வானவில் வண்ணமிட்ட கணத்தில்
பேரரசசி வருவது போல்
படிகளில் இறங்கி வந்தாய்
இதயம் மில்லிசெக்கனில்
துடிக்க மறந்தது.
என் முகத்தினில் படர்ந்திருந்த
நீர்த்துளிகள் காய மறுத்தன.
நீ எதிர் வந்தாய்,
புயல் அடித்தது.
நீ சிரித்தாய்,
மின்னல் வெட்டியது.
நீ கடந்து சென்றாய்,
இடி இடித்தது.
நீ தூரத்தில் மறைந்தாய்,
புயல் மழை ஓய்ந்தது.
போன பின்
எப்போதும் போல
கவிதை எழுதத்
தொடங்கின கைகள்.
கிறுக்கிப்
பிழைத்துக் கசக்கி எறிந்த
கடைசிக் காகிதத்துடன் நிரம்பிக்கொண்டது
குப்பைக் கூடை.