Sunday 26 December 2010
மன்மதன் அம்பு
Saturday 25 December 2010
வளவளத்தாரின் கடை
Monday 15 November 2010
பேஸ்புக்கும் காதல்களும் - 3
Sunday 31 October 2010
பேஸ்புக்கும் காதல்களும் - 2
Saturday 30 October 2010
பேஸ்புக்கும் காதல்களும்
Thursday 28 October 2010
Why I hate wedding?
இணையத்தில் ரசித்தது இது... என் சுய ஆக்கமில்லை...
கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான். இப்பதாண்டா எதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது.
வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது. பொண்டாட்டி முன்னாடி இப்படி சொல்லிட்டு,அவங்க Kitchen உள்ள போனவுடனே , கையெடுத்து கும்புட்டு தயவு செஞ்சு அந்த தப்ப மட்டும் பண்ணி மாட்டிக்காத மச்சின்னு கெஞ்சற நண்பன்....
எவ்ளோ நிம்மதியா இருந்தேன்..கல்யாணத்த பண்ணி வெச்சு என்ன என் புருசனுக்கு அடிமையாக்கிட்டாங்க, என் தோழி ஒருத்தி...
தம்பி அடுத்த வருஷம் ஜூன்'குள்ள கல்யாணத்த முடிசிரனும்டா. நல்ல பொண்ணு கிடைச்சுதுன்னா விட்ற கூடாது, என் அம்மா...
டேய் கல்யாணத்துக்கு நெறைய செலவாகும். வழக்கம் போல பெருந்தன்மையா நீங்களே பார்துகங்கப்பானு சொல்லிட்டு போய்டாத. மரியாதையா காச சேர்த்து வை, என் அப்பா...
சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா. காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ் போடலாம்னு நானும் ரெண்டு வருசமா வெயிட் பன்றேனு சொல்லிட்டு, மூதேவி இதுவும் பண்ணிக்கமட்டேன்குது எனக்கும் பண்ணி வெக்க மாட்டேன்குதுன்னு மனசுக்குள்ள முனுமுனுக்கற என் தங்கச்சி...
கல்யாணம்லாம் சும்மா பிரதர், வெத்து மேட்டரு, ஒன்னும் இல்ல அதுல, பார்ல சிகரட் ஓசி வாங்குன கடனுக்கு அட்வைஸ் பண்ண வஸ்தாது ஒருத்தர்.
கல்யாணம்... கல்யாணம்... கல்யாணம் ...
25 or 27 வது வயசுல ஒரு பிரம்மச்சாரியை லேசா பயமுறுத்தி அதிகமா பதட்டபடுத்தி கொஞ்சமா ஷாக் அடிக்க வைக்கற ஒரு வார்த்த. அப்டி என்னதாங்க இருக்கு இந்த கல்யாணத்துல...
முதல் 3 மாதம் திடீர்னு ஒரு நாள் ஒரு பொண்ணு பொண்டாட்டிங்க்ற பேர்ல உங்க வீட்டுகுள்ள வருவா...
பின்னாடி ஒரு கூட்டமே வந்து விட்டுட்டு போகும்...
பீரோகுள்ள உங்க துணிய நகர்த்தி வெச்சுட்டு அவங்க துணிய அடுகிக்குவாங்க. உங்க பாத்ரூம்ல அவங்க சோப்பும் ப்ரச்சும் எடத்த புடிச்சுக்கும். அடுத்த நாள் ஆபீஸ் போகும்போது சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்கன்னு குழைஞ்சு குழைஞ்சு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே சொல்லுவாங்க. ஊர்ல டம்மி பிகர் கூட மதிக்காத நம்மள இந்த புள்ளைக்கு இவ்ளோ புடிசிருகேன்னு நம்மளும் வழிஞ்சுகிட்டே சீக்கிரம் வர ஆரம்பிப்போம்... (இது அடிமையாகுதலின் முதல் கட்டம்)
அப்பறம் உங்கள அடிமையாக்கரதுக்கு, உண்டான பணிகள் வேகம் வேகமா கனஜோர்ல நடக்கும்.
(அவங்க கூட படிச்ச வில்லிங்கல்லாம் வேற இதுக்கு ரூம் போட்டு ஐடியா குடுப்பாங்க)
மற்றொரு அழகான மாலை பொழுதுல புது பொண்டாட்டிய ஷாப்பிங் கூட்டிட்டு போவீங்க. அவங்க 3 வருசமா வாங்க நெனச்சு வாங்காம இருந்த எல்லாத்தையும் அப்பதான் வாங்குவாங்க...
அவங்க வாங்கற நெய்ல் பாளிஷ்க்கும் பாடி ஸ்ப்ரேக்கும் நீங்க தெண்டம் அழுகனும். கான்டாதான் இருக்கும், என்ன பண்றது...
அவங்களோட ஒவ்வொரு சினுங்களுக்கும் கிரெடிட் கார்ட் கிழிய கிழிய தேய் தேய்னு தேய்ப்போம். பில்லு எகிர்றது பார்த்து மனசு பதர்னாலும் உதடு வேற என்ன வேணும் என் செல்லகுட்டிக்குன்னு கேக்கும்...
வீட்டுக்கு விருந்தாளிங்க்ற பேர்ல வந்து டேரா போன்ற அவங்கப்பன் விருமாண்டி கிட்ட கூட பாசமா நடந்துகுவோம்... (எல்லாம் நடிப்புதேன். எந்த ஊர்ல மாப்பிள்ளைக்கு அவன் மாமனார புடிச்சிருக்கு)
கொஞ்சம் கொஞ்சமா நீங்க நீ'யாயிட்டு வருவீங்க...
ஆறு மாசம் ஓடிடும். அதுக்கப்றம் எங்க ஒய் இருக்கு உமக்கு வாழ்க்கை. அடிமை ஒய் நீரு...
பிரென்ட் ரூம்ல போய் விடிய விடிய கதையடிச்சிட்டு பேசுற சுகம் அதுக்கப்றம் கனவாவே போய்டும். எங்க போறோம், எதுக்கு போறோம்னு தெரியாம எங்கெங்கயோ போன தருணங்கள் மனசுக்குள்ள வெறும் நினைவுகளா மட்டுமே இருக்கும்...
எந்த பொண்ண பார்த்தாலும் நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளோ, அப்டி இருப்பாளோங்கற அந்த curiosity சுத்தமா இருக்காது. செகண்ட் ஷோ சினிமா கட் ஆகும். குஷி ஆனா அடிக்கற பீர், தம்[எப்போவாவது] கட் ஆகும். நிம்மதியா செலவு பண்ற சுதந்திரம் கட் ஆகும்...
என்ன கொடும சார் இது...
இதுக்குதான் இந்த கருமம் புடிச்ச கல்யாணத்த வேண்டாம்ன்னு சொல்லுறேன்...
வாழ்க்கைல சந்தோஷமான தருணம் bachelor life மட்டும்தான்னு எனக்கு தோனுது...
நீங்க என்ன நெனைக்கறீங்க?
Wednesday 29 September 2010
மேகத்தில் ஒரு கம்பனி!
ஹேய் ப்ரெண்ட்ஸ்! இன்னும் இந்த ப்ளாக் அப்டேட்டாகும்னு யாராச்சும் நம்பிட்டு இருக்கிறீங்களா? அப்டீன்னா ரொம்ப நல்லவருதான் நீங்க! ரெண்டு மாசமாகுது லாஸ்ட் போஸ்ட் எழுதி! எழுதவே டைம் இல்ல... அவ்ளோ பிசின்னு பொய் சொல்ல விரும்பல்ல! ப்ளாக் எழுதுற மூட் இல்ல! அதான் மேட்டர்!
லாஸ்ட் ரெண்டு மாசமா விஜய் படம் மாதிரி தொடர் தோல்விகள்தான்! முதல் காதல்... முதல் தோல்வி... பேஸ்புக் லவ் பேஸ்புக்காலேயே முறிஞ்சிடுச்சு! அதையே... அவளையே நெனச்சு நெனச்சு ஃபீல் பண்ணிக்கிட்டு கெடந்ததுல அசைன்மென்ட், ப்ராஜெக்ட் எல்லாம் ஊத்திகிச்சு! உடைஞ்சிபோன இதயம், ஊத்திக்கிட்ட அசைன்மென்ட், ப்ராஜெக்ட் எல்லாம் பிக்ஸ் பண்ணினதுல ரெண்டு மாசம் ஓடிடுச்சு! இப்போ கொஞ்சம் பரவால்ல!
ஆல்றைட்! இப்போ டைட்டில் மேட்டருக்கு வருவோம். நாங்க ஒரு கம்பனி ஸ்டார்ட் பண்ணி இருக்கோம்! "வாட்? கம்பனியா? அத ஏதோ பப்பிள்கம் சாப்பிட்ட மாதிரி சிம்பிளா சொல்லுறே?" எண்டுதான் நீங்க கேப்பீங்க! நம்புங்க பாஸ்! காமடி கீமடி பண்ணல... நிஜமாவேதான்!
இந்த ஸ்டோரி கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கு முன்னால நான் என் ப்ரெண்ட் முறுவோடரூமுக்கு விசிட் அடிச்சதுல இருந்து தொடங்குது... நள்ளிரவு நேரம் அப்பிடியே நெட்ல ப்ரவ்ஸ் பண்ணிட்டு பேசிகிட்டே இருந்ததுல இந்த சொந்தக் கம்பனி ஸ்டார்ட் பண்ணுற (சொந்த செலவுல சூனியம் வெச்சுகுற) ஐடியா க்ளிக்காவிச்சு! என்ன கம்பனி? ஒருக்ளவ்ட் கம்பனி! அதாவது வெப்சைட் மற்றும் வெப் அப்ஸ் க்ரியேட் பண்ணுற கம்பனி! கொஞ்சம் கவித்துவமா சொல்லப்போனா மேகத்தில் ஒரு கம்பனி! (ஒருவழியா டைட்டில கனெக்ட் பண்ணிட்டேன்!)
