக்கில் உலவிக்கொண்டிருக்கும் போது வந்தது ஒரு மெசேஜ், பேஸ்புக் இன்பாக்ஸ் இற்கு. ஒரு பொண்ணு. ஆமா எப்பவுமே பிரச்சனை அங்கதானே தொடங்குது :D. அவ கேட்டிருந்தா, "டூ ஐ நோ யூ?". கேள்வி வாஸ்தவம்தான். பட் அதுக்கப்புறம்தான் ப்ராப்ளமே ஸ்டார்ட். நான் ரிப்ளை பண்ணேன், "நோ, பட் வி கேன் கெட் டு நோ ஈச் அதர்". அவகிட்ட இருந்து பளீர்னு வந்திச்சு "சாரி, ஐ டோன்ட் அட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்." சரி இதுல நாம் கவனிக்க வேண்டி இருக்கறது சில விஷயங்கள். பொதுவாவே இணையம், சோசியல் நெட்வேர்க்கிங் தளங்கள் பற்றி மோசமான உண்மைச் சம்பவங்கள் உலவுவது நாம் அறிந்ததே. முன் ஜாக்கிரதை தேவைதான். பட் அந்த "கன்பர்ம் பிரண்ட் ரிகுவஸ்ட்" பட்டனை அழுத்த ஆயிரம் கேள்வி கேக்கறவங்க நிஜ உலகுல இப்பிடி இருக்கறாங்களா?. ஒரு ஸ்ட்ரேஞ்சர்தானே பிரண்ட் ஆக முடியும். இப்போ இருக்கும் எல்லா நண்பர்களும் முன்னாடி யாரோ தெரியாதவங்கதானே. பேஸ்புக் இல் அல்லது மற்ற இணையம் சம்பந்தப்பட்ட வழிகளில் உண்மையான உறவுகளை ஏற்படுத்த முடியாதா? இணையத்தில் ஒருவரை ஏமாற்றுவதால் எமக்கு என்ன லாபம்?

கேள்விகளுடன் காத்திருங்கள்... கூடிய சீக்கிரமே எல்லோரும் சேர்ந்து விடை தேடலாம்...

:)



Sunday 17 January 2010

யாதுமாகிய நட்பு...

மின்னஞ்சல் ஒன்று கிடைத்தது ஒரு வாரம் முன். நட்பின் பெருமைகளை அளவளாவி இருந்தது அது. அதை வாசித்த போது என்னுள்ளே உதித்தவை...

பொதுவாகவே நட்பைப் பற்றி பெருமையாகவே விஷயங்கள் கூறப்படுவதுண்டு. எனவே நம்பிக்கை துரோகம் என்பது நட்பில் பாரிய ஒரு குற்றமாக கருதப்படுகிறது. அதுலயும் இன்னா மேட்டர்னா சிறந்த நண்பன், சாதா நண்பன்னு 2 பிரிவு வேற வச்சுப்புட்டாங்க. இதாலேயே ப்ரண்ட்ஸ்ஸுகுள்ள செம ப்ராப்ளம் வர ஆரம்பிச்சிச்சு. யாரு எந்த கேட்டகரின்னு பிரிச்சுக்க சண்டை போட்டாங்க. பெஸ்ட் ப்ரண்டா ஒருத்தன்தான் இருக்க முடியும்னு நெனச்சாங்க. அந்த இடத்துக்கு போட்டி அதிகமாச்சு. அதனால யாராளையுமே அந்த இடத்த தக்கவச்சிக்க ஏலாம போச்சு. பெஸ்ட் ப்ரண்டு அந்த இடத்த தக்க வச்சிக்க ஏனையவங்க மேல வீண் பழி போடா ஆரம்பிச்சான். நட்புக்குள்ளே அரசியல் யுக்திகள் வந்திச்சு. சாதா நண்பன் ரொம்ப நல்லவனா வேஷம் போடா ஆரம்பிச்சான். அவன் நெஜமாவே நல்லவனா இருந்தாலும் "ஒருவேள நடிக்கிறானோ" என்று தோண ஆரம்பிச்சது. நட்பு மேல சந்தேகம் வந்திச்சு.

"சாதா நண்பன் அலுமாரியை தூக்க உதவுவான், உயிர் நண்பன் நீ கொலை செய்தால் பிணங்களை கூட தூக்க உதவுவான்" என்றெல்லாம் மேற்கோள்கள் வந்திச்சு. அப்போ கொலை செய்யாதே அது பாவம்னு தடுப்பவன் எந்த பிரிவுன்னு சந்தேகம் வந்திச்சு. ஒரு நண்பன் எப்டி என் கூட இருக்கானோ அப்டித்தான் நான் அவன் கூட இருப்பேன்னு ஒரு முடிவு எடுத்தாங்க. ஒரு பண்ட மாற்று ரேஞ்சுக்கு நட்பு என்னும் உறவு போச்சு. நிலங்களுக்கு நிலம் நட்பின் வரைவிலக்கணம் மாறு பட்டிச்சு. சில இடங்கள்ல நட்பின் விரல் மூக்கு வரைக்கும் தான் வாரலாம்னாங்க, சில இடங்கள்ல நட்பின் கைகள் கழுத்தைப் பிடித்துக் கூட சில விஷயங்கள் சொல்லலாம்னு உரிமை இருந்திச்சு.

இந்த அண்டத்தின் ஏதோ ஒரு மூலைல நட்பின் மூதாதையர் திருப்திப் பட்டுக்கொண்டனர், "ஏதோ நம் பரம்பரை இன்னும் உயிர் வாழ்கிறதே" என்று :)