Tuesday 9 March 2010

கவனிக்கப்படாத நிஜங்கள்... (பாகம் 4)

கட்டுக்கதைகள் சொல்வது எப்படி.
உண்மைச் சம்பவங்களை ஒரு கதையாக உருமாற்றம் செய்து தருவதில் பல நன்மைகள் இருக்கின்றன. பஃர் எக்ஸாம்பிள், கதை சொல்லி சில நாட்களின் பின் இது உண்மைச்சம்பவமாம் என்ற தகவல் பரவும் போது, "மாமே நியூஸ் கேட்டியா, அன்னிக்கு கேள்விப்பட்டமே ஒரு மேட்டரு அது மெய்யாலுமே நடந்திருக்குப்பா. நாம அது வெறும் கதைன்னுதானே நெனச்சோம். அப்டி இல்லப்பா. நம்ம ஊட்டாண்ட இருக்கிற யாரோதானாமே அந்த சேகரு. பாத்தியா, எவனையுமே நம்ப முடியறதில்லே" என்று பேசிக் கொள்ளலாம். இது ஒரு விதமான பாப்புலாரிட்டியை கொடுக்கும். மற்றையது நஸ்ருதீன் முல்லாக்கதைகள் போல நல்லவிதமான பாப்புலாரிட்டி.

 தற்போதைய காலங்களில் இந்த இரண்டாம் விதமான (நல்லபடியான) புகழ் வருவது மறித்துவிட்டிருந்தது என்றே சொல்லலாம். ஒரு உண்மைச் சம்பவத்துடன் இப்படியும் நடந்திருந்தால் இன்னும் த்ரில்லிங்கா இருந்திருக்குமே என்று நாம் நினைப்பவற்றை கொஞ்சம் சேர்த்து இரண்டாம் நபருக்கு சொல்லுவதில் தொடங்குகிறது கதையாக்கம். இந்த கதை அப்படியே ஒரு ரவுண்டு கட்டி ஊர் சுற்றி வரும் போது இன்னொரு புதுக் கதையாகி எமக்கே ரிடர்ன் வரும்.

கதைகள் வேகமாகப் பரப்புவதில் பெண்கள் கை தேர்ந்தவர்கள் என்றாலும், கதைக்கு நம்பக்கூடிய விதத்தில் புதிய கிளைக் கதைகளை இணைப்பதில் ஆண்களை மிஞ்ச முடியாது. ஒரு சம்பவம் எப்போது கதையாக உருமாறுகிறது என்றால் ஒருவரிடம் அதை சொல்லும் போது கொஞ்சம் சுவாரஸ்யமாக இருப்பதற்காக நம்ம கிரியேடிவ் ஐடியாவ பயன்படுத்தி எக்ஸ்ட்ரா பிட்டிங்க்ஸ் சேர்க்கும்போது. இதில் நாம் போய் சொன்னோம் என்று தெரிய வந்தாலும் "நான் அப்பிடித்தாம்பா கேள்விப் பட்டேன்" அல்லது "ஒரு பஃன்கு சொன்னேன்பா" என்று ஜகா வாங்கிக்கலாம்.

சரி, இதில் யாருக்கு என்ன லாபம்??? இது ஐன்ஸ்டீனுக்கும் விடை தெரியா ஒரு கேள்வி. சந்தோஷம்??? கதையினை முதலாவதாய் சொன்னது நாம்தான் என்பதில் உள்ள பெருமை???

இறுகிப்போன மனங்களின் வெளிப்படைத் தன்மையே இது. பக்கத்துக்கு வீட்டுக்காரன் கஷ்டப்படும் போதுமகிழ்வுறும் மனம் அதில் நம் கற்பனை சேர்த்து கதையாக இன்னொருவருக்கு சொல்லும் போது மோட்சமடைகிறது. எல்லாருமே அப்பிடி இல்லைதான். அப்படி இருப்பவர்களை பார்த்து இல்லாதவர்கள் போதனை செய்வதும் இல்லையே? இது ஏன்? துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை பின்பற்றுகிறோமோ?