கம்பனி ஏன்டா அதுக்கு ஒரு பேரு, ஒரு லோகோ வேணும்ல? அதுக்கு ரூம் போட்டு யோசிச்சோம்! ஆமா நிஜமாவே ரூம்ல இருந்துதான் யோசிச்சோம்! நெறைய பேரு ட்ரை பண்ணி கடைசியில அக்ஸரா என்ட பேரு கெட்சியா இருந்துச்சின்னு செலக்ட் பண்ணினோம்! கம்பனி பேருக்கும் கமல் மகளுக்கும் (?!) சத்தியமா எந்தத் தொடர்பும் இல்லீங்க! பேரு ஓகே! அப்புறம் கம்பனி லோகோ டிசைன் பண்ணனுமே... நெட்ல அலைஞ்சுதிரிஞ்சு (?!) நெறைய ஃபொன்ட்ஸ் டவுன்லோட் பண்ணி... நெறைய கலர்ஸ் ட்ரை பண்ணி... ஒருவழியா லோகோவும் ஓகே! அப்படியே கம்பனி வெப்சைட்டையும் க்ரியேட் பண்ணியாச்சு! இதெல்லாம் முடிய ஒரு ஆறு மாசம் ஓடிடுச்சி! அடுத்து டொமைன் நேம் வாங்கி ஹோஸ்ட் பண்ணிட வேண்டியதுதான்னு போனா அந்த நேம் அவைலபிள் இல்லியாம்! சரியாப்போச்சி! அப்பிடியே எல்லாத்தையும் போட்டுட்டு எங்க சொந்த சோகத்துல (?!) மூழ்கிட்டோம்!
அப்புறம் நாங்க இன்னும் கொஞ்ச ப்ரெண்ட்ஸ் வந்து சேந்தாங்க... முறு திரும்பவும் கம்பனி ஐடியாவ தூசு தட்டி எடுத்தான். அக்ஸரா என்கிற நேம் பிடிக்கல்ல... ச்சேன்ஞ் பண்ணனும் என்டான்! திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிச்சோம்! இந்தவாட்டி நியோ (புதிய) என்கிற க்ரீக் வேர்ட் மற்றும் நொரா (ஒளி) என்கிற அரபிக் வேர்ட் ரெண்டையும் மிக்ஸ் பண்ணி நியோநொரா எண்டு பேரு வெச்சோம்! ஒரு கலர்புல்லான லோகோவையும் ரெடி பண்ணினோம்! அப்புறம் வெப்சைட்டும் ரெடி! டொமைன் நேம் கூட அவைலபிள்! எங்ககிட்ட அத வாங்க பணம் இருக்கு, ஆனா க்ரெடிட் கார்ட்தான் இல்ல! இதுவும் சரிப்படாதோன்னு தோணிச்சு! கடைசியில என் ப்ரெண்ட் ஒருத்தன் ஹெல்ப் பண்ணினான்! அவ்ளோதான்! உடனே சட்டுப்புட்டென்னு நானும் முறுவும் மீட் பண்ணின இடம் கேஃஎப்சி!
ஆமா, கேஃஎப்சி கோழிக்கடைல (?!) வச்சுதான் வெப்சைட் லாஞ் பண்ணினோம்! அது மழை தூறிக்கொண்டிருந்த செப்டெம்பர் மாதம் 27ம் நாள். கிட்டத்தட்ட ஒரு வருசக்கனவு நனவாயிடுச்சி! மேகங்களின் மேல் இன்னும் எவ்ளோ கனவுகள் இருக்கு! இந்தக் கனவுகளைத் துரத்துறது எவ்ளோ சந்தோசமான விஷயம் தெரியுமா?
Thursday 12 August 2010
சர்வைவல் ஒப்ஃ தி பிஃட்டஸ்ட்
இங்கு இதைப் பற்றிப் பேசி வாங்கிக் கட்டிக்க விரும்பலை.
ஒரு சின்ன, மீன் கதை.
நான், அப்பா, கிராண்ட் பா மற்றும் மாமா எல்லோரும் சற்று புதுமை விரும்பிகள். புதுசா ஒரு விஷயம் ட்ரை பண்ணி பாக்கணும்னு காசை வாரி இறைப்போம். அப்டி ஆரம்பிச்சது வீட்டின் முன்புறம் ஏற்படுத்தப்பட்ட ரியல் அக்குவாரியம். பல ஆயிரங்கள் செலவளித்ததாக தாத்தா சொல்லி இருந்தாலும் அப்பாவுக்கு அது லட்சங்கலாயிற்று என்று டவுட் இருக்கவே செய்தது. நீர்வீழ்ச்சி, ஆக்சிஜன் சப்ளையர்ஸ், மலைகள், ஸ்டோன்ஸ் மற்றும் கடல் தாவரங்கள் என சைட் பிட்டிங்க்ஸ் வாங்கும் பொறுப்பு தாத்தாவிடமும், மீன்கள் சஜ்ஜஸ்ட் செய்யும் பொறுப்பு எனக்கும் தம்பி மாருக்கும் விடப்பட்டிருந்தது. ராப் பகலாக கூகிள் மற்றும் எக்ஸ்பெர்ட்ஸ் வாசல் படிகளில் கிடந்திருந்தோம். வாயில் பெயர் நுழையாத மீன்கள் எல்லாம் வாங்கப் பட்டன. சில மீன்கள் டேன்க் சைஸுக்கு ஏற்ப தமது அளவை மாற்றிக் கொள்ளுமாம் என்றார்கள். வாங்கிப் போட்டோம். சிறிய டேன்க்கில் இருந்து பெரிய டேன்க் போகும் போது பெரிசாவது ஓகே, ஆனா பெரிசிலிருந்து சிறிசுக்கு வரும்போது எப்படி சிறிதாக்கிக் கொள்ளும் என்று எனக்கு டவுட் தோன்றினாலும் அது செத்துப் போய்விடுமோ என்ற பயத்தில் எக்ஸ்பெரிமன்ட் செய்து பார்க்கவில்லை. இந்தப் பயத்தையே இவர்கள் வியாபார யுக்தியாக யூஸ் பண்ணிக்கொண்டிருக்கக் கூடும் என்று தம்பி சொன்னான்.
ஒரு 50 விதமான இனங்கள் வாங்கிய பின்னரே தாகம் தீர்ந்தது. இத்தனைக்கும் மீனைக் கையால் பிடிப்பதென்றாலே சுச்சா போகும் எனக்கு. ஒரு 'டேன்க் கிளீனர்' இன மீனைப் பிடிக்கப் போய் அது தனது மறைத்து வைத்திருந்த முள்ளால் இடித்து விட தொற்றிக் கொண்டது "மீனோ போஃபியா" அல்லது "பிஃஷ்ஷோ போஃபியா". அன்றிரவு கனவில் நான் சாப்பிடும் சாப்பாட்டில் கூட டேன்க் கிளீனர் உயிரோடு துடித்துக் கொண்டிருந்ததை பார்த்த கட்டிலை நனைக்காத குறையாய் சிலிர்த்தெழுந்து சில நாட்கள் மீன் சாப்பிடுவதை வேறு தவிர்த்து வந்தேன். இந்த முள் "சர்வைவல் ஒப்ஃ தி பிஃட்டஸ்ட்" போட்டியில் வெல்லுவதற்காக அது கொண்டிருந்த ஒரு ஆயுதம்.
தலையில் தொப்பி அணிந்த மீன் என் பேவரைட்ஸ் இல் ஒன்று. அதன் தொப்பியை தொட்டுப் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் ஒன்றாயிருந்தது. வழுவழுப்பாக ஜெலி போன்று வழுக்கிக் கொண்டு செல்லும். ரொம்ப சாதுவான மீன். என் போன்றது.
தம்பியின் பேவரைட், அரோவானா. லக்கி பிஃஷ் என்றும் அழைப்பதாக சொன்னார்கள். அது வைத்திருந்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம் என்றார்கள். அது வாங்கியதில்தான் முக்கால்வாசிப் பணம் செலவழிந்தது.
எதோ ஒரு ஆசையில் வாங்கிவிட்டாலும் அதை மெயின்டைன் பண்ணுவது பெரிய தலைவலியாயிற்று. அனைத்தையும் வெளியில் எடுத்து ஒரு டெம்பரரி டேன்க் இற்குள் மாற்றி அக்குவாரியம்மை கழுவி மீண்டும் அவற்றை உள்ளுக்குள் விடுவதற்குள் அக்கு வேறு ஆணி வேறு ஆகிவிடும். பின்னர் "அக்குவாரியம் கழுவப் போய் அக்கு கழன்ற கதை" எழுதலாம். அக்குவாரியத்துக்குள் இறங்கி மீன்கள் பிடிப்பது என்பது சீன வித்தை. சின்ன வயசில் ஆற்றங்கரைகளில் நண்பர்களுடன் பிடித்திருக்கிறேன். மூன்று விதமாக. தூண்டில், வலை மற்றும் வடிப்பது. முதல் இரண்டும் மீன்கள் செத்தாலும் பரவாயில்லை என்று இறங்குவது. மூன்றாவது உயிரோடுதான் வேண்டும் என்று முடிவெடுத்து கங்கணம் கட்டிக் கொள்வது. இந்த முறைதான் பெரும்பாலும் எனது டேன்க்கிலும் யூஸ் பண்ணினோம். முதல் ஒரு சில முறைகள் நானே ட்ரை பண்ணினேன். எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறது என்பதே இந்த தகைமைக்குக் காரணம். தம்பி நீர் வாடிந்தோடச் செய்யும் குழாயில் நின்று அதைத் திறந்துவிடுவான், நான் கையில் துணியை பிடித்துக் கொண்டு உள் இறங்குவேன். இப்படி செய்யும் ஒரு நாளில் துணியிலிருந்து வெளியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது ஒரு மீன். இங்கு தொடங்குகிறது மீன்களின் சர்வைவல் எனும் போராட்டம்.
பல பிரச்சனைகளுக்கும் முகம் கொடுத்து வெல்வதே உலகில் நிலைக்கும் என்பதை சற்று விரிவாகச் சொல்வது சர்வைவல் ஒப்ஃ தி பிஃட்டஸ்ட் தியரி. இந்த மீன் கதையிலும் அதே. தன்னை பிடிக்க வருபவர்கள் தொடக்கம் தன் சக மீன்கள் வரை அதன் போராட்டம். இது மீன்கதை நடந்ததெல்லாம் மூன்று வருடங்களுக்கு முதல். அதன் பின் அவற்றை கண்காணிக்கும் பொறுப்பிலிருந்து என்னை விலக்கி மேற்படிப்பு படிக்க வெளியூர் அனுப்பிவிட்டார்கள். நானும் ஏறத்தாள அவற்றை மறந்தே போனேன். இரவு விடுப்பில் ஊருக்குத் திரும்பிய போது அவற்றின் ஞாபகம் வந்தது. சென்று பார்த்தேன், அலங்கார விளக்குகள் சகிதம் டேன்க் ஜொலித்துக் கொண்டிருந்தாலும் உள்ளிருந்தது என்னவோ நான்கு ரக மீன்கள்தான். டேன்க் கிளீனர், காட் பிஃஷ், ஏஞ்சல்ஸ் மற்றும் நீண்ட வால் கொண்ட கோல்ட் பிஃஷ். எனது டேன்க் எனும் சூழலில் வாழத் தகுதியானவை என்ற பட்டத்தை கொண்டு கம்பீரமாக நின்றன.
