Thursday 28 October 2010

Why I hate wedding?

இணையத்தில் ரசித்தது இது... என் சுய ஆக்கமில்லை...



கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கடா மச்சான். இப்பதாண்டா எதோ சாதிச்ச மாதிரி ஒரு பீலிங் வருது.

வாழ்க்கையோட அர்த்தம் இப்பதாண்டா புரியுது. பொண்டாட்டி முன்னாடி இப்படி சொல்லிட்டு,அவங்க Kitchen உள்ள போனவுடனே , கையெடுத்து கும்புட்டு தயவு செஞ்சு அந்த தப்ப மட்டும் பண்ணி மாட்டிக்காத மச்சின்னு கெஞ்சற நண்பன்....


எவ்ளோ நிம்மதியா இருந்தேன்..கல்யாணத்த பண்ணி வெச்சு என்ன என் புருசனுக்கு அடிமையாக்கிட்டாங்க, என் தோழி ஒருத்தி...


தம்பி அடுத்த வருஷம் ஜூன்'குள்ள கல்யாணத்த முடிசிரனும்டா. நல்ல பொண்ணு கிடைச்சுதுன்னா விட்ற கூடாது, என் அம்மா...

டேய் கல்யாணத்துக்கு நெறைய செலவாகும். வழக்கம் போல பெருந்தன்மையா நீங்களே பார்துகங்கப்பானு சொல்லிட்டு போய்டாத. மரியாதையா காச சேர்த்து வை, என் அப்பா...

சீக்கிரம் கல்யாணம் பண்ணி தொலைடா. காலேஜுக்கு ரெண்டு நாள் லீவ் போடலாம்னு நானும் ரெண்டு வருசமா வெயிட் பன்றேனு சொல்லிட்டு, மூதேவி இதுவும் பண்ணிக்கமட்டேன்குது எனக்கும் பண்ணி வெக்க மாட்டேன்குதுன்னு மனசுக்குள்ள முனுமுனுக்கற என் தங்கச்சி...

கல்யாணம்லாம் சும்மா பிரதர், வெத்து மேட்டரு, ஒன்னும் இல்ல அதுல, பார்ல சிகரட் ஓசி வாங்குன கடனுக்கு அட்வைஸ் பண்ண வஸ்தாது ஒருத்தர்.

கல்யாணம்... கல்யாணம்... கல்யாணம் ...

25 or 27 வது வயசுல ஒரு பிரம்மச்சாரியை லேசா பயமுறுத்தி அதிகமா பதட்டபடுத்தி கொஞ்சமா ஷாக் அடிக்க வைக்கற ஒரு வார்த்த. அப்டி என்னதாங்க இருக்கு இந்த கல்யாணத்துல...

முதல் 3 மாதம் திடீர்னு ஒரு நாள் ஒரு பொண்ணு பொண்டாட்டிங்க்ற பேர்ல உங்க வீட்டுகுள்ள வருவா...

பின்னாடி ஒரு கூட்டமே வந்து விட்டுட்டு போகும்...

பீரோகுள்ள உங்க துணிய நகர்த்தி வெச்சுட்டு அவங்க துணிய அடுகிக்குவாங்க‌. உங்க பாத்ரூம்ல அவங்க சோப்பும் ப்ரச்சும் எடத்த புடிச்சுக்கும். அடுத்த நாள் ஆபீஸ் போகும்போது சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுங்கன்னு குழைஞ்சு குழைஞ்சு காதுகிட்ட மூச்ச விட்டுகிட்டே சொல்லுவாங்க‌. ஊர்ல டம்மி பிகர் கூட மதிக்காத நம்மள இந்த புள்ளைக்கு இவ்ளோ புடிசிருகேன்னு நம்மளும் வழிஞ்சுகிட்டே சீக்கிரம் வர ஆரம்பிப்போம்... (இது அடிமையாகுதலின் முதல் கட்டம்)

அப்பறம் உங்கள அடிமையாக்கரதுக்கு, உண்டான பணிகள் வேகம் வேகமா கனஜோர்ல நடக்கும்.

(அவங்க கூட படிச்ச வில்லிங்கல்லாம் வேற இதுக்கு ரூம் போட்டு ஐடியா குடுப்பாங்க‌)

மற்றொரு அழகான மாலை பொழுதுல புது பொண்டாட்டிய ஷாப்பிங் கூட்டிட்டு போவீங்க. அவங்க 3 வருசமா வாங்க நெனச்சு வாங்காம இருந்த எல்லாத்தையும் அப்பதான் வாங்குவாங்க‌...

அவங்க வாங்கற நெய்ல் பாளிஷ்க்கும் பாடி ஸ்ப்ரேக்கும் நீங்க தெண்டம் அழுகனும். கான்டாதான் இருக்கும், என்ன பண்றது...

அவங்களோட ஒவ்வொரு சினுங்களுக்கும் கிரெடிட் கார்ட் கிழிய கிழிய தேய் தேய்னு தேய்ப்போம். பில்லு எகிர்றது பார்த்து மனசு பதர்னாலும் உதடு வேற என்ன வேணும் என் செல்லகுட்டிக்குன்னு கேக்கும்...


வீட்டுக்கு விருந்தாளிங்க்ற பேர்ல வந்து டேரா போன்ற அவங்கப்பன் விருமாண்டி கிட்ட கூட பாசமா நடந்துகுவோம்... (எல்லாம் நடிப்புதேன். எந்த ஊர்ல மாப்பிள்ளைக்கு அவன் மாமனார புடிச்சிருக்கு)

கொஞ்சம் கொஞ்சமா நீங்க நீ'யாயிட்டு வருவீங்க...

ஆறு மாசம் ஓடிடும். அதுக்கப்றம் எங்க ஒய் இருக்கு உமக்கு வாழ்க்கை. அடிமை ஒய் நீரு...

பிரென்ட் ரூம்ல போய் விடிய விடிய கதையடிச்சிட்டு பேசுற‌ சுகம் அதுக்கப்றம் கனவாவே போய்டும். எங்க போறோம், எதுக்கு போறோம்னு தெரியாம எங்கெங்கயோ போன தருணங்கள் மனசுக்குள்ள வெறும் நினைவுகளா மட்டுமே இருக்கும்...

எந்த பொண்ண பார்த்தாலும் நம்ம பொண்டாட்டி இப்டி இருப்பாளோ, அப்டி இருப்பாளோங்கற அந்த curiosity சுத்தமா இருக்காது. செகண்ட் ஷோ சினிமா கட் ஆகும். குஷி ஆனா அடிக்கற பீர், தம்[எப்போவாவது] கட் ஆகும். நிம்மதியா செலவு பண்ற சுதந்திரம் கட் ஆகும்...

என்ன கொடும சார் இது...

இதுக்குதான் இந்த கருமம் புடிச்ச கல்யாணத்த வேண்டாம்ன்னு சொல்லுறேன்...

வாழ்க்கைல சந்தோஷமான தருணம் bachelor life மட்டும்தான்னு எனக்கு தோனுது...

நீங்க என்ன நெனைக்கறீங்க?