Friday 4 March 2011

அது ஒரு பீலிங்!!!

ஒரு காபி ஷாப். கொஞ்சம் பரந்து விரிந்த ஒரு காபி ஷாப். தெருவை நோக்கிய பக்கமாய் கண்ணாடியாலானா திரை. முழுக்க ஏ.சி செய்யப்பட்ட அந்தக் காபி ஷாப்பில் கண்ணாடித் திரை அருகில் தெருவை ரசிக்கும் முகமாய் மேஜைகளும் உண்டு. அவ்வாறான ஒரு மேஜை காபி ஷாப்பின் ஒரு கோர்னரில் இருக்கும். ஒரு பக்கம் கண்ணாடித் திரை. அது நைண்டி டிகிரி எடுத்து திரும்ப, வரும் பக்கம் பக்கத்துக் கடைக்கும் காபி ஷாப்புக்கும் இடையேயான பொதுச் சுவர். அந்த மூலை மேஜையில் சுவர்ப் பக்கம் முதுகைக் காட்டி வலப்பக்கம் இருக்கும் கண்ணாடித் திரையூடாக தெருவை ரசித்த படியே காபியை ஸிப் செய்ய தொடங்குகிறேன். அது ஒரு அழகான தெரு. இரு பெருந் தெருக்களை கணக்ட் பண்ணும் ஒரு குறுக்கு வீதி. ஆனாலும் வாகனங்களால் பாவிக்கப்படாத ஒரு தெரு. தெருவின் நடுவில் அழகான பூ மரங்கள். அல்லியம், அந்தூரியம், செர்ரி ப்ளாசம், கார்ன் ப்ளவர், டெய்சி, கேர்பேரா டெய்சி என ஏராளாமான பூ மரங்கள். சற்று சற்று தூரத்தில் நிழலுக்காய் ஒரு சில மரங்கள். தெருவிலே உதிர்ந்து கிடக்கும் பூக்கள், கொஞ்சம் இலைகள்.

அது ஒரு ரம்மியமான மாலை நேரம். பொதுவாகவே மனதில் தோன்றும் ஐந்து மணி. வான் முழுதும் சாம்பல் மேகங்கள் வெயிலை மறைத்துக் கொள்கின்றன. மழை வராது என்று தோன்றினாலும் ஒரு இதமான குளிர்க்காற்று வீசிக் கொண்டிருக்கிறது. ஐ.பாட் இல் 'யாரைக் கேட்டு எந்தன் நெஞ்சில் இடப் பக்கம் நீதான் நுழைந்தாயோ'வை சற்று அதிகமான வால்யூமில் வைக்கிறேன். மேஜையை விட்டு எழும்பி ஷாப்ப்பின் கதவைத் தள்ளி வெளியே வருகிறேன். காற்று உடலைத் தொடுகிறது. கைகளை அகல விரிக்கிறேன். கண்களை இறுக மூடி வானத்தை நோக்கி முகத்தை திருப்புகிறேன். அது ஒரு பீலிங். ஒரு அழகிய பீலிங். காதினுள் கேட்கும் அழகிய பாடல். சுற்றி எங்கும் ஒரு அழகிய அட்மாஸ்பியர்.

முகத்தில் சொரிகின்றன பூக்கள். என்னை கடக்கின்ற ஒவ்வொருவரும் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிடுகிறார்கள். அதில் எடை குறைந்து வானத்தில் பறக்கிறேன். மேகம் காலின் கீழ் வருகிறது. எனைத் தூக்கிச் செல்கிறது.
அது ஒரு பீலிங்!!!