காலையில் பாட்டி மீன்களின் மரணம் பற்றி ஒரு டேட்டாபேஸ் கொண்டு வந்து காட்டினாள். இந்த மாதிரி மேட்டர்களில் கில்லாடி அவள். ஊரில் நடந்த ஒரு முக்கோணக் காதல் கதை சொன்னாள். இங்கும் சர்வைவல் ஒப்ஃ தி பிஃட்டஸ்ட் தியரி அப்ளை ஆகி இருந்ததை கெஸ் பண்ண முடிந்தது. எனக்கு "தி குட் கய்" மூவி ஞாபகம் வந்தது. தன் காதலி தன் தன் ஜூனியரை காதலிக்கும் ஒரு ட்ராக் இதில் சைடாக சென்று கொண்டிருக்கும். 'குட்டி'யின் மேட்கைத்தேய வெர்ஷன் மாதிரி.
தாத்தாவின் லாஜிக்கல் ஆர்கியூமென்ட்ஸ் சற்று வித்தியாசமானவை. அவர் சொன்னது "டு ஒவர்கம் தி சர்வைவல் ஒப்ஃ தி பிஃட்டஸ்ட் தியரி, தி ஒன்லி திங் யூ நீட் இஸ் செல்ப்ஃ கொன்பிஃடன்ஸ்"
நியாயம் என்றே தோனிற்று.
Tuesday 10 August 2010
மேற்கோள்கள் - 1
பாஃரஸ்ட்: "நான் யாராக இருப்பேன் என்பதையா?"
ஜென்னி: "ஆமா"
பாஃரஸ்ட்: (குழம்பிய முகத்துடன்) "நான் நானாக இருக்கப் போவதில்லையா?"
இது நிஜமான கேள்விகள். நாம் எல்லோரும் இப்படித்தான். எமக்கென்ற ஒரு காரக்டரை உருவாக்குவதை விடுத்து இன்னொரு நபர் போன்று ஒரு மாயை ஏற்படுத்திக் கொண்டு வாழ விரும்புகிறோம். பொய்ப் பகட்டு.இது கண நேர சந்தோஷம் தந்தாலும், நிஜமான திருப்தி இருக்கப் போவதில்லை.ஒருவரை பின்பற்றுவது என்பதை தப்பாக புரிந்து கொண்டதன் விளைவே அது. நீ இன்னொருவருடை காப்பியாக இருப்பதைக் காட்டிலும், உன்னைப் பார்த்து நீ இவருடைய வழி வந்தாலும் தனக்கென்று ஒரு சுயம்கொண்டிருந்தாய் என்று மற்றவர்கள் சொல்லும்படியாக இருப்பதே உண்மையான மகிழ்ச்சி. இதை உறைக்கும் படியாய் சொல்லிய இந்த வசனங்கள் இடம் பெற்றது "பாஃரஸ்ட் கம்ப்" மூவியில் :)
Monday 2 August 2010
தூக்கம், ஜாக்கிங், தாத்தா மற்றும் அவள்
"நீ எத்தனை மணிக்குப் படுக்கறியோ அது மேட்டர் இல்லை, அஞ்சு மணிக்கெல்லாம் எழும்பறதுதான் மேட்டர்" என்பது தாத்தாவின் குவாட்டர் அடிக்காமல் சொன்ன தத்துவம். இத்தனை அலப்பறைக்கும் காரணம், அந்த பாழாப்போன "ஜாக்கிங்". தொந்தி குறைப்பதுக்கு டாக்டரிடம் அட்வைஸ் கேட்கப் போய் தலையில்வாரி இறைத்துக் கொண்ட மண் அது. ஆக்சுவலி இது என்னமோ தாத்தாக்குத்தான். நானே இதை தூக்கி என் பனியனுக்குள் போட்டுக்கொண்டதுக்கு காரணம் அவள். எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் ஒடிந்து போய்க்கொண்டிருந்த எங்கள் கிளாஸ் இற்கு ரொம்ப நாளைக்கப்புறம் வந்த ரஜினி படம் மாதிரி வந்து இறங்கினாள் அந்த தேவதை. அவளை இம்ப்ரஸ் பண்ண எல்லாரும் ட்ரை பண்ண, சும்மா ஒரு மூலையில் உக்கார்ந்து கொண்டிருந்த என்னையும் நடுத்த தெருவுக்கு இழுத்து வந்து வம்பிழுத்தது என் ஈகோ. ஒரு நண்பி மூலமாய் அந்த கேர்ள் தனக்கு வரவேண்டிய பாய்பிரண்ட் பத்தி என்ன ஐடியா வைத்திருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டேன். அதில் முதலாவது கண்டிஷன், நோ தொந்தி.
இனி டாக்டர் அட்வைஸ் சீனுக்கு வருவோம்.டாக்டர் சொன்னபடியே தினம் தினம் ஜாக்கிங் போக முடிவெடுத்த என் தாத்தா வெளியே வரும் போறது, ஓர் உணர்ச்சி வேகத்தில் நானும் வரவான்னு கேட்டுத் தொலைத்தேன். தாத்தா பார்த்த பார்வை "ஏன்" என்ற கேள்விக் குறியாய் மாறி எனைத் தட்டியது. "இல்ல சும்மா, பாடிய மெயின்டெய்ன் பன்னலாமேன்னுதான்" என்றேன்.
"அப்போ கண்டிப்பா எல்லா நாளும் வந்துடனும்".
"ஓகே, எத்தனை மணிக்கு?"
"அஞ்சு"
"ஓகே தாத்தா, டன்"
"டன்"
அப்படித்தான் ஆரம்பித்தது இந்தக் கொலை வெறி பிடித்த சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் படலம்.கொடுமையோ கொடுமை என்று ஒவ்வொரு நாளும் தொந்தி குறைக்க காலை அஞ்சு மணிக்கெல்லாம் பீச் சென்று நான் ஓடிக் கொண்டிருக்க, தன் காதலனுடன் ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணிக்கொண்டு மேற்படிப்புக்காக வெளிநாடும் சென்று விட்டாள் அவள்.
அவள் டைரியில் என் பேரோ அல்லது அடையாளமாக என் சோடாபுட்டிக் கண்ணாடியோ குறிப்பிடப் பட்டிருக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில், அவளுக்கு நான் யார் என்பதே தெரிந்திருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், நான் அவளுக்காக ஜாக்கிங் போன அந்தக் காலப் பகுதியில் என் டைரியில் ஒவ்வொரு நாளும் அவளுக்காக டெடிகேட் செய்தே ஆரம்பித்தேன். அது அழகிய காலப் பகுதி.
அது காதலில்லை. அவள் சென்றதுக்காக நான் வருத்தப் படவுமில்லை. இருந்தாலும் அவள் இப்போதிருக்கும் அட்ரஸ் தெரிந்தால்,"கொஞ்ச காலத்திற்கு என் உடம்பை மெயின்டைன் பண்ண ஹெல்ப் பண்ணியதுக்கு ரொம்பத் தேங்க்ஸ்" என்று ஒரு மொட்டைக்கடதாசி போடலாம் என்றிருக்கிறேன் :)
Wednesday 14 April 2010
எதோ ஒன்று என்னைத் தாக்க - பையா
யாரோ போல உன்னைப் பார்க்க,
சுற்றி எங்கும் நாடகம் நடக்க,
பெண்ணே நானும் எப்படி நடிக்க...
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்,
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்,
பெண்ணே உந்தன் ஞாபகத்தை, நெஞ்சில் சேர்த்து வைத்தேனே,
உன்னைப் பிரிந்து போகையிலே, நெஞ்சை இங்கு தொலைத்தேனே...
என்னை உன்னிடம் விட்டுச்செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில்,
எங்கே போவது யாரைக் கேட்பது எல்லாப் பாதையும் உன்னிடத்தில்,
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் என் இரவையும் பகலையும் மாற்றிப்போனாய்,
ஏன் இந்தப் பிரிவை தந்தாய் என் இதயத்தில் தனிமையை ஊற்றிப் போனாய்,
உள்ளே உன் குரல் கேட்குதடி என்னை என்னுயிர் தாக்குதடி,
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன் மறந்தேன் நான் ஓ ஓ ஓ ஓ...
பெண்ணே உந்தன் ஞாபகத்தை, நெஞ்சில் சேர்த்து வைத்தேனே,
உன்னைப் பிரிந்து போகையிலே, நெஞ்சை இங்கு தொலைத்தேனே...
எதோ ஒன்று என்னைத் தாக்க,
யாரோ போல உன்னைப் பார்க்க,
சுற்றி எங்கும் நாடகம் நடக்க,
பெண்ணே நானும் எப்படி நடிக்க...
காலம் முழுதும் வாழும் கனவை கண்ணில் வைத்து தூங்கினேன்,
காலை விடிந்து போகும் நிலவை கையில் பிடிக்க ஏங்கினேன்,
பெண்ணே உந்தன் ஞாபகத்தை, நெஞ்சில் சேர்த்து வைத்தேனே,
உன்னைப் பிரிந்து போகையிலே, நெஞ்சை இங்கு தொலைத்தேனே.
Tuesday 6 April 2010
அரசியல்வாதியும் தாயம்மாவும்
ஏர்போர்ட்டிலிருந்து ஊருக்கான வழியில்
வேப்பமர நிழலில் அல்லலுறும் பகலில்
டிஷ்யூ பேப்பர் விற்கிறாள் தாயம்மா...
ராத்திரி வீட்டில் எரிய விளக்கில்லை
வந்தால் போக டாய்லட்டும் இல்லை.
அவள் கண்ணீர்தான் போக்கமுடியாது போயிற்று
மற்றோர் புறம் துடைக்க அவள் விக்கும்
டிஷ்யூ பேப்பரால் எனினும்
தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் கணங்களில்
அவளுக்கும் உதவிடும் அது...
இதையெல்லாம் தீர்ப்பேன் என்று
அன்று வந்த அரசியல்வாதி
இன்றும் வந்தார் வாங்க...
வாக்கு இல்லை, டிஷ்யூ பேப்பர்.
ஏர்போர்ட்டிலிருந்து வீடு செல்லும் வழியில்
வாங்கிக் கொள்கிறார் கொஞ்சம்.
