Tuesday 19 January 2010

கவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 1)

முன் குறிப்பு: இந்தத் தொடர் பதிவுகள் பலரது எதிர்ப்பையும் சிலரது பாராட்டையும் சம்பாதிக்கக் கூடியன. மற்றும் இவை விவாதத்திற்காக அல்ல :)

விருமாண்டி பெயர் குழப்பத்தின் போது கமல்ஹாசன் குடுத்த பேட்டி பற்றி ரொம்ப பேருக்கு தெரிந்திருக்கும். அதையும் விட ரொம்ப குழப்பமா போச்சு இந்த பதிவுக்கு பேர் தேடிய படலம்.

ஆக்சுவலா நானும் என் நண்பன் மின்னிக்ஸ் உம் கொஞ்ச நாள் முன்னாடி பேசிக்கொண்டிருக்கும் போதே வந்திச்சு இந்த ஐடியா. நார்மலா தொடங்கிய அரட்டை வர்ச்சுவல் வேர்ல்ட் இன் நம் மீதான பாதிப்புகள் பற்றி பேசப்போய் மாட்டிக் கொண்டது இந்த மீன். முதலில் பேஸ்புக் பற்றித்தான் ஆரம்பிச்சோம். அப்புறம் பஸ்ல போற வாரவங்கள எல்லாம் நோட்டம் போட ஆரம்பிச்சோம். சும்மா சொல்லப்படாது. செம எக்ஸ்பீரியன்ஸ் அது. நாம வேணான்னு தூக்கி எறிஞ்ச பல விஷயங்கள்ல ரொம்பவே இன்டெரெஸ்டிங்கான விஷயங்கள் இருக்கு. வாழ்க்கைல நாம மீட் பண்ற ஒவ்வொரு நபரும் ஒரு வித்தியாசமான காரக்டர். அவருக்கென்று தனித்தன்மைகள் இருக்கும். இது சாதாரணமா வெளில தெரியாது. இப்படி ஒரு விஷயத்தை அலசுவதுதான் எங்க கான்சப்ட். இப்படி பல விஷயங்கள் சம்பந்தப்படுறதால என்ன பேரு வைக்கறதுன்னு ப்ராப்ளம் வந்திச்சு. மின்னிக்ஸ் "பேஸ்புக் பக்கங்கள்" இலேயே எழுதரேன்னாரு. நான் கொஞ்சம் டைம் எடுத்துகிட்டேன். இந்த தலைப்பு பரவால்லன்னு பட்டதும் உடனே பதிவெழுத ஆரம்பிச்சிட்டேன். முதல் கோணல் முற்றும் கோணல் ஆயிடக்கூடாதுல்ல. அதான் இப்பிடி.

சரி முதல் இன்சிடன்ட்கு வருவோம். இங்கதான் பேஸ்புக்கின் வருகை...
சென்ற வருடத்தின் சம்மர் சீசனில் ஒரு நாள். நாங்கள் பேஸ்புக்கில் உலவிக்கொண்டிருக்கும் போது வந்தது ஒரு மெசேஜ், பேஸ்புக் இன்பாக்ஸ் இற்கு. ஒரு பொண்ணு. ஆமா எப்பவுமே பிரச்சனை அங்கதானே தொடங்குது :D. அவ கேட்டிருந்தா, "டூ ஐ நோ யூ?". கேள்வி வாஸ்தவம்தான். பட் அதுக்கப்புறம்தான் ப்ராப்ளமே ஸ்டார்ட். நான் ரிப்ளை பண்ணேன், "நோ, பட் வி கேன் கெட் டு நோ ஈச் அதர்". அவகிட்ட இருந்து பளீர்னு வந்திச்சு "சாரி, ஐ டோன்ட் அட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்." சரி இதுல நாம் கவனிக்க வேண்டி இருக்கறது சில விஷயங்கள். பொதுவாவே இணையம், சோசியல் நெட்வேர்க்கிங் தளங்கள் பற்றி மோசமான உண்மைச் சம்பவங்கள் உலவுவது நாம் அறிந்ததே. முன் ஜாக்கிரதை தேவைதான். பட் அந்த "கன்பர்ம் பிரண்ட் ரிகுவஸ்ட்" பட்டனை அழுத்த ஆயிரம் கேள்வி கேக்கறவங்க நிஜ உலகுல இப்பிடி இருக்கறாங்களா?. ஒரு ஸ்ட்ரேஞ்சர்தானே பிரண்ட் ஆக முடியும். இப்போ இருக்கும் எல்லா நண்பர்களும் முன்னாடி யாரோ தெரியாதவங்கதானே. பேஸ்புக் இல் அல்லது மற்ற இணையம் சம்பந்தப்பட்ட வழிகளில் உண்மையான உறவுகளை ஏற்படுத்த முடியாதா? இணையத்தில் ஒருவரை ஏமாற்றுவதால் எமக்கு என்ன லாபம்?

கேள்விகளுடன் காத்திருங்கள்... கூடிய சீக்கிரமே எல்லோரும் சேர்ந்து விடை தேடலாம்...

:)