Monday 3 November 2008

இந்த வருடம் (2008) பெண்களுக்கு மிகவும் பிடித்த இ மெயில்.

ஒரு கணவன் தான் தினம் தினம் வேலைக்குப் போய் படுற கஷ்டங்களை தன் மனைவி உணரனும்னு நினைச்சான். அவ வீட்ல சும்மா இருக்கறது இவனுக்கு ரொம்ப கோபத்தை உண்டு பண்ணிச்சு.

உடனே அவன் கடவுள் இடம் வேண்ட ஆரம்பிச்சான்.
"அன்பான கடவுளே, நான் இந்த குடும்பத்துக்காக தினம் தினம் 8 மணி நேரம் வேலைக்கு போய் ரொம்ப கஷ்டப் படுறேன். ஆனா என் பொண்டாட்டியோ வீட்ல சும்மா உக்காந்துக்கிட்டு காலந்த்தள்ளிட்டு இருக்கா. அவ இந்த குடும்பத்துக்காக நான் படுற கஷ்டத்த உணரனும். எனவே, என்னை அவளாவும் அவளை நானாவும் மாத்திடு. ஆமென்"

கடவுள் அவனது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டார்.

மறு நாள் காலை அவன் பெண்ணாய் எந்திரிச்சான்.
அவனுடைய மனைவிக்கு (தற்காலிக கணவனுக்கு) காலை உணவு ரெடி பண்ணான். குழந்தைங்கள எழுப்பி விட்டான். அவங்க பாடசாலை சீருடையை எடுத்து அயர்ன் பண்ணி வச்சான். அவங்களுக்கு காலை சாப்பாடு ஊட்டி விட்டான். பகல் உணவுகளை பேக் செய்து கொடுத்தான். அவங்களை பாடசாலைல கொண்டு போய் விட்டுட்டு வந்தான். வீட்டுக்கு வந்து லாண்டரிக்கு போட துணிகளை எடுத்து சென்றான். போற வழியில ஒரு வங்கில பணம் போட நின்னான். லாண்டரி முடிஞ்சு எடுத்துட்டு வார வழில மளிகை சாமான்கள் வாங்கிட்டு வீட்டுக்கு வந்தான். பில்ஸ் எல்லாத்தையும் கட்டினான். செக் புத்தகத்தை பலன்ஸ் பண்ணான். செல்லப் பூனையின் கூட்டை துப்பரவு செய்தான். நாயை குளிப்பாட்டினான்.

மணி ஏற்கனவே 1 pm ஆயிட்டிருந்தது.
அவசர அவசரமாக கட்டிலை சரி பண்ணினான். வீட்டை க்ளீன் பண்ணினான். கிச்சனை sweep, mop லாம் கூட பண்ணான். ஸ்கூல்கு ஓடிப் போய் பசங்களை கூட்டி வந்தான். வரும் வழியில் அவங்க போட்ட சண்டையை சமாதானம் செஞ்சான். வீட்டுக்கு வந்து அவங்களுக்கு பால், பிஸ்கட் குடுத்து அவங்க Home Work பண்ண உதவி செஞ்சான். அப்புறம் துணிகளை அயர்ன் பண்ணிக்கிட்டே கொஞ்ச நேரம் TV பார்த்தான்.

ஒரு 4.30 மணி போல் உருளைக் கிழங்குகளை உரிக்கத் தொடங்கினான். அப்புறம் காய்கறிகளை கழுவி இறைச்சியை வேக வைக்கத்தொடங்கினான், இரவு சாப்பாட்டிற்கு.

சாப்பிட்டு முடிஞ்சதுக்கப்புறம் கிச்சனை க்ளீன் பண்ணி, தட்டுகளை கழுவி, அயர்ன் பண்ண உடுப்புகளை மடிச்சு, குழந்தைங்களை குளிப்பாட்டி தூங்க வைச்சு முடிக்கும் பொது இரவு 9.30 ஆயிட்டிருந்திச்சு.

அதுக்கு மேல அவனால முடியல... அவன் நிம்மதியா தூங்குவோம்னு bedroom பக்கம் போனா அங்க அவன் பொண்டாட்டி (தற்காலிக கணவன்) ரொமான்ஸ் பண்ண காத்திட்டிருந்தா. அவனும் எந்த complaint உம் வராம அத நிறைவேற்றினான்.

மறு நாள் காலை விடிஞ்சதுதான் தாமதம்...
எழும்பி கடவுள் இடம் பிரார்த்திக்க ஆரம்பிச்சான்.
"கடவுளே, நான் அவளை ரொம்ப தப்பா இவளவு நாளும் நினைச்சிட்டு இருந்திருக்கேன். இதுக்கு மேல அவ மாதிரி என்னால இருக்க முடியாது. அவ எவளவு கஷ்டப் படுரானு இப்ப விளங்குது. தயவு செய்து எங்களை முன்பிருந்தது போல மாத்திடு"

அதுக்கு கடவுள் சொன்னாராம்...
"மகனே.. நீ நியாயத்தை உணந்ததை இட்டு நான் ரொம்ப சந்தோஷப் படுறேன். உங்களை பழைய நிலைமைக்கு நான் மாத்திடுவேன். ஆனா அதுக்கு நீ 9 மாசம் வெயிட் பண்ணனும். ஏன்னா நீ இப்ப கர்ப்பமாயிருக்கே" னு...

இது எப்டி இருக்கு...