இவருக்கு அவளை நினைவில்லை எனினும்
வறுமையின் இருட்டு கண்ணை மறைத்து
இவளுக்கும் ஞாபகசக்தி இழந்ததால் என்னவோ
அவர் தந்த காசை எண்ணத் தொடங்கினாள்,
மறுபடியும் கேட்டதை கொடுத்துவிட்டு...
Friday 26 March 2010
அழகிய நோய்
மறு பால் தொற்றும்
இது ஒரு நோய்?
முதல் ஈர்ப்பு எப்படி
என்றறியா, தெரியா கணத்தில்
நம்மையறியாது தொற்றும்
நீ செய்த ஒரு நன்மை,
அல்லது உன் பிடிவாதம்
என ஆயிரம் காரணம்
காரணத்தில் நல்லவை
அல்லது கெட்டவை
என்று பிரிவில்லை இதற்கு.
தேவை வெறும் காரணமே.
நீ செய்யும் ஒவ்வொன்றையும்
நின்று ரசிப்பது
இதனொரு பக்க விளைவு
நீ கனவில் வருவதும்
அன்றாடக் கடமைகளில்
குறைபாடு நிகழ்வதும்
அறிகுறி என்கின்றனர்.
அன்பு பரப்பும் இது
தீது விலக்கும்
கலை வளர்க்கும்
அழகுற வைக்கும்...
தீர்வொன்று தேவையே இல்லாமலிருக்கும்
இந்தக் "காதல்" ஒரு
அழகிய நோய்தான்.
Thursday 25 March 2010
தலைக்கு மேல் வந்த வினை
அப்பிடி ஒரு கவிதையே உருவான இரவு வேளையில் ஏதோ ஒன்று குறைவது போல் லைட்டா ஒரு பீலிங் வரவே கண் முழித்துக் கொண்டது. "இன்னா பீலிங்கு, ஆல் பிகாஸ் ஒப் மீ" னு என்னைப் பார்த்துப் பல் இளித்தது தலைக்கு மேல் இருந்து 'சீலிங் பேன்'. என்ன அதிரி புதிரி பண்ணிச்சோ தெரியல்ல டொட்டோடோய்ங்னு நின்னு விட்டிருந்தது அது. "ஆகா சேம் பிளாட்" என்ற படியே உடம்பு முழுவதும் மொய்த்திருந்தன நுளம்பு/கொசு எனப்படும் மாஸ்கிட்டோஸ். காய்ல், ஆய்ல், நுளம்புவலை மற்றும் இன்ன பிற பாதுகாப்பான்கள் வந்துவிட்டிருந்த போதிலும் இந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் பிடிக்காத காரணங்களால் நான் அவற்றைப் பயன்படுத்துவதிலிருந்து தவிர்த்து வந்தேன். இந்தப் பழக்கமே என் தூக்கத்திற்கு வச்சது ஒரு பெரிய ஆப்பு.
"சாரி சார், இனிமே எங்க கைல ஒன்னும் இல்ல, எதையுமே ஒரு மூணு மணிநேரம் கழிச்சுத்தான் சொல்லமுடியும்" என்று தலைக்குள் இருந்து சத்தம் போட்டார் மிஸ்டர் பிரெய்ன். இனியும் யோசிச்சு பிரயோஜனம் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், சரி படுத்துத்தான் பார்ப்போமே என்று பெட்ஷீட்டை தலைக்கு மேல் போர்த்திய போதுதான் ஞாபகம் வந்தது நம்ம ராகவன் முகம்.
"நண்பா! நான் இருக்கேன்டா, நீ ஒண்ணப் பத்தியும் கவலைப் படாதே, எல்லாத்துக்கும் ஒரு சால்யூஷன் இருக்குப்பா" என்ற படியே காற்றில் கரைந்து போனது அவன் முகம். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மாணவன் ஒரு பிரபல யுனிவர்சிட்டி ஒன்றில். இப்போதுதான் இரண்டாமாண்டு. பக்கத்து வீட்டுக்காரன். பால்ய நண்பன். புத்தகப் புழு. த்ரீ இடியட்சில் வரும் சைலன்சர் கணக்காய் ஒரு கேரக்டர். ஆனா கொஞ்சம் நல்லவன் மற்றும் அப்பாவி. ஹெல்ப் மைன்டட் பெர்ஸன்.
அடுத்த நிமிடம் அவன் வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருந்தேன். அவன் தனியாத்தான் இருக்கான் என்று ஆல்ரெடி தெரியும். பெற்றோர் வெளியூர் சென்றிருந்தனர். "ராகவா... ராகவா..." டொக்.. டொக்..டொக்.. கண்களைக் கசக்கியபடியே கதவைத் திறந்தான் அவன். "என்ன மச்சான் இந்த நேரத்துல?". விவரித்தேன். நாடியில் கை வைத்து என் முகத்திலிருந்து பார்வையை எடுக்காமல் அவன் என் பிரச்சினையைக் கேட்ட விதம் அவன் எதிர்காலத்தில் ஒரு ப்ராபஸர் ஆக வருவான் போல என்று எண்ணச் செய்தது. "அடச் சே, சப்ப மேட்டர் மாம்ஸ். நீ இரி. ஜஸ்ட் டூ மினிட்ஸ், டூல்ஸ் எடுத்துட்டு வாரேன். தெர்ட்டி மினிட்ஸ்ல செஞ்சிடலாம்". "ஓகேடா, அப்போ நான் வீட்ல இருக்கேன், நீ வா". "ஷ்யூர் டா" நேரம் மணி 3.
நான் போய் சரியாக ஐந்து நிமிடத்தில் வீட்டுக்கு வந்தான் அவன். ஒரு கையில் தலையணை சைஸ் புத்தகம் ஒன்று, மற்றையதில் ஒரு டூல் பாக்ஸ். ரூமுக்குள் போனோம். சுவிட்ச் போட்டுப் பார்த்தான். கதிரை போட்டு ஏறி 'டெஸ்டர்' வைச்சுப் பார்த்தான். "ஓகே மச்சான் லெட்ஸ் கெட் திஸ் டன். ட்ரான்ஸ்போர்மர்தான் அப்சட். நான் இப்போதைக்கு அட்ஜஸ்ட் பண்ணி செய்யறேன். நாளைக்கு நீ புதுசு வாங்கி வா நான் பிக்ஸ் பண்ணித் தாரேன்". "ஓகேடா, இப்போ நான் நிம்மதியா தூங்கணும். அதுக்கு ஏற்பாடு பண்ணு முதல்ல". "டோன்ட் வொர்ரி, நான் இப்படியான மேட்டர்ஸ் பத்தித்தான் படிக்கேன். செஞ்சுடலாம்". "ஓகே"
பேனை கழட்டினான். துடைச்சான். ஒவ்வொரு பார்ட்ஸாய் வெளியில் எடுத்தான். அதன் பெயர்களை சொல்லிக் காட்டினான். புக்கை பார்த்து ஒவ்வொன்றும் எதுக்காக வைக்கப் பட்டிருக்கின்றன, என்ன வேலையைச் செய்கின்றன என்று லெக்சர் எடுத்தான். மறுபடியும் புக்கை ரிஃபர் பண்ணி ட்ரான்ஸ்போர்மர் என்று அவன் சொன்னதை என்னமோ பண்ணினான். மறுபடியும் பழையபடி பிக்ஸ் பண்ணினான். ஒரு வெற்றிகரமான புன்னகை அவன் முகத்தில் இருந்தது. நேரத்தைப் பார்த்தேன். ஐந்து மணிக்கு ஐந்து நிமிடம் இருந்தது. "இதுதானா உன் தர்ட்டி மினிட்ஸ்?" மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
"ஓகே மாம்ஸ், இப்போ ட்ரையல் பார்க்கலாம்" வெற்றிக் களிப்பில் சொன்னான் அவன். என்னமோ இவன்தான் பேனையே கண்டுபிடிச்சி இப்போ ட்ரையல் பார்க்கப் போற மாதிரி.
வேற வழின்னு நினைத்துக் கொண்டு சுவிட்சை போட்டேன்.
வழமையாக அன்டி-கிளாக்வைஸ் (anti-clockwise, இடமிருந்து வலம்) ஆக சுற்றும் பேன், கிளாக்-வைஸாக (clockwise, வலமிருந்து இடம்) சுற்ற ஆரம்பித்தது.
"இன்னாடா நடக்குது இங்க?" என்று நினைத்துக் கொண்டே அவனைப் பார்த்தேன்.
அவன் அதே கேள்வியுடன் பேனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பேன் எங்கள் ரெண்டு பேரையும் பார்த்து "விடுகதையா இந்த வாழ்க்கை..." என்று பாடுவது போலவே தோன்றிட்டு...
Wednesday 24 March 2010
இது மற்றுமொரு முத்தமில்லை
அது வெறும் எச்சில் மட்டுமல்ல, உன் நாணம், யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற கொஞ்சப் பயம், உன் அன்பு மற்றும் உன் அழகு எனப் பல விஷயங்கள் உணர்ந்தேன்.
நீ போன இடங்களுக்கு எல்லாம் நானும் அலைந்து வந்திடவில்லை, இருந்தாலும் உன்னைப் பல இடங்களில் கண்டதாகவே உணர்கிறேன் இந்த முத்தத்தின் பின். வயாகராவை விட மோசமானது ஒரு பெண்ணின் காதல் முத்தம். அதை உன்னிடம் பெற்ற பின் மற்றவர்களின் முத்தம் ஒரு பொருட்டற்றுப் போகிறது.
உன் உதடு மட்டும் பதித்தாய், எனக்குப் பூர்வ ஜென்மம் வரை 'டைம் மெஷின்' இல் சென்று வந்த உணர்வு. அதுவும் அந்தச் சில செக்கன்களுக்குள்ளாகவே. புயல் மழையில் பல நூறு வருஷம் நின்றதைப் போன்று நனைந்து விட்டிருந்தேன் உள்ளுக்குள்ளாக. நாடி நரம்பிலிருந்த ரத்தம் எல்லாம் உறிஞ்சி எடுத்து விட்ட ஒரு ரத்தக் காட்டேரி நீ. பதிலுக்கு காதல் எனும் அற்புத மருந்து புகுத்திவிட்டாய்.
அதெப்படி, டாக்டர் படிப்பு படிக்காமலே இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தாய்? அதுவும் வெறும் இதழ்களை பதித்து. இப்போதெல்லாம் இரண்டு நாடித்துடிப்பை உணர்கிறேன் நான். யாராவது செக் பண்ணிவிட்டு "எத்தனை மாசம்" மற்றும் "எப்போ பொம்பளையா மாறினே" என்று சந்தேகத்தோடு கேட்காமல் இருந்தால் சரி. சும்மா சொல்லக் கூடாது, மன்மதக் கலை பெண்களின் உதடுகளில்தான் ஆரம்பிக்கிறது. எனக்கு உன் இதழில்.
