போக வேண்டாம் என்பர்,
இல்லாமல் இருக்க முடியாது
என்றே நினைத்தும் கொள்வர்
பேச்செடுத்தாலே பச்சோந்தியாக்கும்,
உமை இரு வேறு கதை
பேசவைத்தே அழிக்கும்,
சத்தானியத்தின் மறுபிறவி.
அது ஒரு அழகாய்
இருந்தது ஒருக் கால்.
குணம் மாறிப் போனது
ரத்தவெறி மனிதர்களால்.
மாமன் மச்சான்
பங்காளி உறவு,
பெட்டி படுக்கை எடுத்தே
ஊர் விட்டு ஓடிப் போகும்.
அரசியலில் வன்முறை கூடாது
என்றதொரு கூட்டம்.
அரசில்யலை விட வேறென்ன வன்முறை
என்றது மற்றக் கூட்டம்.
அவசர அவசரமாய்
காசு பணம் சேர்க்கும்
ஊடகமாய் மாறிப் போனது,
தான் உருவான நோக்கம்
இழந்து நிர்வாணமாய் நின்றது
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
அன்றே சொன்னான் மூத்தோன்
நம் தலைவன் நம் பிம்பம்
என்று கொண்டே
நம்மை நாம் திருத்தவில்லை
கிணத்துத் தவளைகளாய்
தலைவர்கள் இருந்தால்
நாடு முன்னேறும்
என்றே நினைப்பது மூடம்.
ஒருவரை ஒருவர்
விமர்சனங்கள் தவிர்த்து
ஒன்று கூடியே சமூகம்
முன்னேற்றப் பார்ப்பியா?
அதை விடுத்து உமை
கேள்வி கேட்க வைக்கிறீர்களே
"என்ன கிழித்தீர்கள்
அரசியலாகி?" என...