Friday 13 January 2012

நல்ல நண்பன்


"நண்பன்" படத்தில் வரும் ஒரு அழகான பாடலின் அருமையான வரிகள் இவை. எனக்கு ரொம்பவே பிடித்துப் போனாதால் அதை இங்கே பகிர்கிறேன்.

நல்ல நண்பன் வேண்டும் என்று,
அந்த மரணமும் நினைக்கிறதா?
சிறந்தவன் நீதான் என்று,
உன்னை கூட்டிச் செல்ல துடிக்கின்றதா?

இறைவனே, இறைவனே, இவனுயிர் வேண்டுமா?
எங்கள் உயிர் எடுத்துக்கொள், உனக்கது போதுமா?
இவன் எங்கள் ரோஜா செடி,
அதை மரணம் தின்பதா?
இவன் சிரித்து வீசும் ஒளி,
அதை வேண்டினோம் மீண்டும் தா.

உன் நினைவின் தாழ்வாரத்தில்,
எங்கள் குரல் கொஞ்சம் கேட்கவில்லையா?
மனம் என்னும் மேம்பாலத்தில்,
எங்கள் ஞாபகங்கள் பூக்கவில்லையா?

இறைவனே இறைவனே, உனக்கில்லை இரக்கம்தான்...
தாய் இவள் அழுகுரல், கேட்ட பின்னும் உறக்கமா...

வா நண்பா வா நண்பா, தோள்களில் சாய வா.
வாழ்ந்திடும் நாளெல்லாம், நான் உன்னை தாங்கவா?