நானும் பல பேரிடத்தில் முத்தம் பெற்றிருக்கிறேன். ஆனால் எல்லாமே உன் போல் இனிக்கவில்லை. அது உன் உதடு என்பதாலா அல்லது தந்தது என் உதட்டில் என்பதாலா? அப்படி என்னதான் இருக்கிறதோ அதனுள்...
இப்போதெல்லாம் அம்மாக்கு சந்தேகம். நான் தண்ணி அடிக்கிறேனோ என்று. உன் முத்தம் தந்த போதை இன்னும் தெளியவில்லை. இதை குணப்படுத்த ஒரு வழி சொல்லேன். என்ன செய்வது அதிலிருந்து தெளியவும் மனமில்லை.
எது எப்படி இருந்தாலும்... நான் எழுதித் தருகிறேன்...
"இது மற்றுமொரு முத்தமில்லை"
Sunday 21 March 2010
நீயும் நானும்
கனக்கும் மனதில் உயிரில்லை.
நானும் மற்றுமொரு ஜடம்
முழுக்க மரத்துப் போய்...
குட்மார்னிங் சொல்லிக் குட்டும்
உன் குறும்பான கைகளின்
வளையல் சத்தம் இல்லை.
அறையெங்கும் ஒரு நிசப்தம்...
பெட் காப்பி தரும் கப்
எறும்புகளின் இருப்பிடமாய் இருக்கிறது.
கட்டில் ஓரத்தில் இருந்து
என்னை வெறித்துப் பார்க்கிறது.
வழக்கமாய் கட்டிலில் படரும்
ஜன்னல் வழி சூரிய வெளிச்சம்
உள்ளே வர முடியவில்லை,
ஜன்னல் திறக்க நாதியில்லை.
களை இழந்த வீட்டில்
கூனிக் குறுகி ஒரு மூலையில்
செய்வதறியாது விக்கித்து நிக்கிறேன்
ஆறுதல் சொல்ல நீ இல்லை.
நேற்றுக் காலை இதெல்லாம் செய்ய
நீ இருந்தாய் என் துணையாக.
பின்னேரமே விபத்தில் இறந்த நீ
என்னையும் கொன்று விட்டாய்.
வீட்டார் எதிர்க்க நண்பர் துணை நிக்க
வாழ்க்கை ஆரம்பித்து முப்பது வருஷம்.
குழந்தையில்லை என்ற குறை போக்க
ஒருவர் மற்றவர் குழந்தையானோம்.
கவலை என்பதை மறக்கவைத்தாய்
அகராதியில் அழித்தெறிந்தாய்
உன்னுடன் வாழப்பழகிய எனக்கு
நீயில்லாமல் இருக்கத் தெரியலியே.
எல்லாமாகி என்னுடன் இருந்தாய்
இப்படி சொல்லாமல் கொள்ளாமல்
போவாய் என்றேன் சொல்ல மறந்தாய்?
நான் செத்திடுவேன் என்று பயமா?
இப்போதும் என்ன?
செத்துத்தான் விட்டேன்.
நிற்கிறேன் அழத் தெரியாமல்
உன் போட்டோவை வெறித்தபடி...
லக்கிலூக்கும் ஏழு பேரும்
ஒரு பக்கம் நீதி நேர்மை அப்பிடின்னுட்டு மனச்சாட்சி டாச்சர் பண்ண, இன்னொரு பக்கம் "லூசாடா உனக்கு, எதையும் ரிஸர்ச் பண்ணாம டோன்ட் கம் டூ எ டிசிஷன்" அப்பிடின்னு பகுத்தறிவு இன் கார்ப்பரேஷன் வித் மூளை சகிதம் கன்னத்தில் அறைய இடையில் உடம்பு சூடாகிக் போய் "போங்கடா நீங்களும் உங்க சண்டையும்" என்று ஜுரம்/காய்ச்சல் என்ற பெயரில் படுத்துக் கொண்டது உடம்பு. பில்லி சூனியம் என்று பங்கஜம் மாமி பதற, ஓவர் எமோஷனலாகி அம்மா அழ கடைசியில் அப்பாவின் உதவியால் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி ஒரு வாரம் 'ஹாஸ்பிட்டல் பியூட்டி குயீன்' நர்ஸ் நர்மதாவின் அழகான கவனிப்பின் பின் வீடு திரும்பினேன்.
மீன்வைல், "மச்சான் உன்னைப் போலவே இருக்கற அந்த மத்த ஏழு பேரும் எப்பிடி, எங்க இருக்கானுங்கன்னு ஒருவாட்டி பாத்துடனும்டா" என்று அடிக்கடி பிரெய்ன் திரி பற்றவைத்துக் கொண்டே இருந்தான். அதற்கு ரைட் ஆப்போஸிட்டா "அவங்க எங்க இருந்தா நமக்கென்ன. எப்படி இருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு பிரே பண்ணு போதும்" என்று காதை குடைந்தது மனச்சாட்சி. "அதுவும் சரிதான்" என்று ஒருவருக்குத் தெரியாமல் மற்றவருக்கு ஆமாம் சாமி போட்டுக் கொண்டேன்.
பங்கஜம் மாமியின் அலப்பறைகளும் அம்மாவின் கவலைகளும் நின்று போன சமயத்தில் அறிமுகமானார் லக்கிலூக். காமிக்ஸ், கார்ட்டூன் என்று ஏதோ ஒரு வழியில் வீட்டுக்குள் புகுந்து விடும் அவரது சாமர்த்தியம் கண்டு வியந்தேன். எதிலும் இருக்காத பற்று, வாயில் ஒரு புல், நண்பர்கள் இல்லாத வாழ்க்கை என லைட்டா என்னையே பிரதிபலித்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசிக்கொள்வோம். அப்போது அவர் சொன்ன விஷயம்தான் சில கேள்விகளுக்கு விடை தந்தது.
அந்த ஏழு பேர் மேட்டரில், உருவ ஒற்றுமையில் ஒரு மூணு பேரும், தன்மை ஒற்றுமையில் மீதமும் இருக்கலாம் என்றார். பாஃர் எக்ஸாம்பிள் நீயும் நானும் என்றார். சரிதான் அவர் ஒல்லிப்பிச்சான், நான் அண்டா குண்டா. இருப்பினும் வாழ்க்கை முறையில் ஒற்றுமை இருந்தது. இருவரும் தனிமை விரும்பிகளாக இருந்தோம். நண்பர்கள் ஏமாற்றி இருந்தார்கள். யோசிச்சுப் பார்த்த போது பங்கஜம் மாமிக்கும் அம்மாக்கும் கூட நிறைய ஒற்றுமைகள் இருந்தன. அப்பாக்கும் பேஸ்புக்கில் இருந்த பிரேசில் காரருக்கும் ஒரே விதமான பேச்சுத்தன்மை இருந்தது. இதை லக்கிலூக்கிடம் சொல்லி சிரித்துக் கொண்டேன். அவர் டால்டன் சகோதரர்களை பிடிப்பதற்காக 48ம் பக்கத்தில் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார். நான் சொன்னது காதில் விழுந்ததோ தெரியவில்லை.
மனச்சாட்சி தலையில் கைவைத்து நொந்து கொண்டது, இதோ இப்போ நீங்க "இதெல்லாம் ஒரு பதிவா" என்று பீஃல் பண்ற மாதிரி. இப்ப பீஃல் பண்ணி என்ன பிரயோசனம், எல்லாம் முன்னாடியே யோசிச்சிருக்கணும் என்று நக்கலடித்தது மூளை. லக்கிலூக் கடைசிப் பக்கத்தில் "தனிமையே என் துணைவன், தனிமையே என் வாழ்க்கை" என்று பாடி விசில் அடித்தபடி குதிரையில் சென்று கொண்டிருந்தார்...
Saturday 20 March 2010
கவிதையும் காதலும்
கம்ப சூத்திரமாய்ப் படவில்லை
உன்னைப் பார்த்த பின்
என்றெல்லாம் பொய் சொல்லத்தெரியவில்லை.
சுமாரா எழுதிக் கொண்டிருந்ததும்
சப்பென்று போய் விட்டது
என்று பக்கத்து வீட்டுப் பாட்டி
வெற்றிலை போட்டபடி சொன்னார்.
அவருக்கும் கோபம் இப்போது.
அவரை அழகுராணி என்றெல்லாம்
எழுதிய என் கை இப்போது
உன்னை வர்ணிக்கத் தொடங்கியதில்.
பெண்களுக்கு தமக்குப் பிடித்தவன்
விஷயத்தில் பொறாமை வருவது
வாஸ்தவம்தான் எனினும்
இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.
இப்போது நான் கேட்பதெல்லாம்
எனக்கு ஒரு நல்ல முடிவு.
பிடிக்காவிட்டால் இப்போதே சொல்லிவிடு,
பாட்டி எனக்காக காத்திருக்கிறாள்.
Friday 19 March 2010
இன்னா மேன் முறைக்கிறே
என்று சொடக்குப் போட்டாய்.
செய்வதறியாது திகைக்கவில்லை நான்,
முறைப்பதன்றி வேறு வழியில்லை.
நீ போன வழி எங்கும்
என் மோட்டார்பைக் பின்தொடர
என்னை ரெண்டு சகா
காவல் காத்து வர
அது ஒரு பொற்காலம்
அழகிய நிலாக் காலம்.
தண்ணி போட்டு மப்பில்
நட்சத்திரம் எல்லாம் எண்ணியிருக்கிறேன்.
உன் வரலாறு தெரியாது
உன் எதிர்காலம் வளமாக்க
கனவு கண்டேன்
கோட்டை கட்டினேன்.
நேற்றிரவு வரை
இடிந்து விழவில்லை அது.
உன்னைப் பார்க்கும் வரை
அப்படி ஒரு நிலையில்.
அப்படி ஒரு படம்
பார்க்க நினைத்தது தப்புதான்.
மன்னித்து விடு
அல்லது அடித்தும் விடு.
என் தலை எழுத்து.
அதில் நீயா
நடித்துத் தொலைப்பது.
கோட்டை இடிந்தது.
சரி என்ன செய்வது
அது உன் குற்றமில்லை.
அதை பார்த்ததுதான்
என் குற்றம்.
ஆனால் உன்னைப் பார்ப்பதை
நிறுத்த முடியவில்லை என்னால்.
அதனால்தான் மறுபடியும்
வந்தேன் உன்னிடம்.
இன்னா மேன் முறைக்கிறே
என்று சொடக்குப் போடுகிறாய் நீ.
மேடம் நான் உங்க ரசிகன்,
எல்லாப் படமும் சூப்பர்,
ஆட்டோகிராப் ப்ளீஸ்.
கையெழுத்திட்ட நீ,
கூடவே உன் போட்டோ
சேர்த்துத் தருகிறாய்.
வாங்கியபடியே வெளியாகிறேன்.
'பேஸ்புக்' இல் தனித்துவமான முறையில் ஆடியோ ஷெயார் பண்ணுதல்
இது இப்படி இருக்க ஆடியோ பைஃல்ஸ்களுக்கு பேஸ்புக் ஷெயார் முக்கியத்துவம் தருவதில்லை.பொதுவாக ஆடியோ பைல் இருக்கும் இணையத்தளங்களின் முகவரியைத்தான் ஷெயார் பண்ண வேண்டி இருக்கிறது. நாம் யூடியூப் அல்லது பிற விடியோ பைஃல்கள் பேஸ்புக்கில் ப்ளே ஆவது போல் ஷெயார் பண்ணுவது எப்படி என்று பார்ப்போம்.
இதற்கு முதலாவதாய் நாம் எமது ஆடியோ பைஃல்லை இன்டர்நெட்டில் ஹோஸ்ட் செய்ய வேண்டும். நான் யூஸ் பண்ணியது 'பைல்டென்' எனும் ஹோஸ்ட். இதில் இலவச கணக்கு ஒன்றை ஆரம்பித்துக் கொள்ளவும். நீங்கள் அப்லோட் செய்ய நினைக்கும் ஆடியோ பைஃல்லை இலகுவான ஒரு சொல்லில் பெயரிட்டுக் கொள்ளவும். எக்ஸாம்ப்பிள்... "New.mp3". பின் 'பைல்டென்' இல் அப்லோட் டேப் இற்கு சென்று அப்லோட் செய்யவும். அப்லோட் முடிந்த பின் அது தரும் யூ.ஆர்.எல் ஐ காப்பி செய்து கொள்ளவும். (இது .mp3 என முடிவடையும். இவ்வாறு முடிவடையும் யூ.ஆர்.எல். தரும் வேறு பைஃல் ஹோஸ்ட்களிலும் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்). இனி இந்த யூ.ஆர்.எல் ஐ பேஸ்புக்கில் ஷெயார் செய்ய வேண்டியதுதான் பாக்கி.
ஷெயார் செய்யும் போது வரும் 'ஆர்டிஸ்ட் பெயர்' மற்றும் 'ஆல்பம் பெயர்' போன்றவற்றை எடிட் செய்து கொள்ளுங்கள்.
ஒரு சிறிய, அழகான பிளேயரில் உங்கள் ஆடியோ ப்ளே ஆவதை நீங்கள் கேட்டு ரசிக்கலாம் :)
Thursday 18 March 2010
இதுதான் 'காதல்' என்பது...
ஏழு வருஷமே நிலைக்குமாம்
ஒன்றின் மீதான பற்று
இது இப்படி இருக்க
நீயும் நானும் எப்படி
இத்தனை வருஷம் உறவானோம்?
ஆதாரங்களாய் கண் முன்னே
நம் பேரக் குழந்தைகள்
நம்மை உரித்து வைத்தவர்களாய்
ஆய்வு எப்படிப் பொய்யாகிற்று?
என்னவென்று அறியா ஒரு பாலம்
உனக்கும் எனக்கும் இடையில்
இதுதான் 'காதல்' என்பது...
எப்போதும் போல!
வானவில் வண்ணமிட்ட கணத்தில்
பேரரசசி வருவது போல்
படிகளில் இறங்கி வந்தாய்
இதயம் மில்லிசெக்கனில்
துடிக்க மறந்தது.
என் முகத்தினில் படர்ந்திருந்த
நீர்த்துளிகள் காய மறுத்தன.
நீ எதிர் வந்தாய்,
புயல் அடித்தது.
நீ சிரித்தாய்,
மின்னல் வெட்டியது.
நீ கடந்து சென்றாய்,
இடி இடித்தது.
நீ தூரத்தில் மறைந்தாய்,
புயல் மழை ஓய்ந்தது.
போன பின்
எப்போதும் போல
கவிதை எழுதத்
தொடங்கின கைகள்.
கிறுக்கிப்
பிழைத்துக் கசக்கி எறிந்த
கடைசிக் காகிதத்துடன் நிரம்பிக்கொண்டது
குப்பைக் கூடை.
Friday 12 March 2010
கே.எஃப்.சி தேடிய கதை / இங்கி பிங்கி பாங்கி கதை
காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கொண்டேன். இரவே மின்னிக்ஸும் வந்து தங்கியிருந்தான். அவனது நீண்ட நாளைய ஆசை "கீக் ரூல்ஸ்" கடையில் ஒரு 'டீ-சேர்ட்' வாங்கிவிடுவது. வாசகம் பொறித்த 'டீ-சேர்ட்' அணிவது நாகரிகம் ஆகிவிட்ட காலத்தில் அவனுக்கு அப்படி ஒரு ஆசை வந்தது ஒன்றும் தப்பில்லை எனினும் அப்பால நடக்கப் போற சம்பவங்கள் தெரியாத படியால் அன்றைய தினத்தை சிரித்த வண்ணமே ஆரம்பித்தேன். காலைக்கடன்கள் முடிந்து வெளியே வந்த போது மின்னிக்ஸும் எழுந்து விட்டிருந்தான். அவன் குளித்து எல்லாம் முடித்து வந்த போது நேரம் ஏழு இருக்கும்.
கடை திறந்திருக்கமாட்டாதபடியால் என்ன செய்வது என்று தெரியாமல் ட்விட்டரில் உலாவத் தொடங்கினோம். அப்புறம் இன்டர்நெட்டை வலம் வந்தோம் ஒருவாறு நேரம் 12 மணி ஆகிவிட்டிருந்தது. ஸாபித்தும் எம்முடன் வந்து இணைந்து கொண்டான். கடை இருப்பது இரண்டு ஊருக்கு அப்பால் உள்ள ஒரு இடத்தில் என்றாலும் அந்த ஊர் என்ன கலர் என்பது எங்களுக்கு 'கடல்லேயே' தெரியாது. அந்த ஊருக்கு என்ன நம்பர் பஸ்ஸில் போவது என்பதை நண்பனிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட நாம், அந்த ஊரில் கே.எஃப்.சி எங்கிருக்கிறது என்பதை கேக்க மறந்தது எவ்வளவு பெரிய மிஸ்டேக் என்பது பட்ட பின்பே தெரிந்தது. காரணம் கே.எஃப்.சி இற்குப் பக்கத்திலேயே அந்தக் கடை இருக்கிறது என்று மின்னிக்ஸ் சொல்லி இருந்தான்.
இதில் நாங்கள் நினைவில் வைக்க மறந்த சில விஷயங்கள்:
1. ஒரு இடத்திற்குப் போவது எப்படி என்று எப்படி சிங்களத்தில் கேட்பது.
2. கடையின் கான்டாக்ட் நம்பர்.
3. நேரம்
4. காலநிலை
மழை கொட்டோ கொட்டென்று கொட்டுவது போல, சரி நேர் எதிர் கோட்டில் காய்ந்து தள்ளியது வெய்யில். ஒருவாறு பஸ்ஸில் தொற்றிக் கொண்டோம். நகர்ந்த பாடில்லை. ஸ்கூல் வேறு விடும் நேரமாதலால் செம ட்ராஃபிக் ஜாம். ஒரு மணித்தியால ஆமை வேகப் பயணத்தின் பின் டெஸ்டிநேஷனை சென்றடைந்தோம். நான் மற்றுமொரு முறை வியர்வைக் குளியல் எடுத்து விட்டிருந்தேன்.
ஒரு மேம்பாலம். சுற்றி "நை நை" என்று கத்திக் கொண்டிருக்கும் சிக்னல் லைட்ஸ். ஒரு விதமான ஸ்ட்ரேன்ஜ் அட்மாஸ்பிஃயரை தோற்றுவித்திருந்தன. அது நான்கு தெருக்கள் வந்து முட்டும் ஒரு சந்தி. நான் 'இங்கி பிங்கி பாங்கி' போட்டு ஒரு தெருவை தெரிவு செய்தேன். "மச்சான், இந்த ரோட்ல முதல் ட்ரை பண்ணலாம் வாங்க" என்றபடி நடக்க ஆரம்பித்தேன். "முதல்ல யாரிடமாவது கேட்டுப் பார்க்கலாம்டா" என்றான் ஸாபித். "அது சரி, மொழி தெரிஞ்சா ஏன் கேக்காம, தெரியாததனால தானே இப்பிடி ட்ரை பண்றோம். பேசாம வாங்க" என்றபடி நடந்தேன். மின்னிக்ஸும் எனது கருத்தை ஏற்றுக் கொண்டான். ஸ்கூல் விட்டு அழகான கேள்ஸ் மற்றும் பாய்ஸ் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூல்ல கொடுக்கற அட்மிஷன் பாஃர்ம்ல முதலாவது கண்டிஷனே "உங்க பொண்ணு அழகானவளா இருக்கணும்னு தான் இருந்திருக்கும் போல" என்றான் மின்னிக்ஸ். சொல்லிக் கொண்டிருக்கும் போதே தேவதை மாதிரி ஒருத்தி எங்களைப் பார்த்து சிரித்தபடியே கடந்து சென்றாள். ஒரு இரண்டு கிலோ மீட்டர் நடந்துவிட்டிருந்தோம்.
"போடாங் நீயும் உன் இங்கி பிக்கியும்" என்று நொந்து கொண்ட ஸாபித் மறுபடியும் "யாரையாவது கேட்டுப் பார்க்கலாம்டா" என்றான். வேறு வழி இல்லாமல் சரி என்ற நான், யார் போவது என்று கேட்ட போது, எங்களுக்குள் மறுபடியும் இங்கி பிங்கி பாங்கி போட வேண்டிய நிலை வந்தது. போட்ட போது ஆப்பு வந்தது எனக்கு. என்ன செய்வது என்று நொந்த படி நடந்த போது எதிர்ப்பட்டார் ஒரு காலேஜ் வாட்ச்மேன். ஒருவாறு மனசுக்குள் பலமுறை ப்ராக்டிஸ் செய்து கொண்டு அவரிடம் போனேன். உற்றுப் பார்த்தார்,
"கே.எப்.சி?" என்றேன்.
"ஆ?"
"கே.எப்.சி, கே.எப்.சி..."
"ஆ?"
எனக்கு பற்றிக் கொண்டு வந்தது. நன்றாக ஏசி விடத் தோன்றியது. அதற்கும் அவர் மொழி தெரிய வேண்டுமே. தெரிந்திருந்தால் அதை ஏசுவதற்கா யூஸ் பண்ணியிருப்பேன். வழியைத் தெரிந்து கொண்டிருப்போமே. ஒன்றுமே சொல்லாமல் திரும்பி வந்தேன்.
மின்னிக்ஸும் ஸாபித்தும் முறைத்தார்கள். நாங்கள் பார்பிகியூ ரேஞ்சுக்கு நன்றாகவே கறுத்து விட்டிருந்தோம். அப்போதுதான் எனக்கு பெரோஸ் இன் ஞாபகம் வந்தது. மொபைலில் அழைத்தேன், மேட்டரை சொன்னேன். "எனக்கும் அந்த ஏரியா தெரியாது மச்சான்...", நாசமாப் போச்சு "... கொஞ்சம் வெயிட், பக்கத்துல கேட்டு சொல்றேன்". மீன்வைல் நாங்கள் எங்கள் மதிய உணவாக "7 UP" சாப்பிட்டு... ஸாரி, குடித்துக் கொண்டோம். மறுபடியும் அழைத்தேன். "நீ போற திசை சரிதான் மாம்ஸ். அப்டியே போய்க்கிட்டு இருந்தீன்னா ஒரு "புட் சிட்டி" சுப்பர் மார்க்கத் வரும். அதுக்குப் பக்கத்திலேயேதான் 'கே.எப்.சி' இருக்கு". "ஓகே டா, நான் பார்த்துக்கறேன்". மணி 2.30 ஐக் காட்டியது.
நடக்கத் தொடங்கினோம். அது சன நெரிசல் மிகுந்த நகரம். நாங்கள் நடந்த ரோட்டில்சன நெரிசலும், கட்டடங்களும் குறைந்து கொண்டே வருவதாக உள்ளுணர்வு எங்கள் மூணு பேருக்கும் கடுதாசி போட்டிருந்தார். அது டெலிவரி ஆக எடுத்த நேரத்தில் நாங்கள் 2 கிலோ மீட்டர் நடந்து விட்டிருந்தோம். உள்ளுணர்வின் எச்சரிக்கை கிடைக்கப் பெற்றதும் நின்று சுற்று முற்றும் பார்த்த போது பச்சைப் பசேல் என வயல்கள் எதிர்ப்பட்டன. "யார்ட்டயாவது கேட்டுப் பார்ப்போம்டா" மறுபடியும் ஸாபித்.
மின்னிக்ஸ் வானத்தைப் பார்த்த படி நின்றான். பின் எங்களைப் பார்த்தான். "வெயிட், என்கிட்ட அந்த ஷாப் நம்பர் இருக்கு, டயல் பண்ணிக் கேப்போம்" னு அவன் சொன்ன மாதிரி விளங்கவே "என்ன சொன்னாய்? நம்பர் இருக்கா?" என்று கேட்டோம். "ஆமா"ன்னான். "அடப்பாவி, இத முன்னாடியே செஞ்சிருக்கப்படாதா? நாறப் பயலே" பொரிந்து தள்ளினான் ஸாபித். நான் தலைவிதியை நினைத்துக் கொண்டு அருகிலிருந்த கடை ஷோ கேஸில் முகத்தைப் பார்த்த போது நன்றே கறுத்துவிட்டதை உணர்ந்தேன்.
மின்னிக்ஸின் தொலைபேசி அழைப்பு ஆன்ஸர் செய்யப்பட்டது. மேட்டரை சொன்னான். "சாரி சார், நாங்க இப்போ ஸ்டோர் இல்லை. ஆன்லைன் சேல்ஸ் மட்டும்தான் பண்றோம்" என்று வந்திச்சு பதில். செம கடுப்பாயிடிச்சு எங்களுக்கு.
"ஒண்ணும் வேணாம். பேசாம "பெட்டாஹ் (கொழும்பின் ஒரு ஏரியா)" போய் ஏதாவது சாப்பிடுவோம்." என்றான் மின்னிக்ஸ். சரி என்று பஸ்ஸில் ஏறிக்கொண்டோம். அது நாங்கள் வந்த பாதை வழியே ஓடத் தொடங்கியது. மேம்பாலம் வந்தது. கடந்து நேராகச் சென்றது. நான் இங்கி பிங்கி பாங்கி போட்டு தெரிவு செய்த பாதைக்கு நேர் எதிர்ப் பாதை அது. சந்தியிலிருந்து ஒரு ஐம்பது அடி தூரம் சென்றிருப்போம் "கே.எப்.சி" என்றொரு போர்டு எங்களைப் பார்த்து கண்சிமிட்டியது.
ஸாபித்தும், மின்னிக்ஸும் என்னைப் பார்த்து முறைத்தார்கள்.
இனி "இங்கி பிங்கி பாங்கி" போடுவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டேன்.
Wednesday 10 March 2010
எனது புதிய "பிஸினஸ் கார்ட்" வலைப்பக்கம்
இதன் மூலம் நன்மை???
பெரிசா ஒன்னும் இல்ல. உங்க விசிட்டிங் கார்ட் கொடுக்கிறதால என்ன நன்மையோ அதே. மற்றப்படி ஒருவரது நடவடிக்கைகளை நன்கு பாஃலோ பண்ணி, புறம் பேச ரொம்ப நல்லாவே ஹெல்ப் பண்ணும் :D
எனது வலைமனை.
தங்களது வலைமனைகளையும் இங்கே கமெண்டுங்கள்.
Tuesday 9 March 2010
கவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 4)
உண்மைச் சம்பவங்களை ஒரு கதையாக உருமாற்றம் செய்து தருவதில் பல நன்மைகள் இருக்கின்றன. பஃர் எக்ஸாம்பிள், கதை சொல்லி சில நாட்களின் பின் இது உண்மைச்சம்பவமாம் என்ற தகவல் பரவும் போது, "மாமே நியூஸ் கேட்டியா, அன்னிக்கு கேள்விப்பட்டமே ஒரு மேட்டரு அது மெய்யாலுமே நடந்திருக்குப்பா. நாம அது வெறும் கதைன்னுதானே நெனச்சோம். அப்டி இல்லப்பா. நம்ம ஊட்டாண்ட இருக்கிற யாரோதானாமே அந்த சேகரு. பாத்தியா, எவனையுமே நம்ப முடியறதில்லே" என்று பேசிக் கொள்ளலாம். இது ஒரு விதமான பாப்புலாரிட்டியை கொடுக்கும். மற்றையது நஸ்ருதீன் முல்லாக்கதைகள் போல நல்லவிதமான பாப்புலாரிட்டி.
தற்போதைய காலங்களில் இந்த இரண்டாம் விதமான (நல்லபடியான) புகழ் வருவது மறித்துவிட்டிருந்தது என்றே சொல்லலாம். ஒரு உண்மைச் சம்பவத்துடன் இப்படியும் நடந்திருந்தால் இன்னும் த்ரில்லிங்கா இருந்திருக்குமே என்று நாம் நினைப்பவற்றை கொஞ்சம் சேர்த்து இரண்டாம் நபருக்கு சொல்லுவதில் தொடங்குகிறது கதையாக்கம். இந்த கதை அப்படியே ஒரு ரவுண்டு கட்டி ஊர் சுற்றி வரும் போது இன்னொரு புதுக் கதையாகி எமக்கே ரிடர்ன் வரும்.
கதைகள் வேகமாகப் பரப்புவதில் பெண்கள் கை தேர்ந்தவர்கள் என்றாலும், கதைக்கு நம்பக்கூடிய விதத்தில் புதிய கிளைக் கதைகளை இணைப்பதில் ஆண்களை மிஞ்ச முடியாது. ஒரு சம்பவம் எப்போது கதையாக உருமாறுகிறது என்றால் ஒருவரிடம் அதை சொல்லும் போது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருப்பதற்காக நம்ம கிரியேடிவ் ஐடியாவ பயன்படுத்தி எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் சேர்க்கும்போது. இதில் நாம் போய் சொன்னோம் என்று தெரிய வந்தாலும் "நான் அப்பிடித்தாம்பா கேள்விப் பட்டேன்" அல்லது "ஒரு பஃன்கு சொன்னேன்பா" என்று ஜகா வாங்கிக்கலாம்.
சரி, இதில் யாருக்கு என்ன லாபம்??? இது ஐன்ஸ்டீனுக்கும் விடை தெரியா ஒரு கேள்வி. சந்தோஷம்??? கதையினை முதலாவதாய் சொன்னது நாம்தான் என்பதில் உள்ள பெருமை???
இறுகிப்போன மனங்களின் வெளிப்படைத் தன்மையே இது. பக்கத்துக்கு வீட்டுக்காரன் கஷ்டப்படும் போதுமகிழ்வுறும் மனம் அதில் நம் கற்பனை சேர்த்து கதையாக இன்னொருவருக்கு சொல்லும் போது மோட்சமடைகிறது. எல்லாருமே அப்பிடி இல்லைதான். அப்படி இருப்பவர்களை பார்த்து இல்லாதவர்கள் போதனை செய்வதும் இல்லையே? இது ஏன்? துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை பின்பற்றுகிறோமோ?
Sunday 14 February 2010
கூகிள் பஸ் தேடுபொறி
அண்மைக் காலங்களில் வலையுலகம் அதிகமாக பதிவிட்டது இந்த கூகிள் பஸ் பற்றித்தான். இத பாவிக்கறதுல ரொம்ப பேருக்கு செம குழப்பம். என்ன எழவுடா இது எங்கற ரேஞ்கும் போய்ச்சு. ட்விட்டரா இல்ல பேஸ்புக் ஷேயாரானு செம கன்பியூஷன். இருந்தாலும் அவங்க தந்திருந்த ட்விட்டர் போலவேயான சேவையான ஜைகூவை விட இது எவ்ளோ மேல்னு சொல்லலாம். இத பத்தி ரொம்பவே வலைப்பூக்களில் நீங்கள் படித்துவிட்டதால், இதற்கு அடுத்த கட்டமான சில விஷயங்களை பார்க்கலாம்.
கூகிள் பஸ்ஸில் பெரும் குழப்பம் இருந்தது அதன் வெளிப்படைத்தன்மை பத்தி. நாம ஷெயார் பண்ணுவதை பார்ப்பது நம்ம பின்தொடர்வாளர்கள் மட்டும்தானா?
ட்விட்டர் மாதிரி பப்ளிக்னு பப்ளிசிட்டி எல்லாம் பண்ணிட்டு, செய்யலைன்னா எப்பூடி....
இந்த கூகிள் பசங்ககிட்ட பிடிக்காததே இதுதான். எல்லாத்தையும் செஞ்சிட்டு கம்னு இருந்துடுவாங்க, சைனீஸ் மொபைல் மாதிரி (யூசர் மேனுவல் இருக்காது). அப்றோம் கொஞ்சம் கொஞ்சமா தயாரிப்பாங்க.
இவங்க எப்பவுமே இப்டித்தான். :)
மேட்டர் இன்னான்னா, பப்ளிக் ரிசல்ட்ஸும் இருக்கு மாமே. ஆல் யூ காட்ட டூ இஸ், ஜீமெயில்ல மெயில் சேர்ச் பண்ணுற பாக்ஸ்ல தேட வேண்டியதுதான். இது நீங்க கூகுள் பஸ் டேப்கு வந்த உடனேயே ஆட்டோமேட்டிக்கா "சேர்ச் பஸ்"னு மாறிடும். அப்றோம் வேண்டியத தேடிக்கலாம். செம ஸ்பீடு மச்சி.
கிவ் இட் எ ட்ரை...
இது இந்த வாரத்தோட நிலைமைதான். மீண்டும் சிந்திப்போம்....
Tuesday 26 January 2010
என்ன கொடும சார் இது. வட போச்சே!
கன்வர்சேஷன் 1:
Thursday 21 January 2010
அவாஸ்ட் அண்டி வைரஸ்ஸின் புதிய பதிப்பு
கவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 3)
Wednesday 20 January 2010
பில் கேட்ஸ் ட்விட்டரில்...
என்ன கொடும சார் இது :/
கவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 2)
சரி, மேட்டருக்கு வருவோம். சென்ற பதிவு பல கேள்விகளுடன் முடித்திருந்தோம். இனி ஒவ்வொண்ணா அலசலாம்.
பர்ஸ்ட் இன்டெர்நெட்டின் பாதுகாப்பின்மை. இணையத்தில் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை, ப்ரைவசி. சரி இதுக்கேன் இவ்ளோ முக்கியத்துவம். ஒருத்தர பத்தி விஷயங்கள தெரிஞ்சிக்கறதுல என்ன தப்பு? இதில் உள்ள பாயிண்ட் என்னவென்றால், ஒருவரைப் பற்றி அவரது அனுமதி இல்லாமல் தெரிந்து கொள்ள இணையத்தில் இலகு வழிகள் இருப்பது... அப்போ நிஜ வாழ்க்கையில்? அது அதை விட இலகு. பட் நாம் ஏன் இணையத்தை மட்டும் சாடுகிறோம்? ஏன் இன்டர்நெட்டை எண்ணி அளவுக்கதிகமாக பயப்படுகின்றோம்? இதற்கு விடை தேடுவது ரொம்பவே கொம்ப்ளிகேட்டட் ஆனா இஷ்யூ.
இப்போ பார்த்தீங்கன்னா, உங்க தெருவுக்கு புதுசா ஒருத்தர் குடி வார்ரார்னு வச்சிக்குவோம். அல்லது உங்கள பொண்ணு அல்லது மாப்பிள்ளை பார்க்க ஒரு பாமிலி முடிவு பண்ணுதுன்னு வச்சிக்குவோம். உங்க அனுமதி இல்லாம உங்களபத்தி, உங்களுக்கே தெரியாத, உங்க பேங்க் அக்கௌன்ட் டீட்டைல் வரைக்கும் பல விஷயங்கள அவங்க சேகரிக்கிரதுக்கு ஒரு வாரம் போதும். அப்போ இதை நாம் ஏன் பெரிசு படுத்துவதில்லை? இதுவும் ஒரு விதமான ஹாக்கிங் தானே? எப்பவாவது இவர் என்னை லவ் பண்ண முன்னாடி என்னை பற்றிய டீட்டேயில்ஸ் சேகரிச்சார்னு கேஸ் போட்டிருக்கோமா?
இவ்வாறு 2 ஒரே மாதிரியான விஷயங்களுக்கு வெவ்வேறு 2 விதமான கண்ணோட்டங்கள் இருப்பதற்கு காரணம், புரிந்து கொள்வதில் ஏற்பட்ட குழப்பம். இன்னிக்கு வரைக்கும் கூட எங்கள் ஊரில் இணையம் ஒரு மோசமான நண்பனாவே கருதப்படுகின்றது. பெண்கள் இணையத்தில் பங்கெடுப்பதை அவர்கள் குடும்பம் விரும்புவதில்லை. எனக்கு இணையம் அறிமுகமாகியது 1999/2000 ஆண்டு காலப் பகுதி. எனது 11 வயதில். அப்போதும் எனது பெற்றோருக்கு இன்டர்நெட் பற்றி ஒரு தப்பான கண்ணோட்டமே இருந்தது. எனினும் நான் ஆசைப்பட்டேன் என்பதற்காக அவ்வசதி ஏற்படுத்தி தரப்பட்டது. இதுவே நான் ஒரு பொண்ணாக இருந்திருந்தால்? பொம்பளப் பிள்ளைக்கு எதுக்கு கம்பியூட்டர் என்று சொல்லி இருந்திருக்கக் கூடும். இவ்வாறு அவர்கள் பயப்பட ஏன் காரணம்? கலாசார சீர்கேடுகள்! அப்போ கலாசாரத்தை பாதுகாக்க ஒரு பெண்ணின் படிக்கும் ஆசையினை விலையாகக் கொடுக்கும் வியாபாரம் நியாயமானதா? இதுவும் குழப்பமான பல விடைகளை தரக் கூடிய ஒரு கேள்வி.
இனி நாம் பரிச்சயப்பட்ட பல தலைப்புகளின் கீழ் எம்மைச் சுற்றியுள்ள "கவனிக்கப்படாத நிஜங்களை" ஆராயலாம்.
1. தயக்கம்:
கம்பஸ்ல இருந்து வீட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்தேன் சில நாள் முன்னாடி. ஒரு அழகான பொண்ணு அமர்ந்திருந்த சீட்ல பக்கத்துல இருந்த ஒருத்தர் எழும்பி அடுத்த நிறுத்தத்தில் இறங்கப் போனார். கிடச்சிச்சுடா சாமி (உக்கார ஒரு இடம் - எங்கறத மட்டும் மீன் பண்ணவும், டபிள் மீனிங் வேணாம்) கணக்கா பொய் அமர்ந்து கொண்டேன். அவ்ளோ நேரம் ஐபாட்ல பாட்டு கேட்டிட்டிருந்த அவ முகம் சுர்ருன்னு சுருங்கிப் போச்சு. நான் கொஞ்சம் சுமார் (ஓகே ஓகே ரொம்பவே சுமார்) என்கிறது ஒரு புறம். பட் ஏன் இப்பிடி அவ முகம் சுளிக்கனும்னு யோசிச்சேன். அவ ஒரு ஸ்மைல் பண்ணி இருந்தான்னா எனக்கு அவ கூட ஒரு ஹாய் சொல்றதுல எந்த தயக்கமுமே இருந்திருக்காது. ஆனா அவ இப்பிடி பண்ணதால எனக்கு அது முடியாம போச்சு. புதிய உறவுகளை ஏற்படுத்திக்க மக்கள் ஏன் தயங்கனும். ஏமாத்திடுவாங்கன்னு பயம்??! அவங்க ஏமாத்தற அளவுக்கு நாம ஏன் இடமளிக்கனும். என்னையும் இப்பிடி ரொம்ப பேர் ஏமாத்தி இருக்காங்கதான். இப்பிடி ரெண்டு மூணு தடவை அடி பட்ட போதுதான் எவ்வாறு ஒரு பாதுகாப்பான உறவை ஏற்படுத்தலாம் என்கற யுக்தியை தெரிந்து கொண்டேன். அதில் முதலாவது நீங்கள் நம்ப வேண்டியது மற்றும் உங்களுக்கு நீங்களே சொல்லிக்க வேண்டியது "இவங்க என்னை விட்டுட்டு போறதால நான் கவலைப் பட மாட்டேன்." இது உறவுகள் மீதான நம்பிக்கையை பொய்யாக்குதுன்னு சில பேர் சொன்னாங்க. யு ஜஸ்ட் ட்ரை அண்ட் சி. கடைசியா ஏமாத்தின ஒரு பிரன்ட் சொன்னான் "நண்பர்களை நம்பாதே" :/ நான் சொன்னேன் "நட்பே நம்பிக்கைலதானேடா இருக்கு" உறவு முறைகளின் மீதான பிழையான புரிதலே அவன் இவ்வாறு சொல்லக் காரணம். இனி அவனால எப்படி மற்றவங்க கூட ஒரு உண்மையான நண்பனா இருக்க முடியும்? நான் யாரை கண்டாலும் முதல்ல இவங்க கூட எப்டி பிரண்ட் ஆகலாம்னுதான் யோசிப்பேன், பட் ரொம்ப பேரு எப்படி எமாத்தலாம்னு யோசிக்கறாங்க. இவங்க தேவை நிச்சயம் பணமாக இருக்கும். அல்லது இவர்கள் இவ்வாறான விஷயங்களில் சந்தோஷம் காணும் சைக்கோ அல்லது அட்டிக்ட்ஸ் ஆக இருப்பார்கள். பர்ஸ்ட் கட்டக்கரில இருக்கறவங்கள திருத்தறது ஈசி. ஆனா மூனாவது பிரிவைச் சேர்ந்தவங்கள மாத்தறதுதான் ரொம்ப கஷ்டம். இவங்க கேட்டகரி 1 + கேட்டகரி 2 வைச் சேர்ந்தவங்க. இவங்க பாதிப்பு எந்த அளவுக்குன்னா முதலாவதா ஒருத்தர மீட் பண்ணும் போது 'இவன் நம்மள ஏமாத்திடுவானோன்னு' சந்தேகம் வரும் அளவுக்கு நம் மனதை பாழ் படுத்திவிட்டு இருக்கரார்கள். இவ்வாறானவார்களாலேயே மக்கள் புதிய உறவுகளை ஏற்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். எடுத்துக் காட்டு, நான் பஸ்சில் சந்திச்ச அந்த அழகான பெண். இணையத்தில் இதன் விளைவு இதைக்காட்டிலும் 2 மடங்கு...
இன்னும் அலசுவோம்....
Tuesday 19 January 2010
கவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 1)
Sunday 17 January 2010
யாதுமாகிய நட்பு...